<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கல்வி &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/category/educations/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 16:15:12 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>கல்வி &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>முல்லைக்கு பெருமை சேர்த்த ஊடகவியலாளர் மகள்! &#8211; புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை</title>
		<link>https://tamilnaadi.com/news/record-school-in-mullaitivu-after-47-years/</link>
					<comments>https://tamilnaadi.com/news/record-school-in-mullaitivu-after-47-years/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Mar 2022 06:05:37 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[mullaithevu]]></category>
		<category><![CDATA[ScholarshipExam]]></category>
		<category><![CDATA[school student]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=41739</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு &#8211; மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பனிக்கன் குளம் அரசினர் தமிழ் கலைவன் பாடசாலை 2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளது. குறித்த பாடசாலையில் கல்வி பயிலும், தவசீலன் புவணாயினி என்ற மாணவி 162 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார். 1975 ஆண்டு குறித்த பாடசாலை பாடசாலையில் மாணவி ஒருவர் மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றிருந்தார். அதன் பின்னர் பல மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர். இந்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முல்லைத்தீவு &#8211; மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பனிக்கன் குளம் அரசினர் தமிழ் கலைவன் பாடசாலை 2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளது.</p>
<p>குறித்த பாடசாலையில் கல்வி பயிலும், தவசீலன் புவணாயினி என்ற மாணவி 162 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.</p>
<p>1975 ஆண்டு குறித்த பாடசாலை பாடசாலையில் மாணவி ஒருவர் மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றிருந்தார்.</p>
<p>அதன் பின்னர் பல மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர். இந்த நிலையில், 47 வருடத்தின் பின்பு மாவட்ட வெட்டுப் புள்ளியைத் தாண்டி சிறந்த பெறுபேற்றைப் பெற்ற செல்வி. த.புவணாயினிக்கு பாடசாலை சமூகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்,கல்வியாளர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்த மாணவி முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone wp-image-41744" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2022/03/22-622e7d3491f6d-165x300.jpg" alt="22 622e7d3491f6d" width="184" height="335" title="முல்லைக்கு பெருமை சேர்த்த ஊடகவியலாளர் மகள்! - புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை 3" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2022/03/22-622e7d3491f6d-165x300.jpg 165w, https://tamilnaadi.com/wp-content/uploads/2022/03/22-622e7d3491f6d.jpg 528w" sizes="(max-width: 184px) 100vw, 184px" /> <img decoding="async" class="wp-image-41745 alignleft" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2022/03/22-622e7d3472afc-300x169.jpg" alt="22 622e7d3472afc" width="587" height="331" title="முல்லைக்கு பெருமை சேர்த்த ஊடகவியலாளர் மகள்! - புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை 4" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2022/03/22-622e7d3472afc-300x169.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2022/03/22-622e7d3472afc-768x432.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2022/03/22-622e7d3472afc.jpg 960w" sizes="(max-width: 587px) 100vw, 587px" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/record-school-in-mullaitivu-after-47-years/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/educations/ministry-of-education-announces/</link>
					<comments>https://tamilnaadi.com/educations/ministry-of-education-announces/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Jan 2022 05:50:30 +0000</pubDate>
				<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[A/L exam]]></category>
		<category><![CDATA[education department]]></category>
		<category><![CDATA[exam]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[O/L exam]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=34414</guid>

