சினிமா

ராம் சரணை அவமானப்படுத்தினாரா ஷாருக்கான்.. அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றம்!!

Published

on

ராம் சரணை அவமானப்படுத்தினாரா ஷாருக்கான்.. அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றம்!!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் திருமணம் பிரமாண்டமாக நடந்து வருகிறது.

இந்த விழாவில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், ரஜினிகாந்த்,ராம் சரண் எனப் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு ஷாருக்கான் மற்றும் சல்மான் கானும் நடனமாடினார்கள். அப்போது ஷாருக்கான், இட்லி, வடை, சாம்பார்..மேடைக்கு வாருங்கள் என்று ராம் சரணை அழைத்துள்ளார்.

இந்த நிலைத்தியில் ராம் சரணின் ஒப்பனை கலைஞர் ஜெப ஹாசன், ” நடிகர் ஷாருக்கான் ராம் சரணை இட்லி, வடை, சாம்பார் என்று அழைத்தவிதம் எனக்கு பிடிக்கவில்லை. அது அவமரியாதையான செயல். அதனால் நான் சிறிது நேரம் கழித்து அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்துவிட்டேன். நான் ராம் சரணின் ரசிகன்” என்று பதிவிட்டு இருக்கின்றனர்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ராம் சரணின் ரசிகர்கள், நடிகர் ஷாருக்கானை திட்டி வருகின்றனர். சிலர் ஷாருக்கானுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Exit mobile version