இந்தியா

பவதாரணியை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா

Published

on

பவதாரணியை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உடல் நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் சற்று முன்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், தேனியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பவதாரணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த இயக்குனர் பாரதிராஜா கதறி அழுதமை பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது.

அதேசமயம், தனது மகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இளையராஜா மனம் நொந்து கண்ணீர் மல்க தனது மகளையே உற்று நோக்கிக் கொண்டிருந்த காட்சி அங்கிருந்தவர்களையும் உருக்குலையச் செய்தது.

தனது மகள் மீது அதீத காதல் கொண்ட இளையராஜாவுக்கு இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளும் திடம் கிடைக்க வேண்டும் என திரைப் பிரபலங்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.

இறுதியாக, இசைஞானி வீட்டு இளம் குயில், அவர்களின் குடும்பத்தினரால் மயில் போல பொண்ணு ஒன்னு… என்ற பவதாரணியின் பாடலை பாடிய வண்ணமே பவதாரணிக்கு மனம் நொந்து விடை கொடுத்தனர்..

Exit mobile version