					<description><![CDATA[2021 கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரம் உயர்தரம் சாதாரண  மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகியன நடைபெறும் தினங்களில் மாற்றம் எதுவும் இல்லை. இவ்வாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். &#160; உயர்தரம் மற்றும் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்தது. இருப்பினும் இவை இரண்டு முறை பின்போடப்பட்டன. முன்பு திட்டமிட்ட வகையில் புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22 ஆம் திகதியும்  உயர்தர பரீட்சை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>2021 கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரம் உயர்தரம் சாதாரண  மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகியன நடைபெறும் தினங்களில் மாற்றம் எதுவும் இல்லை.</p>
<p>இவ்வாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p><img decoding="async" class=" wp-image-6894 aligncenter" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/education-300x170.jpg" alt="education" width="582" height="330" title="கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு! 6" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/education-300x170.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/education-768x435.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/education.jpg 970w" sizes="(max-width: 582px) 100vw, 582px" /><br />
உயர்தரம் மற்றும் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்தது. இருப்பினும் இவை இரண்டு முறை பின்போடப்பட்டன.</p>
<p>முன்பு திட்டமிட்ட வகையில் புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22 ஆம் திகதியும்  உயர்தர பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கும் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/educations/ministry-of-education-announces/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மாணவர் இடைவிலகலும் கல்வி நிலையும் &#8211; சி.அருள்நேசன்</title>
		<link>https://tamilnaadi.com/articles/student-dropout-and-academic-status/</link>
					<comments>https://tamilnaadi.com/articles/student-dropout-and-academic-status/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Florida]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Dec 2021 18:13:14 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[education]]></category>
		<category><![CDATA[school]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[students]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=26543</guid>

					<description><![CDATA[கல்வியானது நுண்மதி ஆற்றலையும் திறன்களையும் வளர்க்கின்றது. அத்துடன் வாழ்க்கைக்கு வேண்டிய நற்பண்புகளையும் வளர்க்கின்றது. நற்பண்புகளை வளர்ப்பதன் மூலமே வாழ்க்கையின் குறிக்கோளை கல்வியால் பெற்றுக்கொடுக்க முடியும். கல்வியே வாழ்க்கை வாழ்க்கையே கல்வி இதனையே ஆங்கிலக் கவிவாணர் வேட்ஸ்வர்த் “மனிதத் தன்மையினை மனிதர் பெறத் துணையாக விளங்குவது கல்வி” என்று கல்வி வரையறை கண்டார். கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்ளும் பிரதான கல்வி நிறுவனமாக விளங்கியது பாடசாலையாகும். வரையறுக்கப்பட்ட இலக்குகளையும் நோக்கங்களையும் கலைத்திட்ட அமுலாக்கத்தினூடாக மாணவர்களிடத்தில் உருவாக்கும் வகையில் பாடசாலைச் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கல்வியானது நுண்மதி ஆற்றலையும் திறன்களையும் வளர்க்கின்றது. அத்துடன் வாழ்க்கைக்கு வேண்டிய நற்பண்புகளையும் வளர்க்கின்றது. நற்பண்புகளை வளர்ப்பதன் மூலமே வாழ்க்கையின் குறிக்கோளை கல்வியால் பெற்றுக்கொடுக்க முடியும்.</p>
<p>கல்வியே வாழ்க்கை வாழ்க்கையே கல்வி இதனையே ஆங்கிலக் கவிவாணர் வேட்ஸ்வர்த் “மனிதத் தன்மையினை மனிதர் பெறத் துணையாக விளங்குவது கல்வி” என்று கல்வி வரையறை கண்டார்.</p>
<p>கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்ளும் பிரதான கல்வி நிறுவனமாக விளங்கியது பாடசாலையாகும். வரையறுக்கப்பட்ட இலக்குகளையும் நோக்கங்களையும் கலைத்திட்ட அமுலாக்கத்தினூடாக மாணவர்களிடத்தில் உருவாக்கும் வகையில் பாடசாலைச் செயற்பாடுகள் அமைந்துள்ளன.</p>
<p>இவற்றைத் திருப்திகரமாக முன்னெடுப்பதற்கு சீரான மாணவர் பாடசாலையிலிருத்தல் அவசியமாகும். சீரான மாணவர்கள் மட்டும் இருந்தால் போதாது. அவர்கள் கற்றுக் கொள்வதற்கு ஏற்ற மனவிருப்புடன் இருத்தல் வேண்டும்.</p>
<p>வளர்ந்து வரும் உலகளாவிய கல்வி அபிவிருத்திச் செயல்நெறிகளுக்கு இணங்க இலங்கையின் கல்வி விருத்தியும் மாற்றம் பெற்றுக்கொண்டே செல்கின்றது எனலாம்.</p>
<p>கல்வியமைப்பானது மாற்றமுறும் போது அதற்கு ஈடு கொடுக்க முடியாமலும் அதேவேளை மாற்ற ங்களை ஏற்றுக்கொள்ளும் திறனின்மையால் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளிலிருந்து இடைவிலகும் தன்மை இன்று அதிகரித்துச் செல்லும் போக்குக் கூடுதலாகக் காணப்படுகின்றது எனலாம்.</p>
