சினிமா

கலங்கிய யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு- விஜய் செய்த செயல்

Published

on

கலங்கிய யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு- விஜய் செய்த செயல்

நடிகர் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தின் படப்பிடிப்பு சென்னை மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகிறது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த பிளான் செய்திருந்தார் வெங்கட் பிரபு. படப்பிடிப்பு இடங்களை பார்வையிட ஏற்கெனவே வெங்கட் பிரபு இலங்கை சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனிடையே GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் விரைவில் வெளியாகும் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில் தான் இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று இலங்கையில் உயிரிழந்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த செய்தி கேட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

பவதாரிணி மரணத்தால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு மிகவும் கலங்கியுள்ளனர்.

இதனால் விஜய் தனது கோட் பட படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதோடு ஃபஸ்ட் சிங்கிள் உள்ளிட்ட சில அப்டேட்டுகளும் கொஞ்சம் தாமதமாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version