சினிமா

தனக்கு பல வெற்றிகளை கொடுத்த இயக்குனரிடம் கோபப்பட்ட அஜித்

Published

on

தனக்கு பல வெற்றிகளை கொடுத்த இயக்குனரிடம் கோபப்பட்ட அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

அஜித்தின் திரை வாழ்க்கையில் பல ஹிட் கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் சரண். காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் மற்றும் அசல் என இதுவரை அஜித்தின் நான்கு படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனர் சரண் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று வட்டாரம். இப்படம் வெளிவந்த சமயத்தில் பெரிதளவில் ஓடவில்லை என்றாலும், தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படமாக மாறியுள்ளது.

இப்படத்தை எடுத்து முடித்தபின் அஜித்திற்கு போட்டு காட்டியுள்ளாராம் இயக்குனர் சரண். படத்தை பார்த்து முடித்தபின், இந்த கதையை என்னிடம் சொல்லியிருந்தால் நான் நடித்திருப்பேனே, ஏன் என்னிடம் சொல்லவில்லை என இயக்குனர் சரணிடம் கோபப்பட்டாராம்.

ஆனால், வட்டாரம் திரைப்படத்தில் ஆர்யா போன்ற வளர்ந்து வரும் ஹீரோ நடித்தால் தான் சரியாக இருக்கும் என அஜித்திடம் கூறினாராம் சரண். இந்த தகவலை இயக்குனர் சரண் சமீபத்தில் பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Exit mobile version