<p>உலகில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையாக கொவிட் -19 அலை பல துறைகளை முடக்கியுள்ளதோடு புதிய மாற்றுத் தீர்வினை எதிர்பார்த்துள்ளது. எனினும் இதில் கல்வி சார்ந்த செயற்பாடுகளில் மாணவர்கள் சுமார் 2 வருட காலம் வீட்டிலிருந்து கற்க வேண்டிய நிலையில் தொழில்நுட்பத்தை நம்பி இருக்க வேண்டிய நிலை இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.</p>
<p>இதில் பாடசாலை தொடங்கி பல்கலைக்கழக மாணவர்கள் வரை பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தித்து வருகின்றமை முக்கியமானதாகும். மாணவர்கள் மத்தியில் கல்வி மீதான அக்கறை குறைந்து செல்லுமையைஇ பொருளாதார ரீதியான பிரச்சினைகள் இதற்கு காரணமாக உள்ளது.</p>
<p>இவ்வாறு, மாற்றமுறும் கற்றல் நிலைகளிலிருந்து பின்னடைவுகளை எதிர்நோக்கும் மாணவர்கள் உளவியலாளரின் தீவிர கவன ஈர்ப்பைப் பெறத் தொடங்கியுள்ளனர்.</p>
<p>கல்வி நடவடிக்கைகளிலிருந்து மாணவர் இடைவிலகும் நிலை மாணவரின் அடிப்படையான உளவியல் செயன்முறையின் ஒழுங்கு குலைவினால் ஏற்படுகின்றது. இவ் இடைவிலகும் தன்மையானது குடும்ப நிலை, தாம் முதன்முதலில் சந்திக்கும் ஆசிரியர்கள், பாடசாலை, சகபாடிகள் போன்ற இன்னோரன்ன காரணிகளால் ஏற்படலாம்.</p>
<p>இடைவிலகல் என்ற எண்ணக்கரு நாடாளவிய ரீதியில் பெரும் பிரச்சினையாக கல்விப் புலத்தில் காணப்படுகின்றது. பொதுக் கல்வியைப் பூர்த்தி செய்யாது இடையில் பாடசாலையை விட்டு மாணவர் விலகுவதே இடைவிலகலாகும்.</p>
<p>கட்டாய கல்விக்காலம் எனக் கருத்தப்படும் 6-14 வயது வரையிலாவது கற்றல் வாய்ப்பினைத் தொடராமல் விலகுகின்றனர். கல்வி சிறுவர்களின் உரிமை என ஐ.நா.சாசனம் முக்கியத்துவப்படுத்துவதும் சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். சிறுவர்களின் கல்வி வாய்ப்பானது.</p>
<p>1. பாடசாலையில் சேரவேண்டிய வயதுக்குரிய காலத்தில் சேராதோர்.</p>
<p>2. பாடசாலையில் சேர்ந்தவர்களில் பொதுக்கல்வியைத் தொடராமல் இடைவிலகிச் செல்வோர் எனும் வகைப்பாட்டிற்கு இணங்க தமது கல்வியைத் தொடராமல் இழப்பதையும் அவதானிக்க முடிகின்றது.</p>
<p>இடைவிலகலானது பல காரணங்களால் ஏற்படுகின்றது. அதாவது குடும்பப் பின்னணி பாடசாலை பின்னணி சமூகச் சூழல், கலைத்திட்ட இடர்பாடுகள், கற்போனின் மனநிலை ஊக்கம், பொருளாதார நிலை, சமூக நிலையியல், பழக்கவழக்கங்கள், பரீட்சை மையக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், ஆசிரியர் மற்றும் வள ஆளணியினரின் கடமைகளின் திருப்தியின்மை, பய உணர்வு ஆகிய பிரச்சினைகள் மாணவர்கள் இடைவிலகுவதற்கான காரணிகளாக இனங்காணப்பட்டுள்ளது.</p>
<p>இடைவிலகல்                                                  நூற்றுவீதம்<br />
வறுமை                                                              48.29%<br />
பாலியல் குற்றம்                                           14.18%<br />
பொருத்தமற்ற பாடத்திட்டம்                12.01%<br />
பாடசாலை இல்லாமை                             4.01%<br />
தொழிலுக்குச் செல்லல்                            1.09%<br />
காரணமின்மை                                             20.42%<br />
மொத்தம்                                                          100%<br />
(கல்வியியல் ஆய்வு -2019)</p>
<p>இலங்கை நாட்டின் பல பகுதிகளில் இப் பிரச்சினையானது பாரிய தலையிடியாக மாறி வருகின்றது. காரணம் பொருளாதார நெருக்கடியும் யுத்த நிலையுமே பாரிய பிரச்சினையாகும். அதுவும் இப்பிரச்சினையானது நகரப் புறங்களை விடக் கிராமப் புறங்களில் கூடுதலாகக் காணப்படுகின்றது. ஏனெனில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் பெற்றோர் கல்வி மீது காட்டும் ஆர்வம் குறைவடைவதனாலாகும்.</p>
<p>கிராமப்புறப் பெற்றோர்களின் பொதுவான கருத்தின்படி தம் பிள்ளைகள் ஓரளவு படித்திருந்தால் போதும் எனும் மனநிலையுமாகும். இன் நிலைமை மாறும்போதே இடைவிலகல் என்பதும் தூரவிலகக் கூடிய நிலை ஏற்படும்.</p>
<p>இடைவிலகலிற்கான பல பொதுவான காரணங்கள் கூறப்படுவதில் குடும்ப பிரச்சினைகள் முக்கியம் பெறுகின்றன. மகிழ்வான குடும்பச் சூழல் பிள்ளைகளின் கல்விக்கு அடித்தளமாகும். குடும்ப அங்கத்தவர்கள் காரணமின்றி பிள்ளைகளை வைத்துக் கொண்டே தம்மிடையே முரண்படும் போதே பிள்ளைகள் உளத்தாக்கமடைகின்றனர்.</p>
<p>அத்துடன் பிள்ளைகளுடன் அன்பு காட்டி நடக்க வேண்டிய காலப்பகுதியில் பெற்றோர் வெளிநாடுஇ வேலைப்பளு என பிரிந்து வாழ்வதனாலும் பெற்றோரின் அக்கறையின்மையும் கல்வி அறிவின்மையும் இடைவிலகலிற்குக மாணவர்களை இட்டுச் செல்கின்றது எனலாம்.</p>
<p>மேலும் கல்வி விருத்திக்கு பொருளாதாரம் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. இதில் மலையக மாணவர்கள் பெரும் பாதிப்புக்களை அடைந்து வருகின்றனர். மேற்படி கல்வி விருத்திக்கு பின்னணியாக விளங்கும் பொருளாதாரம் சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் கற்றலுக்கு தடையை ஏற்படுத்தி விடுகின்றது.</p>
<p>அவ்வகையில் குடும்பத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள்இ பிள்ளைகளின் பாடசாலைத் தேவைகள் நிறைவேற்றப்படாமை, வகுப்பறையில் காணப்படும் பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள், அதனை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் புறக்கணிப்படுதல் போன்றன பிள்ளைகளிடம் உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தி இறுதியில் அவர்களது கற்றலிற்கு தடையாக அமைவதுடன் இடைவிலகலுக்கு காரணமாகின்றது.</p>
