சினிமா

தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் சொத்து மதிப்பு!!

Published

on

தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் சொத்து மதிப்பு!!

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஸ்டார் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். சூப்பர் சிங்கர், அது இது எது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தான் தனது திரை பயணத்தை துவங்கினார்.

இடையில் சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால், அவை யாவும் இவருக்கு பெரிதளவில் கைகொடுக்கவில்லை. சூசன் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்ட மாகாபா ஆனந்திற்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் இவர் தற்போது சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியை பிரியங்காவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் அது இது எது புதிய துவங்கியுள்ளது. அதையும் மாகாபா தான் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள மாகாபா ஆனந்த் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, விஜய் டிவியின் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் தொகுப்பாளர் மாகாபாவின் சொத்து மதிப்பு ரூ. 30 கோடி முதல் ரூ. 40 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

மேலும் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version