<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சிறுகதை &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/category/articles/short-stories/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 04:38:34 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>சிறுகதை &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>&#8216;காகமும் கரும்பலகையும்&#8217; &#8211; அகமது ஃபைசல்</title>
		<link>https://tamilnaadi.com/articles/short-stories/short-story-ahmed-faisal/</link>
					<comments>https://tamilnaadi.com/articles/short-stories/short-story-ahmed-faisal/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Sep 2021 15:03:11 +0000</pubDate>
				<category><![CDATA[சிறுகதை]]></category>
		<category><![CDATA[அகமது ஃபைசல்]]></category>
		<category><![CDATA[காகமும் கரும்பலகையும்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=7731</guid>

					<description><![CDATA[&#8216;காகமும் கரும்பலகையும்&#8217; &#8211; அகமது ஃபைசல் &#8216;காகமும் கரும்பலகையும்&#8217; விஞ்ஞான ஆய்வுகூடத்தின் வெளிப்பக்க ஜன்னல் ஓரமாக கிடந்த அந்த சுவர்க் கடிகாரத்தின் முட்கள் ஜன்னல் கம்பிகளைப் பார்த்து மூச்சடைத்துக் கிடந்தன. அப்போதுதான் மூச்சு அடங்கினாற்போல் கடிகாரத்தின் முகம் பிரகாசமாய் இருந்தது. மூச்சடைத்த நேரத்தை மட்டும் சரியாக காட்டிக்கொண்டன முட்கள். அந்த நேரம்தான் பாடசாலை கலைவதற்கு கடைசி மணி அடிக்கும். மணி அடித்தது. தானாகவில்லை. நான்தான் அடித்தேன். என் வகுப்புக்கு முன்னால் தொங்கிக்கொண்டிருக்கும் அந்த இரும்பு வளையத்திற்குப் பக்கத்தில்தான் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>&#8216;காகமும் கரும்பலகையும்&#8217; &#8211; அகமது ஃபைசல்</h4>
<p>&#8216;காகமும் கரும்பலகையும்&#8217;</p>
<p>விஞ்ஞான ஆய்வுகூடத்தின் வெளிப்பக்க ஜன்னல் ஓரமாக கிடந்த அந்த சுவர்க் கடிகாரத்தின் முட்கள் ஜன்னல் கம்பிகளைப் பார்த்து மூச்சடைத்துக் கிடந்தன. அப்போதுதான் மூச்சு அடங்கினாற்போல் கடிகாரத்தின் முகம் பிரகாசமாய் இருந்தது. மூச்சடைத்த நேரத்தை மட்டும் சரியாக காட்டிக்கொண்டன முட்கள்.</p>
<p>அந்த நேரம்தான் பாடசாலை கலைவதற்கு கடைசி மணி அடிக்கும். மணி அடித்தது. தானாகவில்லை. நான்தான் அடித்தேன். என் வகுப்புக்கு முன்னால் தொங்கிக்கொண்டிருக்கும் அந்த இரும்பு வளையத்திற்குப் பக்கத்தில்தான் என் இருக்கை. மணி அடிப்பது என் கடமை.</p>
<p>நான் சுத்தியல் தூக்குவதைக் கண்ட மாத்திரத்தில் கதிரையை விட்டு சில மாணவர்கள் எழுந்து விடுவார்கள். அவர்களுக்காக வேண்டி ஒரு நிமிடம் பிந்தியே மணி அடிப்பேன்.</p>
<p>அந்த இரும்பை தினமும் பார்ப்பதால் என்னவோ என் வகுப்பில் இருக்கும் சில பெண்களுக்கு மனமும் இரும்பாகிப் போச்சி. பேசாம பேசாம வாங்கி வச்சிருந்து தின்பாளுகள்.</p>
<p>பெல் அடித்ததுதான் தாமதம் சில மாணவர்கள் சிறையில் இருந்து தப்புவதுபோல் மதில் மேலால் ஏறிக் குதித்து வீட்டுக்கு ஓடிவிடுவார்கள். மற்றவர்கள் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக நின்று சலவாத்துச் செல்லி எறும்புகள் போல ஊர்ந்து அணிவகுத்துச் செல்வார்கள். கையில் பிரம்போடு கேற்றடியில் பி.ரி பாட ஆசிரியர் நிற்பார்.</p>
<p>இப்போது யாரும் இல்லாமல் ஒரு விதவையைப் போன்று சோகம் ததும்பியிருந்தது. பாடசாலை. அந்த ஓடாத கடிகாரத்தின் “டிக் டிக்” சத்தம் என் காதுகளுக்குக் கேட்டது. அதிபரும் கடைசியாகத்தான் போனார். சத்தமேயில்லாமல் சென்ற அவரது மோட்டார் சைக்கிள் பள்ளியின் மெயின் கேற்றைக் கடந்ததும் பெருமூச்சு விட்டுக் கத்தியது. அவரை வீடு கொண்டு சேர்க்கும் வரை அது கத்திக்கொண்டிருக்கும் என்பது உறுதி.</p>
<p>அது ஒரு பழைய மோட்டார் சைக்கிள். பள்ளியின் பிரதான புளிய மர நிழலில்தான் அதை நிறுத்திவைப்பார். ஒருபோதும் புளிய மர நிழலில் அவர் நிற்கமாட்டார். புளிய மர நிழல் அவருக்கு புளிக்கும் என்பார்.</p>
<p>இப்போது மாணவர்கள் இல்லாத அந்த வெறும் பாடசாலை என் கண் முன்னே விரிந்து கிடந்தது. அப்போதுதான் நான் ஒரு ஆசிரியனாக உருமாறினேன். பாலர் தொடக்கம் பன்னிரெண்டாம் வகுப்பு வரையும் மாணவ மாணவிகள் நிறைந்திருப்பதாக என் கண்களுக்குத் தோற்றியது. புளிய மர நிழலை சுவைத்தபடி நின்ற நான் உயர்தர வகுப்பை நோக்கி,</p>