<p>வறுமையான வீட்டுச் சூழலில் வளரும் பிள்ளையானது குடும்ப நிலை காரணமாக தானும் தனது உழைப்பை நல்க வேண்டும் என நினைத்து தொழிலில் ஈடுபடும் போதும் வீட்டின் வறுமைச் சூழல் உண்பதற்கே கேள்விக்குறியாக இருக்கும் போதும், படிப்பு எதற்கு எனும் வினாவை எழுப்பும் போதும் மாணவரது மனநிலை மாற்றமடைந்து பாடசாலைக் கல்வி முடிவிற்கு கொண்டுவரப்படுகின்றது.</p>
<p>நம் வாழ்க்கையில் எதிர்பாராது பல விடயங்கள் ஏற்படுகின்றன. இது சகலருக்கும் பொதுவானதே. இவ்வகையில் கற்றலில் ஆர்வத்துடன் ஈடுபடும் பிள்ளைகளுக்கு திடீரெனத் தோன்றும் நோய்கள், விபத்துக்கள் பெற்றோரின் இழப்புக்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தங்கள் இனக்கலவரங்கள் சாதி முரண்பாடுகள் போன்றன அவர்களின் வாழ்க்கையைப் பாதிப்படையச் செய்யலாம்.</p>
<p>இவை ஒருவரால் எண்ணி ஏற்படுவதில்லை. எதிர்பாராது நிகழ்வது. இவ்வாறான நிகழ்வுகள் கூட சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் இடைவிலகலிற்குக் காரணமாகின்றது.</p>
<p>கற்றலில் மாணவர்கள் சலிப்படைந்து இடைவிலகலிற்கு இட்டுச்செல்கின்ற இன்னுமோர் காரணமாக கற்பிக்கும் முறையாகும். வகுப்பறையில் மெல்லக் கற்போர் மீத்திறன் உடையோர் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் எனப் பலதரப்பட்டோர் இருக்கும் போது வேறுபடுத்தி அவர்களுக்கேற்ற வகையில் கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொள்ளாது ஒரே முறையைப் பயன்படுத்திக் கற்பிக்கும்போது பாடத்தில் சலிப்பு ஏற்பட்டு இடைவிலகலிற்கு இட்டுச் செல்கின்றது.</p>
<p>எனவே இத்தகைய நிலையிலிருந்து மாணவர்களை மீட்டெடுத்து சிறந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப நாம் காத்திரமான முடிவுகளை எடுத்தல் வேண்டும். இதற்காக இடைவிலகலைக் குறைப்பதற்கு எம்மாலான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும.</p>
<p>ஆகவே மாணவர்களின் இடைவிலகலைக் குறைப்பதற்காக கையாளக் கூடிய நடவடிக்கைகளையும் இனங்காண வேண்டும். அதாவது ஆசிரியரானவர் பாடசாலைக்குள் உள் நுழையும் பிள்ளையைத் தன் பிள்ளைபோல கருதிச் செயற்பட வேண்டும். வகுப்பறையானது முறையாக ஒழுங்குப்படுத்தப்பட்டு மாணவர்களைக் கவரும் வகையிலும் கற்கத் தூண்டும் வகையிலும் அமைதல் வேண்டும்.</p>
<p>ஆசிரியரானவர்கள் பாடப்பொருளை மாணவர்களின் யதார்த்த வாழ்க்கை அனுபவங்களுடன் தொடர்புபடுத்திக் கற்பிப்பதில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும். ஆசிரியர் தமது மாணவர்களிடம் அவர்களின் முன்னேற்றம் பற்றி அடிக்கடி அறிவுறுத்தி கொண்டிருக்க வேண்டும்.</p>
<p>வகுப்பிலுள்ள சகல மாணவர்களையும் சமமாகக் கருதுதல் வேண்டும். மாணவர்கள் தாம் கற்றவற்றை மீட்பதற்கு குழு முறையமைப்பை ஏற்படுத்திக்க கொடுக்க வேண்டும். வகுப்பிலுள்ள சகல மாணவர்களுக்கும் அடிக்கொரு தரம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.</p>
<p>மேலும் மாணவர்களின் திறனைக்; கருத்தில் கொண்டு அதற்கேற்பக் கற்பிக்க வேண்டும். பரீட்சை முறைகளுக்கு கூடிய முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து குழுமுறைக் கற்பித்தலிற்கு முதலிடம் வழங்க வேண்டும். கற்பிக்கும் போது மாணவர்களுக்கு விருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் கட்புல &#8211; செவிப்புல சாதனங்களைப் பயன்படுத்துதல் வேண்டும். ஏனெனில் இது மாணவர்களது கற்றலை தூண்டக் கூடியது.</p>
<p>இவ்வாறான பல்வேறு நடவடிக்கைகளையும் இடைவிலகலைக் குறைப்பதற்காக எடுக்கும் போது ஒவ்வொரு நாட்டினதும் மனிதவளம் மேம்பட்டு நாடு அபிவிருத்தியடையச் சந்தர்ப்பம் ஏற்படுவதோடு எமது தமிழ் சமுதாயம் முன்னேற்றமடையவும் சமூகத்தில் கல்விக்கற்ற கூட்டத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்கவும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் வாய்ப்பாக அமையும்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/articles/student-dropout-and-academic-status/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கவனயீனங்களால் காவு கொள்ளப்படும் பிஞ்சுகள் &#8211; எப்போது முற்றுப்புளியிடப்போகிறோம்? &#8211; தேவதர்சன் சுகிந்தன்</title>
		<link>https://tamilnaadi.com/articles/pins-that-are-ingested-by-careless-people-when-are-we-going-to-end-it/</link>
					<comments>https://tamilnaadi.com/articles/pins-that-are-ingested-by-careless-people-when-are-we-going-to-end-it/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Nov 2021 13:51:14 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[Accident]]></category>
		<category><![CDATA[artical]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[Kinniya]]></category>
		<category><![CDATA[school]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[students]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=23729</guid>

