அழகுக் குறிப்புகள்
முடியை கரு கருனு வைச்சிருக்க வேண்டுமா? இதோ சிறந்த எளிய வழிகள்
பொதுவாக பல பெண்களுக்கு கரு கருனு முடி இருக்க வேண்டும் என்ற ஆசை காணப்படும்.
அதற்காக பலர் கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவண்டு. ஆனால் இது சில நேரங்களில் பக்கவிளைவுகளையே ஏற்படுத்தக்கூடும்.
எவ்வித பக்கவிளைவுகளுமின்றி எப்படி முடியினை கரு கருனு வளர செய்யலாம் என்பதை பாரப்போம்.
- நெல்லிக்காய் பவுடரில் எலுமிச்சை சாற்றினை கலந்து தலையில் சிறிது நேரம் ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி சிறிது காலம் செய்து வந்தால் சிறந்த பலனை பெறலாம்.
- தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாற்றினை கலந்து தலையில் நன்கு ஊறவைத்து பின்பு ஷாம்போ கொண்டு அலச வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை செய்து வந்தால் சிறந்த பலனை அடையலாம்.
- வெங்காய சாற்றினை தலையில் உற வைத்து பின்பு ஷாம்போ கொண்டு கழுவ வேண்டும். இது தலையில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் போஷாக்கினையும் வழங்குகின்றது. இதனை தினமும் செய்தால் தான் சிறந்த பலனை பெற முடியும்.
- கறிவேப்பிலையை உலர வைத்து பொடியாக்கி தலையில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால் இளநரை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
- தலைக்கு வைக்கும் எண்ணெய்யில் கறிவேப்பிலை இலை அல்லது விதையை ஊறவைத்து தினமும் தலைக்கு வைத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உணவில் அதிகளவு கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். கறிவேப்பிலையை உணவில் சேர்த்து சாப்பிடுவது சிறந்த பலனை கொடுக்கும்.
You must be logged in to post a comment Login