சினிமா

பணத்திற்காக பண்ணுறாரா, மனநிலை சரியில்லையா.. பயில்வானுக்கு பதிலடி கொடுத்த வெங்கடேஷ் பட்

Published

on

பணத்திற்காக பண்ணுறாரா, மனநிலை சரியில்லையா.. பயில்வானுக்கு பதிலடி கொடுத்த வெங்கடேஷ் பட்

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நான்கு வருடங்கள் நடுவராக இருந்தவர் வெங்கடேஷ் பட். அந்த நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் டிவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், வெங்கடேஷ் பட்டும் அதில் இருந்து விலகிவிட்டார்.

அதன் பிறகு அதே நிறுவனம் மூலமாக சன் டிவியின் டாப் குக் டூப் குக் என்ற ஷோவை வெங்கடேஷ் பட் நடத்தினார். அது சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.

பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வெங்கடேஷ் பட் பற்றி அவதூறாக பேசி இருக்கிறாராம். அவர் பல கோடி சம்பளமாக கேட்டார் என்றும், அதற்கு விஜய் டிவி ஒத்து கொள்ளாததால் தான் சன் டிவிக்கு சென்றுவிட்டார் என்றும் பயில்வான் பேசி இருந்தார்.

அதற்கு வெங்கடேஷ் பட் பதிலடி கொடுத்து தற்போது வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

“பயில்வான் ரங்கநாதன் என்னை பற்றி தரக்குறைவாக வீடியோ போட்டிருக்கிறார். அவரை எல்லோரும் கமெண்டில் திட்டுகிறீர்கள். ”

“தயவு செய்து திட்டி மெசேஜ் போடாதீங்க. அவர் நிலைமை என்ன என்பது தெரியவில்லை. பாவம் அவர் பணத்திற்காக பண்ணுறாரா, மனநிலை சரியில்லையா என தெரியவில்லை. அவர் ஏதோ பொழப்புக்காக பண்ணுறாரு. அதை பண்ணிட்டு போகட்டும்.”

“அந்த சாணியில் நாம் கல் எறிந்து, அந்த சாணி நம் முகத்தில் வீச வேண்டாம் என பார்க்கிறேன். உண்மை இல்லாமல் செய்யும் பல விஷயங்கள் சோசியல் மீடியாவில் வலம்வந்துகொண்டிருக்கிறது. இன்று என்னை பற்றி வந்திருக்கிறது. பொதுவாழ்க்கையில் இது ரொம்ப சாதாரணம்” என வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார்.

Exit mobile version