சினிமா

சந்தானம் 10 லட்சம் கொடுத்திருந்தா.. லொள்ளு சபா சேஷு மரணம் பற்றி கொந்தளித்த நடிகர்

Published

on

சந்தானம் 10 லட்சம் கொடுத்திருந்தா.. லொள்ளு சபா சேஷு மரணம் பற்றி கொந்தளித்த நடிகர்

லொள்ளு சபா நிகழ்ச்சி புகழ் நடிகர் சேஷு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் சக நடிகர்கள் உதவி கேட்டனர். ஆனால் யாரும் பெரிய அளவில் உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது.

நடிகர் சேஷு கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதி சடங்கில் சந்தானம் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

சேஷுவுக்கு 10 லட்சம் ருபாய் இருந்து ஆபரேஷன் செய்திருந்தால் உயிர்பிழைத்து இருப்பார். அவர் பல பெரிய நடிகர்கள் உடன் நடித்து இருக்கிறார்.

சந்தானம் உதவி செய்திருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் இறந்தபிறகு வந்து மாலை போட்டு, சோகமாக பேட்டி கொடுத்து, அடக்கம் செய்யும் வரை அருகில் நின்றுவிட்டு போனால் என்ன பிரயோஜனம் என பிரபல காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் கோபமாக பேட்டி கொடுத்து இருக்கிறார்.

என்னை போன்றவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெரிய தொகை தான், ஆனால் பெரிய ஆட்கள் 10 லட்சம் கொடுத்து இருக்கலாம் என்றும் அவர் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.

Exit mobile version