சினிமா

கணவரை பிரிந்தாரா இளையராஜா மகள் பவதாரிணி? உண்மையில் நடந்தது என்ன

Published

on

கணவரை பிரிந்தாரா இளையராஜா மகள் பவதாரிணி? உண்மையில் நடந்தது என்ன

இளையராஜா மகள் பவதாரிணி சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அவர் கணவர் சபரியிடம் இருந்து பிரிந்து விட்டதாக வெளியான தகவலுக்கு ஜெயந்தி கண்ணப்பன் பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார்.

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி(47) புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இந்நிலையில் பவதாரிணியும், அவரது கணவர் சபரியும் பிரிந்து விட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், ஜெயந்தி கண்ணப்பன் வாவ் தமிழா தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், பவதாரிணியும், சபரியும் உண்மையில் பிரியவில்லை. அவர்கள் ஆத்மார்த்தமான தம்பதிகளாகவே இருந்தனர். பவதாரிணி இலங்கைக்கு செல்லவே இல்லை என்றெல்லாம் செய்திகள் வெளியாகுகின்றன. இது உண்மையே இல்லை, இதற்கு அவர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற தேவையே இல்லை என்று ஜெயந்தி கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பவதாரிணியின் மறைவால் சபரி மிகப்பெரிய தூக்கத்தில் உள்ளார், அவர் அனைவரையும் மாதிரி வெளிப்படையாக அழுது தன்னுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்ட தெரியாதவர்.

பவதாரிணியின் இறப்பு செய்தியை கேட்டு சபரி அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டார். பவதாரணி திருமணம் ஆன பிறகு சபரியுடன் தான் இருந்தார், தம்பதி தேவையில்லாமல் இளையராஜா வீட்டிற்கு கூட வருவது இல்லை. சபரி ஒருபோதும் பவதாரிணியை விட்டுக் கொடுக்க மாட்டார்.

அவர்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என ஜெயந்தி கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பவதாரிணிக்கு நானும், அவரது அம்மாவும் தான் மாப்பிள்ளை தேடினோம், ஆனால் வருகின்ற வரன் எதுவும் பவதாரிணிக்கு பிடிக்கவில்லை.

அப்போது தான் செங்கல்பட்டு அருகே உள்ள கன்னி கோவிலுக்கு சென்று வந்தால் நல்ல வரன் அமையும் என தெரியவந்தது, உடனே இருவரும் அங்கு சென்று வந்தோம்.

அடுத்தவாரமே மதுரை சேர்ந்த சபரியின் வரன் அமைந்து, இருவருக்கும் திருமணம் முடிவானது, பவதாரிணி திருமணத்திற்காக ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியுடன் கூடி இருந்தது.

கடந்த 2005ம் ஆண்டு பவதாரணி, பத்திரிகை அதிபர் எஸ்.என்.ராமச்சந்திரன் மகன் சபரி ராஜை காதலித்து கரம் பிடித்ததாகவும் செய்திகள் உள்ளன என நேர்காணலில் ஜெயந்தி கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version