சினிமா
ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம்! வைரலாகும் புகைப்படம்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விக்ரம் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.
விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் விக்ரம் வீட்டில் பணியாற்றி வருகிறார்.
இவர்களது மகனான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக் – வர்ஷினியின் திருமணத்தில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
மேலும், விக்ரமின் ரசிகர்களும், ரசிகர்மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
You must be logged in to post a comment Login