					<description><![CDATA[பாடசாலை மாணவர்களை காவு வாங்கும் கவனயீனங்களுக்கு மெதுவாக மெதுவாக பழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பத்துடன் ஓர் இறப்பாக பாடசாலைக் குருத்துக்களின் சாவுகளை எண்ணிக்கொண்டு மெதுவாக மெதுவாக கடந்து போக பழகிக்கொண்டிருக்கின்றோம். இந்த பழக்கப்படுதலுக்கு நாம் நம்மை இசைவாக்கிக்கொண்டுவிட்டால் காலம் நம்மை ஒருபோதும் மன்னிக்காது என்பதை மறந்து கொண்டிருக்கின்றோம். இலங்கையில், குறிப்பாக வடக்கு கிழக்கில் அண்மையில் வெவ்வேறு காரணங்களால் பல பாடசாலை மாணவ மாணவியர் மரணித்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது. குறித்த மரணங்கள் தொடர்பில் நேரடியாகவும், சட்ட ரீதியாகவும்இ சமூக வலைத்தளங்களிலும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாடசாலை மாணவர்களை காவு வாங்கும் கவனயீனங்களுக்கு மெதுவாக மெதுவாக பழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பத்துடன் ஓர் இறப்பாக பாடசாலைக் குருத்துக்களின் சாவுகளை எண்ணிக்கொண்டு மெதுவாக மெதுவாக கடந்து போக பழகிக்கொண்டிருக்கின்றோம். இந்த பழக்கப்படுதலுக்கு நாம் நம்மை இசைவாக்கிக்கொண்டுவிட்டால் காலம் நம்மை ஒருபோதும் மன்னிக்காது என்பதை மறந்து கொண்டிருக்கின்றோம்.</p>
<p>இலங்கையில், குறிப்பாக வடக்கு கிழக்கில் அண்மையில் வெவ்வேறு காரணங்களால் பல பாடசாலை மாணவ மாணவியர் மரணித்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது. குறித்த மரணங்கள் தொடர்பில் நேரடியாகவும், சட்ட ரீதியாகவும்இ சமூக வலைத்தளங்களிலும் பலவிதமான உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்த போதும், இம் மரணங்களின் எண்ணிக்கை நீந்திக்கொண்டே போகின்றமை பெரும் துயரமாகும்.</p>
<p>குறிப்பாக இன்று (23.11.2021) காலை பாடசாலை செல்வதற்காக சென்ற மாணவ மாணவியரில் பலர் திருகோணாமைலையில் இழுவைப் படகு கல்விழுந்து விபத்துக்குள்ளாகி மரணித்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அச்சத்துள்ளாக்கியுள்ளது.</p>
<p>குறித்த கோரச் சம்பவத்தில் சகு சஹீ (மூன்றரை வயது),சஹிலா (6 வயது), பரீஸ் பகி (6 வயது), சப்ரியா (30 வயது), ஷேஹப்துல் சாகர், எவ்.சரீன் (8 வயது) ஆகியோர் உள்ளிட்டவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் இன்னும் எத்தனை பேரை எத்தனை விபத்துகளில் காவு கொடுக்க போகிறோம் என்ற கேள்வியை மனசாட்ச்சியுள்ள அனைவரும் தத்தமக்குள்ளே கேட்டுக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.</p>
<p>இவ்வாறு விபத்துக்குள்ளாகும் சமபவங்கள் இவை மட்டுமா? என்றால் இல்லை இதே நாளில் மற்றுமொரு விபத்து இன்று யாழில் சம்பவித்துள்ள நிலையில் மற்றுமொரு பாடசாலை மாணவி காயமடைந்துள்ளார்.</p>
<p>யாழ்ப்பாணம்- தாவடி சந்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இலக்கத் தகடு அற்ற பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி உட்பட இருவர் இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.</p>
<p>அது தவிர அண்மையில் கிளிநொச்சியில் மஞ்சள் கடவையில் வைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மற்றும் மேலும் இரு வாகனங்களினால் விபத்துக்குள்ளான மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். இன்னொருவர் படுகாயமடைந்தார்.</p>
<p>உண்மையிலேயே இவ்வாறான விபத்துக்கள் எவ்வகையான காரணங்களால் நிகழ்கின்றன என்பதற்கு வெவ்வேறு காரணங்கள் சம்பத்தப்பட்ட தரப்புகளால் சொல்லப்படுகின்ற போதிலும், உண்மையிலேயே இவ்வாறான விபத்துகள் கவனயீனம் மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகள் ஆகியவற்றினால்தான் நிகழ்ந்தேறுகின்றன.</p>
<p>மேற்சொல்லப்பட்ட மூன்று கோர விபத்துகளிலும் பாதிக்கப்பட்ட அல்லது பலியான மாணவ மாணவியர்கள் தமது கல்வி விருத்தியில் கவனம் செலுத்தியதை தவிர உண்மையிலேயே செய்த தவறுகள் எவை?</p>
<p>யாரோ ஒருவர் அல்லது யாரோ ஒரு தரப்பு செய்கின்ற தவறுகளுக்கு விறகுவெட்டி படிக்க வைத்து உயர்தர அனுமதிக்காக அனுப்பிவிட்டு காத்திருந்த தந்தையும் கட்டு சோறு, தண்ணீர் போத்தல்களை தயார் செய்து முத்தமிட்டு தமது மகன்களையும் மகள்களையும் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு காத்திருந்த பெற்றோரும் ஏன் தமது குருத்துக்களை இழந்து கண்ணீர் சொரிய வேண்டும்?</p>
<p>உண்மையிலே இவற்றுக்கான தீர்வுகள் விரைவில் காணப்பட வேண்டும். போக்குவரத்து விதிமுறைகள் குறித்து கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.</p>
<p>மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் போக்குவரத்து, குறிப்பாக பாதசாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை குறித்த விழிப்புணர்வு பரவலாக ஏற்படுத்தப்பட வேண்டும். எங்கள் தாய் நிலத்தின் எதிர்கால சந்ததிகள் காப்பாற்றப்பட வேண்டும்.</p>
