சினிமா

சினிமாவில் நடிகராக களமிறங்குகிறாரா சூர்யாவின் மகன் தேவ்- ஜோதிகா சொன்ன தகவல்

Published

on

சினிமாவில் நடிகராக களமிறங்குகிறாரா சூர்யாவின் மகன் தேவ்- ஜோதிகா சொன்ன தகவல்

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நாயகியாக நடித்து கலக்கி வருபவர் நடிகை ஜோதிகா.

ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

சூர்யாவை திருமணம் செய்த பிறகு நடிக்க வராமல் இருந்த ஜோதிகா இப்போது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து வெற்றிகரமாக படங்கள் நடித்து வருகிறார்.

36 வயதினிலே, ராட்சசி, மகளிர் மட்டும், உடன்பிறப்பே என தமிழில் நடித்து வந்தவர் மலையாளத்தில் காதல் தி கோர், ஹிந்தியில் சைத்தான் என மற்ற மொழி படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஜோதிகாவிடம் உங்கள் மகன் தேவ் சினிமாவில் நடிப்பாரா என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், நிச்சயம் அவர் நடிக்க வாய்ப்பு இல்லை, எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

மகன், மகள் இருவருமே படிப்பின் மீது ஆர்வமாக இருக்கிறார்கள், ஒருவேளை படிப்பு முடித்து நடிக்க வேண்டும் என்று விரும்பினால் அது அவர்களின் விருப்பம் என கூறியுள்ளார்.

Exit mobile version