பொழுதுபோக்கு
பிரபல நடிகை கடத்தல்!
நடிகை சஞ்சனா கல்ராணி மீது டாக்ஸி ரைவர் புகார் அளித்துள்ளார்.
நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாகயுள்ளார்.
சென்ற வருடம் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்திருந்தார்.
அண்மையில் நடிகை சஞ்சனா, பெங்களூரில் டாக்ஸியில் படப்பிடிப்பிற்கு கலந்துகொள்ள சென்றுள்ளார்.
அப்போது காரில் ஏ.சி போடும் விவகாரம் தொடர்பாக சாரதிக்குும், சஞ்சனாவிற்கும் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. சாரதியை சஞ்சனா தகாத வாத்தையில் திட்டியுள்ளார்.
இதனையடுத்து நடிகை சஞ்சனாவின் மீது சாரதி மணி , ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள பொலிஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். திட்டும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களையும் பொலிஸிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் நடிகை சஞ்சனா, ராஜராஜேஸ்வரி நகருக்கு வாடகைக் காரில் சென்றேன். எனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இல்லை. என்னிடம் பணம் இல்லாததால் டாக்ஸியில் சென்றேன்.
ராஜராஜேஸ்வரி நகருக்கு செல்வதற்கு பதில் கெங்கேரி நோக்கி கார் சென்றது.
என்னை கடத்தி செல்வதாக நினைத்து சாரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். ஆனால் அவரை தகாத வார்த்தையில் திட்டவில்லை. நான் தவறேதும் செய்யவில்லை.
மேக்கப் போடாததால் என்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. அதனால் ஓட்டுநருக்கு நான் நடிகை என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தவறான பாதையில் சென்றதால் நான் கண்டித்தேன்.
அதனால் அவர் பொலிஸ் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். நான் நடிகை என்ற காரணத்தால் இந்த விவகாரம் பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
You must be logged in to post a comment Login