சினிமா

யாரும் எதிர்பார்க்காத வகையில் பதில் கொடுத்த வடிவேலு: அம்மாவை நினைத்து கண்கலங்கிய தருணம்

Published

on

யாரும் எதிர்பார்க்காத வகையில் பதில் கொடுத்த வடிவேலு: அம்மாவை நினைத்து கண்கலங்கிய தருணம்

நடிகர் வடிவேலு தன்னுடைய அம்மா குறித்து பத்திரிகையாளரிடம் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை புயல் என்றால் அது வடிவேலு தான்.

இவர் நடிப்பில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன. திரைப்படங்கள் நினைத்த வெற்றியை தராவிட்டாலும் வடிவேலுவின் காமெடியை பார்ப்பதற்காவே சிலர் அந்த படங்களை பார்த்து வந்தனர்.

வடிவேலு சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்தில் டாப் நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து அரசியல் பயணத்தை ஆரம்பத்து சினிமாவிலிருந்து சுமார் 10 வருடங்கள் காணாமலேயே சென்று விட்டார்.

பின்னர், வடிவேலு நடிப்பில் சந்திரமுகி 2, மாமன்னன், நாய் சேகர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியன.

இந்த நிலையில், வடிவேலுவின் தாயார் இறந்து ஓராண்டு ஆனதையொட்டி ராமேஸ்வரத்தில் வடிவேலு மோட்ச தீபம் சாற்றினார்.

இதன்போது பத்திரிகையாளர்களிடம், “ என்னுடைய அம்மா என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஜனவரியில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.” என உருக்கமாக பேசியிருந்தார்.

இதனை தொடர்ந்து விஜயின் அரசியல் பயணம் குறித்து கேள்வியெழுப்பட்டது. அதற்கு அவருடைய ஸ்டைலில், “அவ்வளவுதான், வாங்க இங்கிட்டு.. போதும்” என்று பதிலளித்தார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

Exit mobile version