சினிமா

காதலித்த பெண்ணை வேறொரு ஆண் உடன் பார்த்த சிவகார்த்திகேயன்

Published

on

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்கள் மீதமுள்ள நிலையில், அதற்குள் தன்னுடைய எஸ்கே 23வது படத்தின் படப்பிடிப்பையும் துவங்கிய சிவா.

தற்போது எஸ்கே 23 படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் அமரன் படப்பிடிப்பில் இணையவுள்ளார். 30 நாட்கள் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, பின் மீண்டும் எஸ்கே 23ல் இணைவார் என கூறப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் தனது ஒருதலை காதல் குறித்து பேசியிருந்தார்.

இதில் “கல்லூரியில் படிக்கும்போது ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தேன். ஆனால் நான் காதலித்து பெண் வேறொரு நபருடன் கமிட் ஆகிவிட்டார். அதனால் அந்த காதல் அப்படியே போய்விட்டது”.

“நான் சென்னையில் தொலைக்காட்சிக்கு வந்த பிறகு, அந்த பெண்ணை ஒரு முறை பார்த்தேன். அவருடன் வேறொரு நபர் ஒருவர் வந்திருந்தார். ஆனா கூட வந்திருந்தது அந்த பெண் காதலித்த பண்ண பையன் இல்ல” என கலகலப்பாக பேசியிருந்தார்.

Exit mobile version