<p>அந்த கடிகாரத்தையும் கையிலே எடுத்துக்கொண்டு சென்றேன். எனக்கு இருக்கும் நீண்ட மெல்லிய விரல்கள் போல் கடிகாரத்திற்கும் இருந்தன மூன்று விரல்கள். அந்த விரல்கள் மூன்றையும் அகல விரித்து நீட்டிக்கொண்டிருந்தது கடிகாரம்.</p>
<p>“தரம் 12” என்று எழுதி, பத்து இஞ்சிக்கு அப்பால் ஏற்றப்பட்டிருந்த கொங்ரீட் ஆணியில் அதை தொங்கவிட்டேன். அப்போதுதான் காற்றில் அந்த பிஸ்கோத்து வாசம் பரவி வந்தது.</p>
<p>பாலர் தொடங்கி தரம் ஐந்து வரை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அற்புத சுவை மிகு பிஸ்கோத்து. ஆளுக்கொரு ஜொக்குப்படி நிறைய நிறைய பகிருவாங்க.</p>
<p>“கா..கா&#8230;கா…” என்று கத்தியவாறு வகுப்பின் சுற்றுச்சுவரில் நின்றது உண்மையான காகம்தான். வரைந்த காகமில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.</p>
<p>ஒரு நாள் வகுப்புத் தோழன் முஸ்தபா வெள்ளைக் காகம் ஒன்றைப் பிடித்து வந்து வகுப்புக்கே வெள்ளையடித்துவிட்டான். அந்த வெள்ளைக் காகத்தை நானும் ஒருமுறை தொட்டுப்பார்த்தேன்.</p>
<p>அங்கே இருக்கிற வகுப்புக் கரும்பலகையில் நான் எழுதிய கவிதையையும் “கா கா” என்றுதான் வாசித்தன சில கறுப்புக் காகங்கள். ஒரு மாணவி சொன்னாள் கவிதை வாசிக்கத் தெரியாது, பழக்கமில்லை என்றாள். அவளை விட அந்த “கா கா” எவ்வளவோ மேல் என்று தோன்றியது.</p>
<p>எனக்கு எப்போதுமே அந்த தரம் 12தான் பிடிக்கும். அங்குதான் பாடகன், பாடகியெல்லாம் இருக்கிறார்கள். மேசையில் ரகசியக் குறியீடுகள், வார்த்தைகள் எல்லாம் எழுதியிருக்கும். பெயாரன் லவ்லி கிறீம் வாசம் வரும். புளியங்காயை கடித்து பாதியைத் தருவாள் ஒருத்தி. அவள் தந்த கணத்திலிருந்து அது இனிக்கும்.</p>
<p>எனது அடுத்த பாடவேளைக்கான மணி ஒலித்தது. மனமே இல்லாமல் அந்த 12ம் வகுப்பு ஆசிரியர் இருக்கையை விட்டு எழுந்தேன். அன்று என் நாடு போலவே வகுப்பறையும் அடிக்கடி அமைதி இழந்து விட்டிருந்தது. வகுப்பில் மயங்கி விழுந்த ஒரு மாணவனை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றார்கள். வெளியே ஓடித்திரியும் மாணவர்களில் ஒருவனை “ஏய்..இங்க வா..உன்ட வகுப்பு எது? என்ன பாடம்?” என்று கூப்பிட்டு கேட்டேன். “கணிதப் பாடம் சேர்” என்றான்.</p>
<p>“சரி வகுப்புக்கு போ வாரன்” என்று சொல்லிவிட்டு கையில் ஒரு புத்தகத்துடன் நடக்கத் தொடங்கினேன். அதிபர் காரியாலயத்திற்கு முன்னால் நீண்டு கிடக்கும் கடற்கரை மணல் கலைத்த வழியால் நடந்தேன்.</p>
<p>வலமும், இடமும் இருக்கிற பூ மரங்களும் என்னை வேகமாக நடக்க விடுவதாயில்லை. எனக்கு விலாவால் சுகாதாரப் பாட ஆசிரியரும் நடந்து சென்றார். அவர் எந்த அல்லுச் செல்லும் இல்லாதவர் போன்றே நடந்தார்.</p>
<p>பள்ளி நூலகத்திற்கு முன்னால் ஒரு குள்ளமான மா மரம். சுற்றிவர இடுப்பு மட்டத்திற்கு கிடுகினால் மறைக்கப்பட்டிருந்தது. ஏழாம் வகுப்பில் இருக்கும் உமைஸ் என்ற குள்ளமான மாணவனின் நினைவாக என்னவோ அவன் வகுப்பிற்கு முன்னால் அது வளர்ந்தும் வளராமலும் நிற்கிறது. அதன் அருகில்.</p>
<p>கசக்கி எறியப்பட்ட நிலையில் ஒரு தாள். உள்ளே ரகசியம் இருக்கும் என்று நம்பவைத்தபடி கிடந்தது. குப்பைகளுக்கெல்லாம் ராஜா போல் கசங்கி, பந்து மாதிரிக் கிடந்த தாளை எடுத்து பிரித்தேன். “மூண்டக்கண்ணி”என்று எழுதியிருந்தது.</p>
<p>அதைப் பார்ப்பதற்காக என் கண்களும் பிதுங்கின. “ண்”க்கு இருந்த மூன்று சுழியின் அகலத்தைப் பார்த்ததும் எனக்கு அந்த மூண்டக் கண்ணியின் முகம் மனதில் பதிந்துவிட்டது. கண் என்பதும் ஒரு ரகசியம்தான் என்பதை அப்போது ஒப்புக்கொண்டேன்.</p>
<p>“மாணவர்களே கண் எத்தனை வகைப்படும்” என்று சத்தமாக கேட்டேன்.</p>
<p>“இந்த வகுப்பில் ஒரு வகை கண் இருக்கு மற்ற வகை தெரியாது சேர்” என்றான் ஒருவன் எழும்பி.</p>
<p>நான் கதிரையை விட்டு எழுந்திருப்பது குறைவு. என் ட்ரௌசர் (trousers) இடுப்பை விட சற்று பெரியது. நடக்கும்போது மட்டும் உயர்த்தி விடவேண்டும். அவரும் நடக்கும்போது தனது ட்ரௌசரை (trousers) உயர்த்திவிடுவார் என்பதால் இது ஒரு பொருட்டாகவே எனக்குத் தோன்றவில்லை.</p>
<p>அவரென்றால் விவசாய மாஸ்டர். பக்கத்து வகுப்பில் ட்ரௌசருக்கு கண் இல்லை என்றும், கண் இருக்கும் இடத்தில் ஊசியை குத்தி வந்திருக்கிறான் என்றும் ஒரு மாணவனுக்கு மூலத்தில் பிரம்பால் அடிக்கிறார் ஒரு சேர்.</p>
