சினிமா

அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா யாஷிகா ஆனந்த்

Published

on

அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா யாஷிகா ஆனந்த்

ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த்.

இதையடுத்து இரண்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

சில வருடங்களுக்கு முன்பு யாஷிகா, ECR ரோட்டில் அதிவேகமாக காரில் சென்று விபத்து ஏற்படுத்தினார். சம்பா இடத்தில் அவரது தோழி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்திலிருந்து மீண்ட யாஷிகா, பகீரா மற்றும் சில நொடிகளில், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது போன்ற படங்களில் நடித்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக வலம் வரும் யாஷிகா ஆனந்த், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் பதிவிட்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் பதிவிட்ட புகைப்படத்திற்கு கமெண்ட் செய்த ஒருவர், யாஷிகா ஆனந்த் விபத்து பிறகு அழகாக இருக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த யாஷிகா, அழகுக்காக நான் எந்த பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்யவில்லை என்று பதில் அளித்துள்ளார்.

Exit mobile version