சினிமா
சூர்யா ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி
பாண்டிராஜ் எழுதி இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இத் திரைப்படம் இந்திய தமிழ் அதிரடி நாடக திரைப்படமாகும்.
இந்தப் படத்தில் சூர்யா , சூரி, வினை ராய், பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இன்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள காணொலி ஒன்றில் எதற்கும் துணிந்தவன் தொடர்பான புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.
அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இப்படம் வெளியிடப்படும் கூறப்பட்டிருந்தது.
அத்தோடு காணொலியை சூர்யாவின் ஜாலியான காட்சிகளும், திர்லர் காட்சிகளும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அப்டேட் வெளிவந்த அடுத்த நிமிடம் சூர்யா ரசிகர்கள் தமது ஆராவாரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login