<p>அவர் இஸ்லாம் பாடம் எடுக்கிறார். என் கண் முன்னேதான் இது நடந்தது. ட்ரௌசரைத் தைத்தவன் செய்த பிழைக்கு அதை அணிந்தவன் தண்டிக்கப்படுகிறான். என்ன ஒலகமடா என்று பெருமூச்சை விட்டேன்.</p>
<p>ஐந்தாம் வகுப்புச் சுற்றுச்சுவரில் என் கவிதையை வாசிக்காமல் மௌனமாக, சொண்டில் பிஸ்கோத் துண்டை வைத்துக்கொண்டு நின்ற மூன்று காகங்களும் உண்மையான கறுப்பு நிறமாய் இருந்தது. தலையை அங்கிட்டும், இங்கிட்டும் ஆட்டி நாட்டுக்கும், ஜனாதிபதிக்கும் நன்றி சொன்னது.</p>
<p>காகங்களின் மௌனத்தைக் கலைத்தது அடுத்த பாட வேளைக்கான மணி ஓசை. “கதைக்கிற ஆக்கள்ட பேர எழுது” என்று ஒரு கட்டளையைப் பிறப்பித்துவிட்டு சபூர் மாமாவின் கென்டின் பக்கமாக நடையை விட்டேன். சிகரட்டும் கையுமாக நின்ற ஏ.எல். வகுப்பு மாணவனொருவன் மாயமாய் மறைந்தான்.</p>
<p>அருகில் படர்ந்திருந்த தொட்டாச் சிணுங்கியில் அவன் கால்பட்டுச் சிணுங்கிக் கிடந்தது. இறால் வடையை கைக்குள் பொத்திக்கொண்டு ஒருத்தி விரைந்து சென்றாள். டீச்சருக்கு வெண்கட்டியால் மீசை வைத்திருப்பது தெரியாமல் கென்டினுக்குள் இருந்து தேநீர் குடித்துச் சிரிக்கிறா. இங்கிலீசு டீச்சர் அவதான். கென்டினுக்குப் போன நான் இடையில் திரும்பிட்டேன்.</p>
<p>அப்போது என் கண்ணையே நம்ப முடியாதவாறு அது நடந்தது. அந்த ஐந்தாம் வகுப்பு கரும்பலகைக்குள்ளிருந்து காகங்கள் வெளியேறி பறந்து செல்வதுபோல் இருந்ததால் அந்த வகுப்பிற்கு வேகமாக நடந்து சென்றேன்.</p>
<p>அங்கு அப்படி ஒரு அற்புதமும் நடக்கவில்லை. வகுப்புக்கள் கலைக்கப்பட்டு மாணவர்கள் வீடு போய்விட்டதற்கான அடையாளங்கள் இறந்து கிடந்தன. காகங்கள் மட்டும் கூடிக் கும்மாளம் அடித்தன.</p>
<p>இப்படித்தான் ஒரு நாள் பாடசாலை கலைந்து வீடு செல்லும் வழியில் ரோட்டோரமாக கிடந்த பெரிய போஸ்டர் ஒன்றைக் கண்டு எடுத்துப் பிரித்துப் பார்த்து ஒரு கணம் நானும் ஏமாந்துபோய்விட்டேன். &#8217;22&#8217; இஞ்சி பெரிய கலர் டிவியின் படம் அதில் இருந்தது. &#8217;30&#8217; இஞ்சாவது இருக்கும் அந்த போஸ்டர். டிவிக்குள் வோஸிங் பவுடர் விளம்பரம் போய்க்கொண்டிருக்கும்போது (push) பண்ணிவிட்டாற்போல் ஒரு படம் இருந்தது. விடுவேனா வீட்டிற்கு எடுத்துச்சென்றேன்.</p>
<p>என் வாப்பாவிற்கு வீட்டில் ஒரு டிவி வாங்கி வைக்கும் அளவுக்கு சம்பாத்தியம் இல்லை. புழக்கடைக்குள் இருக்கும் மண்வெட்டியே மூத்தாப்பா காலத்தில் உபயோகித்தது. அந்த மண் வெட்டியைத்தான் காணிக்குள்ளயும் வரம்புகட்ட எடுத்துக்கொண்டு போவார். அதுக்கு வேற கொள்ளிச் சிராய் தேடி ஆப்பு வைக்கனும். இந்த சீலம் இருக்கும்போது டீவியா? எங்கிருந்து வர்றது.</p>
<p>வீடு சென்றதும் முதல் வேலையாக டிவியை சுவரில் ஒட்ட ஆரம்பித்தேன். ஒட்டும் பணியில் இருந்த எனக்கு ஒத்தாசையாக தங்கச்சியும் இருந்தாள். அவள் டிவியைப் பார்த்ததும் முகத்தில் புரண்டது ஒரு சந்தோசம். உண்மையிலே அது புது டிவிதான் என்று நினைத்துவிட்டாளோ என்னவோ.</p>
<p>திண்ணையில் சக்கச் சளிய கிடந்து வடக்குப் பக்கம் பார்த்து இருந்தாள். அவள் இருக்கும் பக்கமாகவே சுவரில் டிவியை வைத்தேன். நான்கு பக்கமும் பசை நாடாவை இழுத்து ஒட்டினாள் உம்மா. ஆசையாக பலகாரம் சுட்டுக்கேட்டால் சுட்டுத்தருவாள். ஓட்டுக் கொழுக்கட்டை சுட்டுக்கேட்டால் அதையும் சுட்டுத்தருவாள். எங்கள் ஆசையை முற்றாகப் புரிந்தவள் உம்மாதான்.</p>
<p>டிவியை விட்டு தள்ளிக் கிடந்த மேசையை, அதுவும் ஒரு கால் லொடக்கு லொடக்கு என கொஞ்சம் ஆடும். உம்மாவுடன் சேர்ந்து தூக்கி டிவியோடு சுவரைத் தொட்டாற்போல் போட்டுவிட்டதும் மேசைமீது ஒரு டிவி இருப்பது போலவே இருந்தது.</p>
<p>திண்ணையில் இருந்தவள் கொஞ்சம் கழுத்தை உயர்த்தி டிவியில் இருக்கும் வொஸிங் பவுடர் விளம்பர படத்தை பார்க்கத் தொடங்கினாள். என் கண்கள் சற்று கலங்கிவிட்டன. துள்ளிச் சென்று அவள் கன்னதில் ஒரு முத்தம் இட்டேன். இந்த கூத்தைப் பார்த்த உம்மா வாய்க்குள்ளேயே சிரித்துக்கொண்டாள். டி.வி கொஞ்சம் சரிந்தாற்போல் இருந்தது. இருந்தாலும் கீழே விழாது என்ற முழு நம்பிக்கை எனக்கு இருந்தது.</p>
