சினிமா

விசித்திராவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தினேஷ்

Published

on

விசித்திராவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தினேஷ்

பிக்பாஸ் சீசன் 7 போட்டியானது நிறைவடைந்த நிலையில், வீட்டுக்குள் இருக்கும்போது எலியும் பூனையுமாக சண்டை பிடித்துக்கொண்டனர் தினேஷ் – விசித்திரா.

இதனிடையே தினேஷ், விசித்திராவுக்கு சர்ப்ரைஸாக வீடியோ கால் எடுத்து பேசியுள்ளார்.

“நாங்கள் வீட்டுக்குள் இருக்கும்பொழுது சண்டை பிடித்துக்கொண்டோம். ஆனால், வெளியே அப்படி இருக்கவேண்டியது இல்லை. வெளியில் எல்லோரையும் சென்று சந்திக்கப் போகிறேன். சந்தோஷமாக இருக்கப் போகிறேன். வீட்டுக்குள் இருக்கும்பொழுது உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்” எனக் கூறியிருக்கிறார்.

அதற்கு விசித்திராவும்,“உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசியதற்கு மன்னிக்கவும்” எனக் கூறியுள்ளார்.

விரைவில் இருவரும் நேரில் சந்திப்பார்கள் என கூறப்படுகிறது.

Exit mobile version