சினிமா

புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள்.. மனம் திறந்து பேசிய மனிஷா கொய்ராலா

Published

on

புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள்.. மனம் திறந்து பேசிய மனிஷா கொய்ராலா

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. இவர் தமிழில் இந்தியன், பாபா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர், புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள் குறித்து பேசியுள்ளார்.

” அனைவரும் அவரவரின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துங்கள். எனக்கு பெரிய குடும்ப இருக்கிறது, அனைவருமே வசதியானவர்கள். ஆனால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதும் அனைவரும் என்னிடம் இருந்து விலகி போனார்கள். நண்பர்களும் விலகினார்கள். யாருமே என்னை பார்க்க வரவில்லை” என கூறினார்.

மேலும் ” அனைவரும் பிரிந்து போனாலும் என் பெற்றோர், சகோதரர், சகோதரரின் மனைவி ஆகியோர் என்னுடன் இருந்தார்கள். புற்றுநோய் பாதித்தது போது எனக்கு பல விஷயங்கள் நடந்தது. நோய் பாதிப்புக்கு முன்பு இருந்தது போல் என்னால் இப்போது வேலை செய்ய முடியவில்லை. இப்போதும் நான் மன அழுத்தத்தோடு தான் வேலை பார்க்கிறேன்” என பேசினார்.

புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள் குறித்து குறித்து நடிகை மனிஷா கொய்ராலா பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version