சினிமா

எவ்வளவு கஷ்டப்பட்டு புல்லாங்குழல் வாசிக்கிறாரு.. நயன் பாட்டுக்கு முத்தம் கொடுக்குது..!

Published

on

எவ்வளவு கஷ்டப்பட்டு புல்லாங்குழல் வாசிக்கிறாரு.. நயன் பாட்டுக்கு முத்தம் கொடுக்குது..!

புல்லாங்குழல் கலைஞர் ஒருவர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கும் போது நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதோடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புல்லாங்குழல் கலைஞர் ஒருவர் வாசிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த கலைஞர் புல்லாங்குழல் வாசிப்பதை கேட்டதும் ஆச்சரியமடைந்த நயன்தாரா தனது கணவரை கட்டி அணைத்து முத்தம் கொடுக்கிறார்.

ஒரு பக்கம் புல்லாங்குழல் கலைஞர் சின்சியராக வாசித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் நயன்தாரா தனது கணவருக்கு முத்தம் கொடுத்து ரொமான்ஸ் செய்யும் காட்சியை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

ஒரு கலைஞர் கஷ்டப்பட்டு உயிரைக் கொடுத்து புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கும் போது இவர் ரொமான்ஸ் செய்தால் யார் அந்த கலைஞரின் கலையை ரசிப்பார்கள் என்றும் கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் ரொமான்ஸ் செய்யும் வீடியோவை பொது வெளியில் வெளியிட்டு இருக்கிறார்கள் என்றும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இருப்பினும் ஒரு சிலர் புல்லாங்குழல் இசையை கேட்டு ரசித்து தான் நயன்தாரா தன்னையும் அறியாமல் சந்தோஷத்தின் மிகுதியில் அவ்வாறு நடந்து கொண்டார் என்றும் கூறி வருகின்றனர். மொத்தத்தில் இந்த வீடியோ சர்ச்சைக்குரியதாக மாறி இருந்தாலும் பெரும் வரவேற்பை பெற்று ஏராளமான லைக்ஸ், கமெண்ட்களை குறித்து வருகிறது.

Exit mobile version