சினிமா

வெளிநாட்டில் பிரம்மாண்டமாக வீடு வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராய்.. புகைப்படங்களை பாருங்க

Published

on

வெளிநாட்டில் பிரம்மாண்டமாக வீடு வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராய்.. புகைப்படங்களை பாருங்க

உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழில் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதன்பின் பாலிவுட் பக்கம் சென்ற இவருக்கு, தொடர்ந்து இந்தியில் பட வாய்ப்புகள் குவித்தன. தமிழில் தொடர்ந்து நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது தலைகாட்டி, ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

ஜீன்ஸ், எந்திரன், பொன்னியின் செல்வன் என இவர் நடிக்கும் தமிழ் படங்கள் கண்டிப்பாக ஹிட்டாகிறது. பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு தற்போது ஆராத்யா எனும் ஒரு மகள் இருக்கிறார். விரைவில் அவரும் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் Sanctuary Falls, Jumeirah Golf Estates, துபாய்யில் வாங்கியுள்ள பிரம்மண்ட வீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த பிரம்மண்ட வீட்டின் விலை மட்டுமே ரூ. 60 கோடி என கூறப்படுகிறது.

Exit mobile version