<p>மீண்டும் மீண்டும் நிகழும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீதான விபத்துகளுக்கு கூடிய விரைவிலேயே முற்றுப்புள்ளியிட வேண்டும்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/articles/pins-that-are-ingested-by-careless-people-when-are-we-going-to-end-it/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தரம் 5, சாதாரணதர, உயர்தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/announcement-of-grade-5-ordinary-advanced-exam-dates/</link>
					<comments>https://tamilnaadi.com/news/announcement-of-grade-5-ordinary-advanced-exam-dates/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Nov 2021 05:54:50 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[exam]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[gce a/l]]></category>
		<category><![CDATA[gce o/l]]></category>
		<category><![CDATA[Scholarship]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=19255</guid>

					<description><![CDATA[பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைக்கு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய வகுப்புக்களுக்கான பரீட்சைகளுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத் தராதர [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைக்கு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய வகுப்புக்களுக்கான பரீட்சைகளுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனடிப்படையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி முதல் 2022 ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
<p><img loading="lazy" decoding="async" class="wp-image-19256 aligncenter" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/WhatsApp-Image-2021-11-02-at-10.54.36-AM-300x192.jpeg" alt="WhatsApp Image 2021 11 02 at 10.54.36 AM" width="898" height="575" title="தரம் 5, சாதாரணதர, உயர்தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு 8" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/WhatsApp-Image-2021-11-02-at-10.54.36-AM-300x192.jpeg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/WhatsApp-Image-2021-11-02-at-10.54.36-AM-768x492.jpeg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/WhatsApp-Image-2021-11-02-at-10.54.36-AM.jpeg 774w" sizes="(max-width: 898px) 100vw, 898px" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/announcement-of-grade-5-ordinary-advanced-exam-dates/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சாதாரண தர பெறுபேறுகள் வெளியாகின</title>
		<link>https://tamilnaadi.com/educations/ol-results-were-released/</link>
					<comments>https://tamilnaadi.com/educations/ol-results-were-released/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Sep 2021 16:08:25 +0000</pubDate>
				<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[2020 year]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[O/L exam]]></category>
		<category><![CDATA[OL]]></category>
		<category><![CDATA[Ordinary Level]]></category>
		<category><![CDATA[results]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[www.doenets.lk]]></category>
		<category><![CDATA[க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை]]></category>
		<category><![CDATA[சனத் பூஜித]]></category>
		<category><![CDATA[பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11631</guid>

					<description><![CDATA[2020ஆம் ஆண்டு ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இந்தப் பெறுபேறுகளை அரச பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் இவ் வருடம் மார்ச் மாதம் நடைபெற்றிருந்தன. இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>2020ஆம் ஆண்டு ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.</p>
<p>இந்தப் பெறுபேறுகளை அரச பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.</p>
<p>கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் இவ் வருடம் மார்ச் மாதம் நடைபெற்றிருந்தன.</p>
<p>இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/educations/ol-results-were-released/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி! &#8211; கல்வி அமைச்சு</title>
		<link>https://tamilnaadi.com/news/fall-in-number-of-applicants/</link>
					<comments>https://tamilnaadi.com/news/fall-in-number-of-applicants/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Sep 2021 06:22:06 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[AL]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[lockdown]]></category>
		<category><![CDATA[Ministry of Education]]></category>
		<category><![CDATA[OL]]></category>
		<category><![CDATA[Scholarship]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[க.பொ.த உயர்தரம்]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சு]]></category>
