சினிமா
சினிமாவில் நுழையும் பிரபல கிரிக்கெட் வீரர்! யார் தெரியுமா?
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தற்போது திரைப்பட உலகில் நுழைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ‘தோனி என்டர்டைன்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இவரது தயாரிப்பில் ‘ரோர் ஆப்தி லையன்’ என்ற ஆவண படம் மற்றும் 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு ஆவணப்படம் ஒன்றையும் புராணத்தை அடிப்டையாகக் கொண்டு திரில்லர் படம் ஒன்றையும் தோனி பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில் தோனி, தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் படங்கள் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
You must be logged in to post a comment Login