பொருட்கள் விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி திருட்டு துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மூளாய் வேரம் அக்கினி வைரவர்...
நாட்டில் எரிபொருள் வரிசை நாளுக்கு நாள் நீள்கிறது. மறுபுறத்தில் வரிசைகளில் காத்திருப்பவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் பதிவாகிவரும் நிலையில், மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார். பயாகல பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த 60 வயதுடைய நபரொருவரே திடீர்...
தென்னைமரத்திலிருந்து தவறி வீழ்ந்த முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புலோலி மத்தியைச் சேர்ந்த ஆறுமுகம் நவரட்ணம் (வயது-65) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். கடந்த ஜூலை முதலாம் திகதி வெள்ளிக்கிழமை தென்னைமரத்துக்கு ஏணி...
யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் முதியவரின் சடலமொன்று இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காக சென்றபோது சடலமொன்று மிதப்பது இனங்காணப்பட்டு பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டது. இதனையடுத்து தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். சடலத்தை பார்வையிட்ட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...
யாழ்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் செல்வச்சந்திரன் சிறிமன் கலப்பு வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் மோட்டார் பொருத்தியும், மீள் சுழற்சி பொருட்களை பயன்படுத்தியும் அதனை கண்டு...
மண்ணெண்ணெய் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடற்றொழில் துறையினர் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்....
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சு பதவியை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்.” – என்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா இன்று வலியுறுத்தினார். டொலர்களை உள்ளீர்ப்பதற்கான உரிய வேலைத்திட்டம் ரணிலிடம் இல்லை எனவும்,...
ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் பொலிஸ் பஸ்ஸில் ஏற்றப்பட்டு, பொலிஸ் நிலையம் அழைத்துச்செல்லப்படுகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி...
அரசியலமைப்பிற்கான 22ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 19 ஐ விடவும் 22 இல் சிறப்பான ஏற்பாடுகள் உள்ளன – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்....
பஸில் ராஜபக்சவை பாதுகாக்க முற்பட்டவர்களே அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்க்கின்றனர் – என்று விமல் வீரசன்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் முழுமையாக...
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலுள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமானின் புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று 6ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றது. இதற்கான கிரியைகள் அனைத்தும் கடந்த 1ஆம் திகதி...
தொண்டமனாறு பகுதியில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த...
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகள் அதனை மேலும் உக்கிரமடைய செய்வதாகவே அமைந்துள்ளது என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். நாட்டில் ஐந்து விடயங்களை வைத்தே ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள 225...
நாட்டின் ஆட்சியாளர்கள் கடந்த 03 ஆண்டுகளில் மற்றவர்கள் சொல்வதைக் காதில் வாங்காமல், தாங்கள் மட்டும் தான் சரியென்று எண்ணிச் செயற்பட்டமையால் நாடு தற்போது அதள பாதாளத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இதிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து சமூக,பொருளாதார மற்றும்...
சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்காக எதிரணிகளை ஓரணியில் திரட்டி – பொது நிலைப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்புடனேயே இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று...
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும்.” – என்று கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ”...
பயங்கரவாத தடைச்சட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே அரசால் கரும்புலி தாக்குதல் கதை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது – என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை...
இலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவையை பலப்படுத்தி, மக்கள் அதனை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” இலங்கைக்கு இறக்குமதி...
தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கையின் வடக்கு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,...
நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள் தொகை ராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. பூநகரி வெட்டக்காடு பகுதியில் நேற்று இரவு குறித்த மஞ்சள் தொகை மீட்கப்பட்டது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத்...