<p>அந்த நம்பிக்கை நினைவோடு நடந்தேன். அடுத்த வகுப்பிலிருந்த கரும்பலகையில் இருந்து திரும்பவும் காகங்கள் வெளியேறிப் பறப்பதுபோல இருந்தது. அப்போதுதான் எனக்குள் அந்த பயம் துளிர்விட்டது. பயம் துளிர்விட்ட கையோடு என் முதுகில் யாரோ கையை வைத்தாற்போல் இருந்தது சத்தமாக கத்திக்கொண்டு திரும்பினேன். வெறும் பள்ளிக்கூடம் ஓவென்று கிடந்தது. அங்கே தூரத்தில் ஒரு நாய் ஒற்றைக் காலைக் கிளப்பி மூத்திரம் அடித்துக்கொண்டிருந்தது.</p>
<p>அந்தப் புளிய மர நிழலை நான் சென்றடைந்தேனா? இல்லை அந்த நிழல் என்னை வந்தடைந்ததா? ஒன்றும் புரியவில்லை. அந்த புளிய மர நிழலில் நிற்கிறேன். இங்கு எப்படி வந்தேன் என்று புரியவில்லை. போன கிழமைதான் இந்த ஸ்கூல் வாச்சர் மௌத்தானதாக சொன்னாங்க. வந்ததே ஒரு பயம்.</p>
<p>நான் ஆசிரியனாக இருந்த நினைப்பும், வகுப்பு வகுப்பாக சென்று பாடம் சொல்லிக்கொடுத்த பைத்திய நினைப்பு எல்லாம் என்னை விட்டுப் பறந்து அந்தக் காகங்களுடன் போயின. புளிய மரத்தடியில் போட்டிருந்த புத்தக பேக்கை கையில் பிடித்துக்கொண்டு நிமிரும்போது மேலிருந்து ஒரு புளியம் பழமும் கீழே விழுந்தது. அதைக்கூட எடுக்காமல் சுவர் ஏறிக் குதித்து வீடு போய்ச் சேரும்போது உம்மா கொய்யாக்கம்போடு வரவேற்க காத்திருந்தாள்.</p>
<p>அந்த வரவேற்பு எனக்கு வலிக்கவேயில்லை. பூ ஒத்தினாள் அல்லது அடித்தாள். நானோ ஆகாவரி போகாவரியன் போல் நின்றுகொண்டேன்.</p>
<p>“நீ என்னடா சேர் மாருக்கெல்லாம் பெரிய சேர் மாதிரி நாலு மணிக்கு பள்ளி கலஞ்சி வார. நீ அங்க என்ன வாச்சர் வேலயா பாக்கிற&#8221;</p>
<p>“இல்லம்மா. என்ற கால் என்ன முயல்ட காலா” என்று சமாளித்தேன்.</p>
<p>“உன்ர கால் ஆமட கால் அதப் போய் கழுவிட்டு வா” என்றாள் பாசமாக.</p>
<p>அடுத்த நாள் என் வகுப்புக்கு நான்தான் முதலில் வந்து சேர்ந்தேன். பள்ளியும் வீடும் எங்கே என்று நான் மறந்தாலும் என் கால்கள் அதை மறக்கவே மாட்டாது.</p>
<p>காலை பத்து முப்பது மணிக்கு அது நிகழும். பிஸ்கோத்து பகிரும் நிகழ்வு. எங்களோடு படிக்காத காகங்களும் நிகழ்வுக்கு சமுகம் தரும். பாதிப் பாதி பிஸ்கோத்துகளாக உடைத்து வகுப்புச் சுவரில் வரிசையாக நின்றிருந்த எல்லாக் காகங்களுக்கும் வீசினேன்.</p>
<p>“டக்” என்ற சத்தம் வர சிறகுகள் படபட என பறந்தன. மாஜிதாவும் பாதியை வீசினாள். அப்போதும் “டக்” என்றது. அந்த சத்தத்தை வகுப்பில் சிலர்தான் விரும்பிக்கேட்போம். இலங்கை வானொலியில் ஒலிக்கும் நீங்கள் கேட்டவை போல.</p>
<p>“கறுத்தான் புறுத்தான் வேலிக்குள்ள பொறுத்தான்” என்றான் ஒருவன் மற்றொருவனைப் பார்த்து.</p>
<p>அதற்குப் பிறகு நடந்தது இதுதான். ஒரு துண்டையேனும் கீழே விடாமல் பிடித்து தின்று கொண்டிருந்தது அந்தக் காகம். அதன் முகம் மட்டும் அங்கு வந்த காகங்களுக்குள் வேறுபட்டு கொஞ்சம் சாம்பல் பூசி அலங்கரித்த அழகுடன் இருந்தது.</p>
<p>அந்தக் காகத்தை சரியாக குறி பார்த்து அதே சுவர் வழியாக பதுங்கி வந்த அந்த ஒல்லியான ஆசிரியர் பாய்ந்து வாலைப் பிடித்து வேகமாக சுற்றி வகுப்புக்குள்ளே ஓடிவந்து கரும்பலகையில் வீசி எறிந்துவிட்டார்.</p>
<p>“சப்” என்ற சத்தம் மட்டும் கேட்டது. பிறகு ரத்தம் கரும்பலகையில் பீச்சி அடிக்கவில்லை. கீழே விழுந்து சிறகை சில நிமிங்கள் அசைத்துவிட்டு நேற்று வாசித்த என் கவிதையை கடைசித் தரம் கம்மிய குரலில் வாசித்துவிட்டு இறந்தது. அப்போது என் ஈரல் குலையே அறுந்தாற்போல் உணர்ந்தேன்.</p>
<p>செத்துக் கிடந்த காகத்தை கக்கூஸிக்குப் பின்னால் கொண்டுபோய் போடச் சொன்னார் அந்த ஒல்லி. நானும் கிலூர் ரகுமானும் காகத்தைத் தூக்கிக் கொண்டுபோனோம். வழியில் நான் அதன் சாம்பல் முகத்தை விரலால் தடவித் தடவிப்போனேன். அந்த இடத்தில் சிறட்டையால் மடு தோண்டி அடக்கம் செய்துவிட்டு திரும்பிப் போக மனமில்லாமல் ஒரு துஆ ஓதிவிட்டு தலை மாட்டிலும், கால் மாட்டிலும் சின்னக் கம்புத்துண்டை குத்திவைத்தோம், குப்பையில் கிடந்த கரித்துண்டை எடுத்து பக்கத்துச் சுவரில்.</p>
<p>காகம் &#8211; பிறப்பு :- தெரியாது</p>
<p>இறப்பு :- 1990.02.05 என்று எழுதினேன். பிறகு வகுப்புக்குள் வந்து பார்த்தால் சுவரில் இருந்த கரும்பலகை காணாமல் போயிருந்தது. அது எங்கள் வகுப்பறையில்லை. ஆசிரியர்மார் ஓய்வு எடுக்கும் அறை என்பது; அட்டணக்கால் போட்டு ஒரு ஆசிரியர் இருப்பதைக் கண்டதும்தான் இருவருக்கும் வெளித்தது.</p>
