உலகை தன் கட்டுப்பாட்டிக்குள் கொண்டுவர, கொரோனா கிருமிகளின் தொற்று அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா தொற்றளர்களின் எண்ணிக்கை 24.36 கோடியைக் கடந்த நிலையில் சாவடைந்தோரின் எண்ணிக்கை 49.52 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் தோற்றுவிக்கப்படட கொரோனா...
நேபாளம் நாட்டில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சாவடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் தடைப்பட்ட நிலையில் நேபாள மக்களின் இயல்பு...
அமெரிக்காவில் படப்பிடிப்பின் போது எதிர்பாராதவிதாக படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்துள்ளார். ஹொலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’ படத்தின் படப்பிடிப்புகள்...
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து செல்லும் நிலையில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் நூற்றுக்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தொற்று...
டொமினிகா மழைக்காடுகளின் ஒரு பகுதியை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது மிகப்பெரிய பாம்பை கண்டு அதிர்ந்து போனார்கள். உலகின் மிகப்பெரிய பாம்பு என கூறப்படும் அது 10 அடிக்கும் அதிகமான நீளம் கொண்டதாக உள்ளது....
மெக்சிகோவில் போதைக்கும்பல்களிடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர். உலகில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையின் பிரதான இடமாக விளங்கும் மெக்சிக்கோவில், நாளாந்தம் போதைக்கும்பல்களிடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் வியாபாரப் போட்டி காரணமாக போதைக்கும்பல்களிடையே நேற்று...
பாகிஸ்தான் பயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கையில் தோல்வியடைந்துள்ள நிலையில், கிரே பட்டியலில் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது. எப்.ஏ.டி.எப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதைத் தடுத்து நடவடிக்கை எடுப்பதற்கான கண்காணிப்பு அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள...
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமொன்றில், நால்வர் உயிரிழந்துள்ளனர். வாசிங்டன் மாநிலத்திலுள்ள தகோமா என்னும் இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகோமாவிலுள்ள வீடொன்றில் திடீரென இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், இரு பெண்கள் உள்ளடங்கலாக மூவர் உயிரிழந்துள்ளனர்....
கொரோனாவின் தாக்கம் காரணமாக ஊழியர்களுக்கு ஒருவாரத்துக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்குவதாக ரஷ்ய அறிவித்துள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36, 339 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,063 பேர் சாவடைந்தும் உள்ளனர். ரஷ்யாவில் நாளுக்கு...
சா்வதேச நிதியத்தின் தலைமை பொறுப்பிலிருந்து கீதா கோபிநாத் விலகுவர் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கீதா கோபிநாத் சா்வதேச நிதியத்தின் முதல் பெண் தலைமை ஆலோசர் என்ற பதவியிலிருந்து விலகுவதாக சர்வதேச ஊடகங்கள்...
பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி பங்கேற்காமைக்கான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படாத போதும், காலநிலை...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப தனக்கென, சமூகவலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். தனது டிரம்ப் மீடியாரூ டெக்னாலஜி குரூப் நிறுவனம் சார்பில் ‘ ட்ரூத் சோஷியல்’ என்ற வலைதளத்தை டிரம்ப் இன்று ஆரம்பித்து வைத்தார். இந்த சமூக...
மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகத்தை வெற்றிகரமா அமெரிக்க மருத்துவர்கள் பொறுத்தியுள்ளார்கள். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவக் குழுவினர் பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக மாற்றம் செய்து சாதனை படைத்துள்ளனர். அத்தோடு பன்றி ஒன்றின் சிறுநீரகம், மனிதனின் நோய்...
பிரித்தானியாவில் 49 ஆயிரம் பேர் ஒரே நாளில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தற்போது அங்கு அதிக குளிரான காலநிலை நிலவி வருவதால், கொரோனாத் தொற்று உயர்வடைந்துள்ளது. அண்மித்த நாட்களில் அந்நாட்டில் கொரோனாத் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும்...
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட, இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தை மேற்கோள்காட்டி இச்செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் இராணுவம், ‘கடந்த 16ஆம்...
ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுதாரிகளின் குடும்பத்தினருக்கு தலிபான்களால் பரிசில்கள் வழங்கப்பட்டு வருகிற நடவடிக்கை சர்வதேச அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தயுள்ளது. ஆப்கானின் படைகள் மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக மேற்கொண்ட தற்கொலைக்குண்டுதாரிகளின் குடும்பத்தினதினரை ஊக்குவிக்கும் முகமாக தலிபான்ககளால் பரிசில்கள்...
வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறமை அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 20 இந்துக்கள் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. தலைநகரம் டாக்காவில் இருந்து 255 கி.மீட்டர் தூரத்தில் பிர் காஞ்ச் உபசிலா...
ரஷியாவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷியாவில் புதிதாக 33,740 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் மேலும் நேற்று மட்டும் 1,015 பேர் கொரோனாவால் சாவடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ரஷியாவில் கொரோனாவால் பாதிக்கப்படடவர்களின்...
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வலைத்தளத்தளம் முடக்கப்பட்டுள்ளது. துருக்கியைச் சேர்ந்த ஹேக்கர்கள் சிலர், டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தை முடக்கியுள்ளனர். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வலைத்தளத்தை இயக்க முற்பட்டபோது, துருக்கியைச் சேர்ந்த...
நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், 43 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியா சகோடா மாகாணத்தில் இன்று இத்துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாத நபர்களால் இத் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நைஜீரியாவில் தீவிரவாத தாக்குதல்களும், ஆட் கடத்தலும் அதிகரித்து...