		<category><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=9504</guid>

					<description><![CDATA[விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி! &#8211; கல்வி அமைச்சு நாட்டில் இவ் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சைக்கு 2 ஆயிரத்து 922 விண்ணப்பங்கள் மாத்திரமே இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு 6 ஆயிரத்து 589 விண்ணப்பங்கள் மட்டுமே  அனுப்பப்பட்டுள்ளன. நாட்டில் இடம்பெற்றுவரும் அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்க போராட்டம் காரணமாக மாணவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எவையும் எடுக்காதிருந்தமையே விண்ணப்பதாரிகளின் வீழ்ச்சிக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி! &#8211; கல்வி அமைச்சு</h4>
<p>நாட்டில் இவ் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சைக்கு 2 ஆயிரத்து 922 விண்ணப்பங்கள் மாத்திரமே இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>அத்துடன்  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு 6 ஆயிரத்து 589 விண்ணப்பங்கள் மட்டுமே  அனுப்பப்பட்டுள்ளன.</p>
<p>நாட்டில் இடம்பெற்றுவரும் அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்க போராட்டம் காரணமாக மாணவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எவையும் எடுக்காதிருந்தமையே விண்ணப்பதாரிகளின் வீழ்ச்சிக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை, உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான விண்ணப்ப காலம் நேற்றைய தினம் நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/fall-in-number-of-applicants/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மனித உரிமைகள் கற்கை நிலையத்தால் புதிய கற்கைநெறி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/new-curriculum-by-the-center-for-the-study-of-human-rights/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/new-curriculum-by-the-center-for-the-study-of-human-rights/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Sep 2021 19:27:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[application]]></category>
		<category><![CDATA[education]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Human rights]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=8355</guid>

					<description><![CDATA[மனித உரிமைகள் கற்கை நிலையத்தால் புதிய கற்கைநெறி கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துடன் இணைந்த மனித உரிமைகள் கற்கைகள் நிலையமானது 2021 கல்வி ஆண்டுக்கான சான்றிதழ், உயர் சான்றிதழ், டிப்ளோமா மற்றும் முதுமாணி பட்டப்படிப்பு போன்ற புதிய கற்கை நெறிகளை நடத்தவுள்ளது. அதன்படி மனித உரிமைகள் தொடர்பில் சான்றிதழ் மட்டத்திலிருந்து முதுமாணி பட்டப்படிப்பு வரையான  கற்கைநெறிகள் நடத்தப்படவுள்ளன. இதற்குரிய விண்ணப்பங்களை மனித உரிமைகளுக்கான கற்கை நிலையத்தின் https://cshr.cmb.ac.lk/ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அனுப்பி வைக்கலாம் என [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மனித உரிமைகள் கற்கை நிலையத்தால் புதிய கற்கைநெறி</h4>
<p>கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துடன் இணைந்த மனித உரிமைகள் கற்கைகள் நிலையமானது 2021 கல்வி ஆண்டுக்கான சான்றிதழ், உயர் சான்றிதழ், டிப்ளோமா மற்றும் முதுமாணி பட்டப்படிப்பு போன்ற புதிய கற்கை நெறிகளை நடத்தவுள்ளது.</p>
<p>அதன்படி மனித உரிமைகள் தொடர்பில் சான்றிதழ் மட்டத்திலிருந்து முதுமாணி பட்டப்படிப்பு வரையான  கற்கைநெறிகள் நடத்தப்படவுள்ளன.</p>
<p>இதற்குரிய விண்ணப்பங்களை மனித உரிமைகளுக்கான கற்கை நிலையத்தின் https://cshr.cmb.ac.lk/ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி 20.09.2021 என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/new-curriculum-by-the-center-for-the-study-of-human-rights/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>யாழ்.பல்கலை &#8211; விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/educations/extension-of-application-closing-date/</link>
					<comments>https://tamilnaadi.com/educations/extension-of-application-closing-date/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Sep 2021 12:36:39 +0000</pubDate>
				<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[application date]]></category>
		<category><![CDATA[application form]]></category>
		<category><![CDATA[clossing date]]></category>
		<category><![CDATA[degree]]></category>
		<category><![CDATA[Degree certificate]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[university of jaffna]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=8067</guid>

