செய்திகள்
இன்று உலக வறுமை ஒழிப்புத் தினமாகும்!
உலக வறுமை ஒழிப்புத் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.
வறுமை ஒழிப்புத் தினத்தின் கருப்பொருளாக, ‘ஒன்றாக முன்னேறுதல், தொடர்ந்து கொண்டிருக்கும் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருதல், நமது கிரகத்தையும் அனைத்து மக்களையும் மதித்தல்’ காணப்படுகின்றது.
வறுமையை ஒழிக்கவும் வறுமையில் வாழும் மக்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 1992 டிசம்பர் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை, ஒக்டோபர் 17 ஐ உலக வறுமை ஒழிப்பு நாளாக அறிவித்திருந்தது.
உலக வங்கியின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில் உலகை தாக்கிய கொரோனா 8 முதல் 11 கோடி மக்களை வறுமைக்கு தள்ளியுள்ளதுடன்,தெற்காசிய மற்றும் சஹாரா நாடுகளில் புதிய ஏழைகள் பெரும்பான்மையினர் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 14 முதல் 16 கோடி ஆக அதிகரித்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ், ‘தற்போது தீவிர வறுமை அதிகரித்து வருகிறது, கொரோனா உலகில் உள்ள நாடுகளின் பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது உலகின் வடக்கு மற்றும் தெற்கிற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை மேலும் ஆழமாக்கியுள்ளது’ என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login