<p>*</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/articles/short-stories/short-story-ahmed-faisal/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஒரு தேநீர் ஒரு குவளை &#8211; அகமது ஃபைசல்</title>
		<link>https://tamilnaadi.com/articles/short-stories/a-mug-of-tea-ahmed-faisal/</link>
					<comments>https://tamilnaadi.com/articles/short-stories/a-mug-of-tea-ahmed-faisal/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Sep 2021 16:36:37 +0000</pubDate>
				<category><![CDATA[சிறுகதை]]></category>
		<category><![CDATA[A mug of tea]]></category>
		<category><![CDATA[Ahmed Faisal]]></category>
		<category><![CDATA[அகமது ஃபைசல்]]></category>
		<category><![CDATA[ஒரு தேநீர் ஒரு குவளை]]></category>
		<category><![CDATA[தேநீர்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=5787</guid>

					<description><![CDATA[ஒரு தேநீர் ஒரு குவளை &#8211; அகமது ஃபைசல் “நாக்குத்தானே இதுக்கெல்லாம் காரணம்&#8230; இந்தாடி கத்தி நாக்க வெட்டி எறி” கத்தியைக் கொடுத்து நாக்கை வெட்டச் சொல்லும்போது பார்த்துக் கொண்டிருந்த சக்கியாவின் மகள் சட்டெனப் பாய்ந்து கத்தியைப் பறித்து, வெளியே தொங்கிக் கொண்டிருந்த நாக்கை ஒரே வெட்டில் துண்டாக்கியதும், அந்த நாய் பொம்மை அழ ஆரம்பித்தது போல் முகம் சுருங்கிற்று. கீழே நாயின் நாக்கு விழுந்ததா? இல்லை. அங்கு ஒரு கரப்பான் பூச்சிதான் ஓடியது. அவள் தன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஒரு தேநீர் ஒரு குவளை &#8211; அகமது ஃபைசல்</h4>
<p>“நாக்குத்தானே இதுக்கெல்லாம் காரணம்&#8230; இந்தாடி கத்தி நாக்க வெட்டி எறி” கத்தியைக் கொடுத்து நாக்கை வெட்டச் சொல்லும்போது பார்த்துக் கொண்டிருந்த சக்கியாவின் மகள் சட்டெனப் பாய்ந்து கத்தியைப் பறித்து, வெளியே தொங்கிக் கொண்டிருந்த நாக்கை ஒரே வெட்டில் துண்டாக்கியதும், அந்த நாய் பொம்மை அழ ஆரம்பித்தது போல் முகம் சுருங்கிற்று. கீழே நாயின் நாக்கு விழுந்ததா? இல்லை. அங்கு ஒரு கரப்பான் பூச்சிதான் ஓடியது.</p>
<p>அவள் தன் நாய் பொம்மைக்கு தேநீர் கொடுப்பது வழக்கம்.</p>
<p>எப்போது பார்த்தாலும் நாயின் வாயுக்குள் தேநீரை ஊற்றி விளையாடுவதையே வேலையாக்கி வைத்திருந்தாள்.</p>
<p>&#8220;இந்தாடி நாய்த் தேநீர்&#8221; என்றாள் சக்கியா. மகளுக்கு, புது வீட்டில் காச்சிய பால் போன்று சந்தோசம் பொங்கிற்று.</p>
<p>காட்டில் எந்த விலங்கு ராஜா? அதுபோல் அவள் வீட்டு பண்டம் பாத்திரங்களுக்கு ராஜாவாக இருந்தது அந்தக் குவளை. மான் தோலின் மென்மையுடன் இருக்கும் அதன் வெளிப்புறம். தூரே நின்று பார்த்தால் அதன் உதடு அசைவது போலிருக்கும். அது மிகவும் அழகாக இருக்கும். அது ஒரு ராஜ வம்சத்து வீட்டில் இருந்திருக்க வேண்டும். அல்லது ஒரு சிறந்த மந்திரவாதி வைத்திருந்திருக்க வேண்டும். சீன தேசத்து வல்லுநர் கை வண்ணம் போலவும் இருந்தது. இதன் பெறுமதி தெரிந்திருந்தால் அதில் நாய்த் தேநீரைக் கேட்டு பிடிவாதமாக இருப்பாளா மகள். &#8220;இவளொருத்தி அந்திக்கும் சந்திக்கும் தேநீர்தான் கேப்பாள்&#8221; என்று எரிந்துகொண்டே அங்குட்டு நடந்தாள் சக்கியா.</p>
<p>குசினிப் பக்கமாகப் போய் அந்தக் குவளையுள் அவளுக்கு மாத்திரம் கொஞ்சம் தேநீரை ஊற்றிப் பருகினாள். பருகும்போது, நாய் பொம்மை அழுவதை நிறுத்தியதுபோல் அவளை உற்றுப் பார்த்தது. நாக்கு இருந்திருந்தால் பேசியிருப்பேன், நியாயத்தைக் கேட்டிருப்பேன். என்பதுபோல் அந்த நாயின் கண்கள் இருந்தன.</p>
<p>“டிடிங்…..டிடிங்…” பெல் சத்தம்.</p>
<p>சக்கியாவும், மகளும் போய்க் கதவைத் திறந்தார்கள்.</p>
<p>எதிர்பார்த்தபடி அங்கு யாருமில்லை.</p>
<p>மாறாக இன்னொரு அறை எதிரே தென்பட்டதுபோல் இருந்தது. அதன் கதவைத் திறந்தாள். அது அந்த அறையின் ஜன்னல் கதவு. அவள் அதிர்ச்சியடையவில்லை. அப்போது வீசியது ஒரு கூதல் காற்று. அது இருவர் உடலையும் தள்ளிவிட்டு வீட்டுக்குள் நூழைந்து சென்று குவளையுள் இருந்த மீதித் தேநீரைப் பருகத் தொடங்கியது.</p>
