சினிமா

ரவுடிகளிடன் தெருவில் அடிவாங்கிய விஜய்யின் நண்பர் சஞ்சீவ்

Published

on

ரவுடிகளிடன் தெருவில் அடிவாங்கிய விஜய்யின் நண்பர் சஞ்சீவ்

சின்னத்திரையில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ஸ்ரீ குமார் மற்றும் சஞ்சீவ். இவர்கள் இருவருமே நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். சஞ்சீவ் நடிகர் விஜய்க்கும் நெருங்கிய நண்பர் என்பதை நாம் அறிவோம்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வானதைப்போல சீரியலில் சஞ்சீவ் மற்றும் ஸ்ரீ குமார் இணைந்து நடித்து வருகிறார்கள். மேலும் விரைவில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள லட்சுமி எனும் சீரியலில் சஞ்சீவ் ஹீரோவாக களமிறங்கவுள்ளார்.

இந்த நிலையில், ஒரு முறை ரவுடிகள் சிலர் நடிகர் ஸ்ரீ குமாரிடம் சண்டை போட்டுள்ளனர். அப்போது ஸ்ரீ குமாரின் கையில் கத்தியால் வெட்டியுள்ளனர். இதன்பின் சஞ்சீவ் அந்த இடத்திற்கு வந்து ஸ்ரீ குமாருக்கு மருத்துவமனைக்கு அழைத்து சேடணறு உதவியுள்ளார். காவல் நிலையத்தில் புகார் எல்லாம் கூட கொடுத்துவிட்டார்களாம்.

ஆனால், இதன்பின் அந்த ரவுடி கும்பல் ஸ்ரீ குமாருக்கு பதிலாக சஞ்சீவை மடக்கியுள்ளனர். அப்போது அந்த ரவுடிகளிடம் செம அடி வாங்கினாராம் சஞ்சீவ். இந்த விஷயத்தை ஸ்ரீ குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Exit mobile version