					<description><![CDATA[யாழ்.பல்கலை &#8211; விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் பட்டச்சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்ப முடிவு திகதி பிற்போடப்பட்டுள்ளது. வெளிவாரி மாணவர்களுக்கு திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கான பட்டச்சான்றிதழ் வழங்கும் திகதி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்காக இணைத்தினூடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக குறித்த வேண்டுகோள் படிவத்தை இணையத்தினூடாக சமர்ப்பிக்குமாறு மாணவர்களை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது . விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதித்திகதி எதிர்வரும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>யாழ்.பல்கலை &#8211; விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு</h4>
<p>யாழ்ப்பாணம் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் பட்டச்சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்ப முடிவு திகதி பிற்போடப்பட்டுள்ளது.</p>
<p>வெளிவாரி மாணவர்களுக்கு திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கான பட்டச்சான்றிதழ் வழங்கும் திகதி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்காக இணைத்தினூடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.</p>
<p>இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக குறித்த வேண்டுகோள் படிவத்தை இணையத்தினூடாக சமர்ப்பிக்குமாறு மாணவர்களை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .</p>
<p>விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதித்திகதி எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இது தொர்பான அனைத்து விபரங்களையும் திறந்த மற்றும் தொலைக்கல்வி இணையத்தள முகவரியான codl.jfn.ac.lk இல் சென்று பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள 021-2223612 எனும் தொலைபேசி எண்ணின் ஊடாக தொடர்பை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/educations/extension-of-application-closing-date/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் &#8211; இந்திய தூதரகம் அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/educations/scholarship-for-sri-lankan-students/</link>
					<comments>https://tamilnaadi.com/educations/scholarship-for-sri-lankan-students/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Sep 2021 07:55:27 +0000</pubDate>
				<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[ayush]]></category>
		<category><![CDATA[Embassy]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Scholarship]]></category>
		<category><![CDATA[Sri Lankan students]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=7870</guid>

					<description><![CDATA[இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் &#8211; இந்திய தூதரகம் அறிவிப்பு இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசால் புலமைப் பரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுள்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு அல்லது பட்டப் பின்படிப்பு அல்லது கலாநிதி ஆகிய கற்கைநெறிகளை தொடர்வதற்கு விரும்பும் இலங்கை மாணவர்களுக்கு ‘ஆயுஷ்’ புலமைப்பரிசில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத் தகவலை இந்திய உயர் தூதரகம் அறிவித்துள்ளது. முழுமையான கற்கைநெறி கட்டணம் மற்றும் கற்கைநெறி காலம் முழுவதற்குமான மாதாந்த செலவின [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் &#8211; இந்திய தூதரகம் அறிவிப்பு</h4>
<p>இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசால் புலமைப் பரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஆயுள்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு அல்லது பட்டப் பின்படிப்பு அல்லது கலாநிதி ஆகிய கற்கைநெறிகளை தொடர்வதற்கு விரும்பும் இலங்கை மாணவர்களுக்கு ‘ஆயுஷ்’ புலமைப்பரிசில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இத் தகவலை இந்திய உயர் தூதரகம் அறிவித்துள்ளது.</p>
<p>முழுமையான கற்கைநெறி கட்டணம் மற்றும் கற்கைநெறி காலம் முழுவதற்குமான மாதாந்த செலவின கொடுப்பனவுகள், தங்குமிட கொடுப்பனவு மற்றும் வருடாந்த உதவித்தொகை என்பவற்றை உள்ளடக்கி இந்த புலமைப்பரிசில் திட்டம் வழங்கப்படுகின்றது.</p>
<p>இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனைக்கமைய திறமை வாய்ந்த இலங்கை மாணவர்களை தெரிவுசெய்து இந்த புலமைப் பரிசில்கள் இந்திய அரசால் வழங்கப்படுகிறது.</p>
<p>இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை கல்வியமைச்சின்  www.mohe.gov.lk. எனும் இணையதளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/educations/scholarship-for-sri-lankan-students/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
