நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 27 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூறப்பட்டது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள்...
அமைச்சர் பந்துல குணவர்தன, தான் வகித்து வந்த அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகுவதாகவும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாகவும் அவர் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை ஏற்கனவே மொட்டு...
பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை ஏற்க தான் தயார் என ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையிலேயே, இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மலையகத்தில் பல பகுதிகளிலும் இன்று போராட்டங்களும், பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன. நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. தற்போதைய நிலைக்கு பிரதமரும் பொறுப்பு...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவசர கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதேவேளை, நாடாளுமன்றம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட தான் தயார்...
கொழும்பு துறைமுகத்திலிருந்து இரண்டு கப்பல்கள் முக்கியமான சிலருடன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கடற்படையினருக்கு சொந்தமான கஜபாகு, சித்துரெல்ல ஆகிய இரண்டு கப்பல்கள் அவசரமாக கொழும்பு துறைமுகத்திலிருந்து பொதிகளுடன் புறப்பட்டுள்ளன. குறித்த கப்பல்களில் சிலர் பொதிகளுடன் அவசர...
நாட்டில் அரசை பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிலையில், நிலைமை தொடர்பில் கலந்துரையாடி தீர்மானத்தை எடுப்பதற்காக, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அவசரமாகக் நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன்,...
கொழும்பில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு இராணுவ சிப்பாய் ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்துள்ளார். கோட்டாபயவுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் நிலைநிறுத்தப்பட்டிருந்த சிறப்பு அதிரடி படையை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் மக்கள் போராட்டத்தில்...
” உடன் பதவி விலகி, கௌரவமாக விடைபெறுங்கள்.” – இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா உட்பட மொட்டு கட்சியின் 16...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்கட்ட சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். #SriLankaNews
ஜனாதிபதி மாளிகை, போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். எனினும், வீதித்தடைகளை உடைத்து, போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றனர். இதன்போது ஏற்பட்ட பதற்ற நிலையில் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்துக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர், அதிரடியாக சினிமா பாணியில் ஆதரவு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸ் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த,...
கொழும்பு, கோட்டை செத்தம் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மீண்டும் இரண்டாவது தடவையாக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடுவதற்கு...
கடந்த இரண்டு வருடங்களில் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக மாத்திரம் செலவிடப்பட்ட தொகை 44 ஆயிரத்து 300 கோடி ரூபா என நிதியமைச்சு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது. 2021ஆம் ஆண்டு அதற்கான செலவு இருபத்தொராயிரத்து முந்நூறு...
ஸ்ரீலங்கன் விமான சேவைகளுக்கு இந்திய அரசுக்கு சொந்தமான, பாரத் பெற்றோலியம் நிறுவனம் எரிபொருள் நிரப்புவதாக தெரிவித்துள்ளது. பாரத் பெற்றோலிய நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அதற்கமைய இலங்கையின் சுமார் 100 விமானங்களுக்கு இதுவரை,...
இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க இடமளிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு, போராட்டங்களை நிதானமாக பொலிஸார்...
ஜனாதிபதி கோட்டாப ராஜபக்சவும், பிரதமர் உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் இடம்பெறும் போராட்டத்துக்கு பேராதரவு பெருகிவருகின்றது. போராட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மாலை முதல் பெருமளவானவர்கள் கொழும்பு நோக்கி புறப்பட ஆரம்பித்தனர்....
மேல் மாகாணத்தில் சில பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு 9 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்படுகின்றது. இது தொடர்பான அறிவிப்பை பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ளது. நீர்கொழும்பு, களனி,...