சினிமா

ஆண்டவரை வரம்பு மீறி கலாய்த்த போட்டியாளர்.. வீடியோ வெளியிட்டு வெளுத்து வாங்கும் பிக்பாஸ் ரசிகர்கள்!

Published

on

ஆண்டவரை வரம்பு மீறி கலாய்த்த போட்டியாளர்.. வீடியோ வெளியிட்டு வெளுத்து வாங்கும் பிக்பாஸ் ரசிகர்கள்!

ஆண்டவரை வரம்பு மீறி கலாய்த்த பூர்ணிமாவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரங்களில் பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்பப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த வாரம் வையில்ட் கார்ட்டில் பிரதீப் மற்றும் இரண்டு போட்டியாளர்களை உள்ளே எடுப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது.

இப்படியொரு இக்கட்டான நிலையில் பூர்ணிமா, கடந்த வாரம் கமல் கலாய்த்த விடயத்தை விக்ரமனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வீடியோக்காட்சியை வெளியிட்ட இணையவாசிகள் அவர் “குடிக்கார அங்கிள்” என கூறியதை தனியாக கட் செய்து ட்ரோல் செய்து வருகின்றார்கள்.

தொடர்ந்து பூர்ணிமா சில வார்த்தைகளை பகிர்ந்து வருவதால் மக்களால் அதிகமாக வெறுக்கப்பட்டு வருகிறார்.

இவர் நாமினேஷனுக்கு வரும் பொழுது கண்டிப்பாக அந்த வாரம் வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் எதிர் பார்த்து வருகின்றார்கள்.

Exit mobile version