சினிமா
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கே ஜி எஃப் யாஷ் நடிக்க போகிறாரா?
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கே ஜி எஃப் யாஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்போது இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த படத்தில் நடிக்க உள்ளது கே ஜி எஃப் நடிகர் யாஷ்தான் என்று இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெட்பிளிக்ஸ் நிறுவனம், பென் மீடியா உள்ளிட்ட சில நிறுவனங்கள் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும் இத்தகவல் இன்னும் உறுதி செய்யப்பட்வில்லை.
You must be logged in to post a comment Login