<p>“..ஆ&#8230; காத்து நல்லாக் குளிருது எங்கேயோ நல்ல மழ பெய்யுது உம்மோ” என்றாள் மகள். சக்கியாவின் உடல் உரோமங்கள் எழுந்து நின்றன யாருக்கோ மரியாதை செய்வதுபோல். பிறகு கொஞ்சம் பலத்தைப் பிரயோகித்த காற்று அவள் மார்பில் கிடந்த சேலையை நோகாமல் எடுத்து, குளிரால் நடுங்கிய கதவின் சிறு பகுதியில் போட்டது. அந்த நிமிசம் அவள் காற்றை மட்டும் மார்பில் வாங்கிக்கொண்டாள். சில்லென்று வந்த குளிரோடு சில நிமிடம் போராடினாள். பெருத்த மழைத்துளிகள் அவள் மார்பில் விழுந்து மாயமாகின. ஈரத்தின் வாசனை எங்கும் பரவத் தொடங்கியது. இலேசான தலைச் சுற்றலில் நடுங்கிப் போனவளாய் கீழே தரையில் அமர்ந்துகொண்டாள் சக்கியா.</p>
<p>அந்தக் குவளையில் ஆவி பறக்கும் தேநீருடன் சக்கியாவின் முன்னால் வந்து நின்றான் அலான். &#8220;என்னாச்சி சக்கியா ஏன் இப்புடி கீழ கிடக்கிற எழும்பு இதக்குடி&#8221; என்றான் பரிவோடு. தேநீரை வாங்கிக் குடித்தவளுக்கு மெல்ல தலைச்சுற்றல் நீங்கியது. &#8220;என் உடல் ஆக்கையத்துப்போச்சு&#8221; என்று சொல்லியபடி கதவு நிலையில் முதுகைச் சாய்த்தாள்.</p>
<p>அவள் கண்கள் அலானின் கூரான மூக்கின் பக்கம் சாய்ந்தன. ஆந்து சோந்துபோன அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் அலான். &#8220;உம்மா என்னாச்சி உம்மா உனக்கு&#8221; என்றாள் மகள். மகளின் குரலைக் கேட்டவளுக்கு அந்த மழை நாள் ஞாபகம் வந்தது.</p>
<p>அலான் எப்போதும் சோடா மூடியை பற்களால்தான் திறப்பான். “உஸ்” என்ற சத்தத்தோடு சீறி வரும் நுரை அவனுக்குப் பிடிக்கும்.</p>
<p>சக்கியாவின் முதல் சந்திப்பு ஒரு போத்தல் சோடா உடைத்தலில்தான் ஆரம்பித்தது. அந்த ஒரு நிமிட நுரை பொங்கியது போன்றுதான் அவர்களுக்கிடையில் காதலும் பொங்கிற்று.</p>
<p>அன்றும் நல்ல மழை பெய்தது ஞாபகமிருக்கிறது.</p>
<p>அதை மழை என்பதை விட தண்ணீரின் இசை எனலாம். தண்ணீரின் இசை என்பதை விட தண்ணீரின் நடனம் எனலாம்.</p>
<p>தண்ணீர் என்றும் இளமையுடன் இருப்பதால்தான் இத்தனை பெரிய நடனத்தை தன்னால் ஆட முடிகிறது.</p>
<p>மேசை மீது குளிர்ந்தபடி இருந்த சோடாப் போத்தலைத் தொட்டதும் சுட்டுவிட்டதுபோல் சட்டென அவள் குளிரின் சிறையிலிருந்து தன் விரல்களை விடுவித்துக்கொண்டாள். அலான் அந்தப் போத்தலை அவளிடமிருந்து வாங்கி அதன் மூடியை பற்களால் கடித்து திறந்தான். &#8220;உஸ்&#8221; என்றது போத்தல். வெள்ளை நுரை பொங்கி வந்தது.</p>
<p>அந்த ஹோட்டலில் வேலை செய்யும் பொடியன் இதையெல்லாம் பார்த்தவாறு அர்த்தம் புரிந்ததுபோல் அவன் துளிர் மீசையை தடவினான்.</p>
<p>“சாப்பிட ஏதாச்சும் வேணுமா?” என்றான் சற்று அருகில் வந்து. &#8220;உஸ்&#8221; என்ற சோடாப் போத்தலை ஒரு முறை பார்த்தான். வேறு எதுவும் அவர்களைக் கேட்காமல் திரும்பி நடந்தான். மழையில் குடையை நனைத்தபடி உள்ளே அவள் வந்தாள். குடையை மடித்து அருகில் உள்ள சுவர் மூலையில் வைத்தாள். அவள் பெயர் நஸ்தயா என்று சக்கியா அவளை அலானிடம் அறிமுகப்படுத்தினாள். அலானின் நீண்ட மூக்கில் இருந்த மச்சத்தை பார்த்த நஸ்தயா சுடர் குறைந்த ஔித் துளியாய் சிரித்தாள். &#8220;மூக்குல என்ன மச்சமா&#8221; என்றாள் பக்கத்துக் கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தபடி.</p>
<p>“உம்மா..ஹால் பெல் அடிச்சது யாரு.?..இங்க அப்படி யாருமில்லையே..” என்றாள் மகள். &#8220;அன்று அலானின் மச்சத்தை அவ்வளவு நேரமாக புகழ்ந்தாளே நஸ்தயா ஏன்? என்ற கேள்வி இப்போது இந்த நேரத்தில் எதற்கு என் மனதில் தோன்ற வேண்டும்&#8221; என்று அலானிடம் திருப்பிக் கேட்டாள். அவன் ஏதும் பேசவில்லை.</p>
<p>&#8220;யாரையும் காணலியே” என்றாள் திரும்பவும். மகளின் முகத்தைப் பார்த்து தலையசைத்தாள். இருந்த இடத்தை விட்டு மெல்ல எழுந்தாள்.</p>
<p>“அலான் இந்தக் குவளை ஞாபகமிருக்கா?” என்றாள். மகளை ஒரு கையால் அணைத்து நடந்தாள்.</p>
<p>“ம்..ம் உன் உதடுகளுக்குத்தான் அதிகம் பழக்கப்பட்டிருக்கு இந்தக் குவளை நஸ்தயா உனக்காக தந்ததாச்சே&#8221;</p>
<p>&#8220;ம்..ம்..&#8221; என்றாள்.</p>
<p>“உம்மா கூதல்ல ஒடம்பெல்லாம் ஊசி போடுற மாதிரி இரிக்கி உள்ள கெதியா வாம்மா போகலாம்..” சொல்லி வாய் எடுக்கவில்லை மழையை யாரோ தூண்டிலிட்டு பிடிக்க முயற்சிப்பது போன்று மின்னல் அடித்து.</p>
<p>அப்போது வீசிக் கொண்டிருந்த காற்றிடமிருந்து தப்பித்து வீட்டினுள் தஞ்சம் புகுந்தது அந்தப் பலா இலை. பாதி மஞ்சளும் பாதி பச்சை நிறமுமாய் இருந்தது. வீட்டுக்குள் புகுந்த மாத்திரத்தில் சுவரோடு ஒட்டிக்கொண்டது. அருகே இருந்த பல்லி என்ன நினைத்ததோ விரண்டோடியது.</p>
