சினிமா

43 வயதில் திருமணம் செய்துகொண்டது ஏன்: முதல்முறையாக ஓபனாக கூறிய சீரியல் நடிகை லாவண்யா தேவி

Published

on

43 வயதில் திருமணம் செய்துகொண்டது ஏன்: முதல்முறையாக ஓபனாக கூறிய சீரியல் நடிகை லாவண்யா தேவி

தமிழ் சினிமாவில் 1997ம் ஆண்டு வெளியான சூர்ய வம்சம் திரைப்படத்தில் சொப்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்து நாயகியாக அறிமுகமானவர் லாவண்யா தேவி.

இவர் படையப்பா, சங்கமம், ஜோடி, சேது, தெனாலி, சமுத்திரம், வில்லன், அலை, திருமலை, கஜேந்திரன், தங்கமகன் உட்பட பல பெரிய படங்களில் நடித்திருக்கிறார்.

2014ம் ஆண்டு கடைசியாக நடித்தவர் 10 வருடங்களுக்கு பிறகு இப்போது பகாசுரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலிலும் நடித்து வருகிறார்.

சின்னத்திரை, வெள்ளித்திரை என நடித்துவந்த லாவண்யா தனது 43வது வயதில் திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், 43 வயது வரை திருமணம் செய்யாததற்கு காரணம் என்னுடைய குடும்ப சூழ்நிலைதான்.

எனக்கு பெரிய அளவில் வருமானம் இல்லாததால் அடுத்தடுத்த வேலைகளிலேயே கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன் என்னுடைய குடும்பத்தினரும் எனக்கு சப்போர்ட்டாகவே தான் இருந்தார்கள்.

அந்த நேரத்தில் தான் நான் என்னுடைய கணவரை ஒரு திருமண பங்க்ஷனில் சந்தித்தேன். அப்படியே நட்பாகத் தொடங்கி காதலாக மாறி இப்போது கல்யாணத்தில் முடிந்தது என பேசியுள்ளார்.

Exit mobile version