சினிமா

உலகப் பட்டினி தினத்தில் விஜய் எடுத்த முக்கிய முடிவு!! என்ன தெரியுமா?

Published

on

உலகப் பட்டினி தினத்தில் விஜய் எடுத்த முக்கிய முடிவு!! என்ன தெரியுமா?

உணவு பாதுகாப்பை மற்றும் , ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரிசெய்ய வலியுறுத்தி மே 28 -ம் தேதி உலகப் பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த தினத்தில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதாக கூறியுள்ளனர்.

இது தொடர்பான அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகப் பட்டினி தினமான, வருகிற 28.05.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மாவட்ட, அணி, நகரம், ஒன்றியம், கிளை, மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

Exit mobile version