<p>தேநீரை அருந்தி முடித்த சக்கியா அந்த மார்பிள் தரையில் அமர்ந்து அலானின் மடியில் சற்று தலையைச் சாய்த்தாள். மகளும் அருகில் அமர்ந்து கொண்டாள். “டிடிங்…..டிடிங்…..”ஹால் பெல் அலறும் சத்தம். “மகள் போய் யாருன்னு பாரு” தன் மகளின் தோளில் கையை வைத்து அழுத்திச் சொன்னாள். &#8220;எரசலடிக்குது ஜன்னல சாத்து மகேள்&#8221; என்றாள் திரும்பவும்.</p>
<p>“யாருமில்ல வாப்பா” என்று போன வேகத்திலே திரும்பி ஓடி வந்தாள் அவள்.</p>
<p>அப்போது வீடெங்கும் ஒரு குகையின் அமைதி நிலவியது. அரபு மண்ணின் வாசனையும் பரவியது. ஓமானிலிருந்து விடுமுறையில் வந்தபோது கொண்டுவந்த அந்த தொப்பியை மகள் தலையில் அணிந்துகொண்டு வந்து நின்றாள். அது அழகான, நூல் அலங்காரங்கள் கொண்ட, சற்று உயரமான தொப்பி. ஓமானிகளை அந்த தொப்பியோடு பார்த்தால், அதிலும் ஓமான் சிறுவர்கள் அப்படி வடிவாக இருப்பார்கள். மகளின் தலையில் அந்த தொப்பியைப் பார்த்ததும் சக்கியாவுக்கு; குடும்பத்தோடு ஓமானில் இருந்த நாட்களும், கண்ட மலைத் தொடர்களும், குகைகளும் ஞாபகத்திற்கு வந்திற்று. ஓமானில் இருந்த அத்தனை வருடமும் விடுமுறையை அற்புதமாக கழித்தாள்.</p>
<p>மலைத் தொடர்கள் செறிந்த இடமெல்லாம் சென்று பார்த்து வியந்திருந்தாள். அன்றும் அப்படி ஒரு விடுமுறை நாள்தான். ஓமானின் பெரிய அகலமான மலைக் கிணற்றைக் கண்டு வியந்தாள். அது தடாகம் போன்றது. கிணற்றின் உள்ளே இறங்கிப் பார்ப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த ஏணிப்படி வழியாக உள்ளே இறங்கிப் போய் கிணற்றின் நீல நீரைப் பார்த்துச் சிலிர்த்தாள்.</p>
<p>உயரத்திலிருந்து சிறுவர்களும், பெரியவர்களும் அந்த தெளிந்த நீலத் தண்ணீரில் குதித்து, குளித்து விளையாடினார்கள். அதில் ஒருவன் தண்ணீரின் அழகையும், அதன் குளிரையும் அரபு மொழியில் வர்ணித்துப் பேசிக்கொண்டு குதித்தான். &#8220;ழபாக்&#8221; என்ற ஓசையில் தண்ணீர் மேலே உயர்ந்து விழுந்தது. அந்த மலைக் கிணற்றைச் சுற்றி கம்பித் தடுப்பு போட்டிருந்தது. அந்தக் கம்பியைப் பிடித்தபடி அலான் தலையை நூறு அடிக்கும் அதிகமான ஆழத்திற்கு குனிந்து அந்த நீலத் தண்ணீரைப் பார்த்துக்கொண்டு நின்றான். அலானை அண்ணார்ந்து பார்த்து</p>
<p>&#8220;அலாஆ…..ன்&#8221; என்று சத்தமாகக் கூப்பிட்டாள். கீழே இருந்து நூறு அடி உயர்ந்து மேலே வந்து அலானின் காதுகளைச் சுற்றி வளையமிட்டது அவளின் சத்தம். சற்று நேரம் &#8220;அலா….ஆ&#8230;ன்&#8221; என்று அந்தக் கிணறு கூப்பிட்டது போல்தான் இருந்தது. கழுத்தில் இருந்த துப்பட்டாவை இடுப்பிலே கட்டிக்கொண்டாள். அந்த நீலத் தண்ணீரின் கண்கள் அவளின் மார்பை பார்த்த ஒவ்வொரு கணமும் ஒரு படி மேலே உயர்ந்து அசைந்தது. பக்கத்தில் நின்றிருந்த பிலிப்பைன்ஸ்காரி அவளது தாய் மொழியில் ஏதோ, யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். அவளின் கையடக்கத் தொலைபேசி இளஞ்சிவப்பு நிறமாக இருந்தது.</p>
<p>அவளின் இன்னொரு கையில் இருந்தது tea time கடையில் வாங்கிய மசாலா டீ. அதன் ஆவி குட்டிப் பாம்புகள் போல் நெளிந்து மேல் நோக்கிச் சென்றது. &#8220;ஜீப் வாஹித் ச்ஷாய் மசாலா&#8221; என்றான் ஒரு இள வயது ஓமானி. அவன் குரல் அலானின் காதுகளில் வந்து பாய்ந்தது. கிணற்றைச் சுற்றியிருந்த உறுண்டைக் கம்பித் தடுப்பில் சாய்ந்துகொண்டிருக்கும் பலரது கைகளிலும் அந்த மசாலா டீ இருப்பதை அவதானித்தான். அந்த tea time கடையும் மிக அருகேதான் இருந்தது. பாதாம் பருப்பை சிறு சிறு துண்டுகளாக்கி டீயில் போட்டிருப்பர். அபாரமான சுவை. &#8220;சேட்டா ரெண்டு மசாலா டீ கொடு&#8221; என்றான் அலான்.</p>
<p>ஒரே தடவையில் கிடைத்த இரண்டு ஆஸ்கார் விருதைப்போல கைகளில் டீயை ஏந்தி வந்து &#8220;சக்கியா மேலே வா டீ குடிப்பம்&#8221; என்றான். அவனது குரல் அந்த ஏணிப்படிகளால் இறங்கிப் போய் அவள் காதுகளைக் கடித்தது. அப்போதுதான் அவன் எதிரில் பளிச்சிடும் அந்த உருண்டைக் கம்பியை விரல்களால் மெல்ல பிடித்து நின்றாள் ஒரு இளம் பெண். அவள்தான் ஓமானின் இறுதிப் பெண்ணோ என வியக்கும் அழகில் ஜொலித்தாள். அன்னநடை போட்டு சக்கியா வெளியே வருவதற்குள் அவன் மசாலா டீயின் முதல் மிடரை அருந்தி, ஜொலிக்கும் அந்த அழகியின் பக்கம் கண்களைச் சாய்த்தான். அடுத்த மூன்றாவது வினாடியே கண்களை சக்கியாவின் பக்கம் வீழ்த்தவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தான். அதன் பிறகு