சினிமா
திருமணத்தில் இணைகிறது பிரபல காதல் ஜோடி!
பாலிவூட் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட்.
பாலிவூட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான இவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். இந்த தகவலை ஆலியா பட் உறவினர் ராபின் பட் உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் 13 ஆம் திகதி திருமண சடங்குகள் ஆரம்பமாகும். தொடர்ந்து 14 ஆம் திகதி திருமணம் நடைபெறும். தொடர்ந்து 16 ஆம் திகதி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு பாலிவூட் பிரபலங்கள் உட்பட 450 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம் செம்பூர் ஆர்.கே.பங்களாவில் நடைபெறவுள்ளது. இது ரன்பீர் கபூர் பெற்றோரான ரிஷி கபூர்-நீது கபூருக்கு திருமணம் நடந்த பங்களா என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்தை முடித்துக்கொண்டு இந்த ஜோடி தேனிலவுக்கு தென்னாபிரிக்கா பறக்க திட்டமிட்டுள்ளது என தகவல்கள் கசிந்துள்ளன.
You must be logged in to post a comment Login