சினிமா

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகிறாரா வெங்கடேஷ் பட்: வைரலாகும் அவரின் பதிவு

Published

on

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகிறாரா வெங்கடேஷ் பட்: வைரலாகும் அவரின் பதிவு

விஜய் தொலைக்காட்சியில் சீரியல்களை தாண்டி ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகிறது. ஒரு ஷோ முடிகிறதா உடனே அடுத்த புதிய ஷோ தயாராகிவிடும்.

அப்படி அடுத்தடுத்து வந்த நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

இதுவரை 4 சீசன்கள் ஒளிபரப்பாகிவிட்டது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி இந்த நிகழ்ச்சி படு பிரம்மாண்டமாக தொடங்கியது.

5வது சீசனில் எல்லாமே புதியது, இயக்குனர், தயாரிப்பாளர், நடுவர், கோமாளிகள் என நிறைய புதியது.

இந்த 5வது சீசன் தகவல் வந்ததும் ரசிகர்களுக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் நடுவராக இருந்து வந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.

அவர் வெளியேறியது குறித்து நிறைய பேர் பேசிவிட்டனர், ஆனால் அவர் சன் தொலைக்காட்சியில் ஒரு சமையல் நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில் ஒரு ரசிகர் சமூக வலைதளத்தில், குக் வித் கோமாளிக்கு வராமல் இங்க என்ன என்ஜாய் வேண்டி இருக்கு பட்டுக்குட்டி உங்களுக்கு? உங்க ஃபேன்ஸ் எல்லாம் உங்களை மிஸ் பண்ணிட்டு இருக்கோம். நீங்க என்ஜாய் பண்ணிட்டு இருக்கீங்களா? என பதிவிட்டுள்ளார்.

அதற்கு வெங்கடேஷ் பட், இரண்டு வாரத்தில் உங்களை எல்லாம் பார்க்க வருகிறேன் என பதிவிட்டுள்ளார். இதற்கு அர்த்தம் அவர் விரைவில் சன் டிவியின் புதிய ஷோவில் வருவதை தான் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version