அந்தக் குதிரை வட்டியை, அதன் பிறகு; இலைகளை அழகாக வெட்டி பந்து போல் அலங்கரிக்கப்பட்ட மரங்களை என்று எங்கெல்லாமோ அவன் பார்வை பரவியது. சிமெந்து கற்கள் பரவிய நடை பாதையில் அந்தக் குதிரை வண்டி ஓடும் சத்தத்தை சிலர் பார்த்துக்கொண்டு நின்றார்கள். அந்த பூங்காவுக்குள் ஒரு சுற்று சுற்றி வர ஒரு ரியால் வாங்கினார் கிழவர். க்ளக் க்ளக் க்ளக் க்ளக் சத்தம் குதிரை வண்டிக்குப் பின்னால் ஓடிப்போகிறது. &#8220;அந்த சத்தத்தை வண்டியில் ஏற்ற கிழவர் சம்மதிப்பாரா&#8221; என்று சக்கியாவைப் பார்த்துக் கேட்டான் அலான். மசாலா டீயை அருந்தியவள் அரை குறையாக சிரித்தாள். &#8220;தூக்கத்தில் நாக்கைக் கடித்தவன்போல் வாயைத் திறந்து இடைக்கிடையே சிரிக்கும் அந்தக் கிழவரை எங்கோ பார்த்த மாதிரியும், பழகின மாதிரியுமே இருக்கிறது இந்தக் கிழவர் முகத்தில என்ட வாப்பாட முகம் இருக்கு உங்களுக்கு ஏதாவது தோனுதா&#8221;</p>
<p>&#8220;எனக்கும் அப்புடித்தான் தோனுது&#8221;</p>
<p>செல்போன் மணி அடித்தது. சத்தம் வீட்டின் அமைதியைக் கலைத்தது. சக்கியாவின் ஓமான் நினைவுகளும் சேர்ந்தே கலைந்தது.</p>
<p>&#8220;மாஷா வாப்பாட போன எடுங்க&#8221;</p>
<p>&#8220;ஹலோ யாரு நஸ்தயாவா&#8221;</p>
<p>&#8220;ஆமா நான்தான். என்ன ஒன்ட வீட்ட நல்ல மழ பெய்யுதா சத்தமா இருக்கி?&#8221;</p>
<p>&#8220;இல்ல இது மழ இல்ல தண்ணீ விழிச்சிட்டிருக்கு தண்ணீட கண்கள்தான் நிலமெல்லாம் விழுந்திட்டிருக்கு&#8221;</p>
<p>&#8220;இது யார்ர கவித? எல்லாம் இருக்கட்டும் முதல்ல என்ன மன்னிச்சிடு&#8221;</p>
<p>&#8220;ஏன் உன்ன மன்னிக்க என்னாச்சு&#8221;</p>
<p>&#8220;எங்க வாப்பா மூனு நாளா வீட்ல இல்ல எங்க கூட சண்ட போட்டு வெளியேறிப் போயிட்டாரு&#8221;</p>
<p>&#8220;அதேன்? கொஞ்சம் வெவரமா சொல்லு&#8221;</p>
<p>&#8220;எல்லாத்துக்கும் காரணம் நான் ஒனக்குத் தந்த பேத் டே கிப்டு, அந்த மாயக் &#8220;கப்&#8221; தான் அது என்ட வாப்பாட நான்தான் அது தெரியாம ஒனக்குத் தூக்கித் தந்துட்டன் பிளீஸ் என்ன மன்னிச்சிடு ஒனக்கு ஒரு தங்கச் செயின் வாங்கி வச்சிருக்கன் அத கிப்டா தாரன் அந்தக் கப்ப குடுத்திடு சக்கி&#8221;</p>
<p>&#8220;இதானா விசியம் வந்து எடுத்துக்கோ&#8221;</p>
<p>&#8220;தேங்ஸ்டி நா இப்பவே வாரன்&#8221; அவள் பேசிய செல்போனைக் கீழே வைக்கவில்லை வாசல் கதவடியில் பெல் சத்தம் கேட்டது.</p>
<p>&#8220;நஸ்தயா இவ்வளவு வேகமா வந்துட்டாளா?&#8221; என்று வியந்தாள் சக்கியா.</p>
<p>&#8220;இல்ல நான் நஸ்தயாட வாப்பா. யார்ர வீட்டுலயும் மழ பெய்யல உங்க வீட்டுல மட்டும் மழ பெய்யுது அதான் இங்க வந்தன். என்ர மாயக் குவளை இங்கதான் இருக்கு. என்ர மாயக் குவளைக்கு இன்று பிறந்த நாள் அதுதான் அது இருக்கிற வீட்டுல மட்டும் மழ பெய்யுது&#8221; என்றார் வீட்டுக்கு உள்ளே வந்தவர்.</p>
<p>&#8220;தேநீர்க் குவளைக்கு பிறந்த நாளா?&#8221; என்று அவரைக் கேட்டு வியந்தாள் சக்கியா.</p>
<p>&#8220;நீங்க பிறந்த நாள் கொண்டாடலாம் ஆனா என்ர குவளை பிறந்த நாள் கொண்டாடக் கூடாதா? அந்தக் குவளை என் கைக்கு எப்போ வந்துச்சோ அந்த நாள்தான் என்ர குவளையின்ர பிறந்த நாள். அதுன்ர ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் அது இருக்கிற வீட்ல மட்டும் நல்ல மழ பெய்யும்&#8221;என்றார் அவர் உற்சாகத்துடன். அவர் வலது கண் இமை கக்கட்டி வந்ததுபோல் வீங்கி இருந்தது.</p>
<p>அந்தக் குவளையில் சூடான தேநீர் கொண்டுவந்து அவருக்குக் கொடுத்து அவரை உபசரித்தான் அலான்.</p>
<p>அவர் ஆத்திரத்துடன் தேநீரைக் கீழே ஊற்றினார். தேநீர் நிலத்தில் விழாமல் மறைந்து மாயமாய்ப் போனது.</p>
<p>&#8220;அந்தக் கப்ப அவர்ட்ட கொடுக்காத&#8221; என்றாள் உள்ளே வந்த வேகத்தில். &#8220;இவர் என்ட வாப்பா இல்ல&#8221; என்றாள் நஸ்தயா.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="wp-image-5790 aligncenter" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/book-1-e1630513740483-195x300.jpeg" alt="book 1 e1630513740483" width="583" height="896" title="ஒரு தேநீர் ஒரு குவளை - அகமது ஃபைசல் 2"></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/articles/short-stories/a-mug-of-tea-ahmed-faisal/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
