<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கலாசாரம் &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/category/articles/culture/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 17:03:08 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>கலாசாரம் &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>காதலில் விழுந்து விட்டீர்களா? &#8211; இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!!</title>
		<link>https://tamilnaadi.com/articles/culture/have-you-fallen-in-love-just-dont-make-these-mistakes/</link>
					<comments>https://tamilnaadi.com/articles/culture/have-you-fallen-in-love-just-dont-make-these-mistakes/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sun, 18 Dec 2022 10:25:50 +0000</pubDate>
				<category><![CDATA[கலாசாரம்]]></category>
		<category><![CDATA[life style]]></category>
		<category><![CDATA[Love]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=68078</guid>

					<description><![CDATA[பலரும் திரைப்படங்களை பார்த்து ஓஹோ இதுதான் காதலா என்று ஏமாந்து போயிருக்கிறார்கள். காவியமோ, கதையோ அவற்றில் பாதி புனைவு என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை. எல்லா இடத்திலும் மாறாமல் சொல்லப்படுவது காதலுக்காக விட்டுக்கொடுங்கள், தியாகம் செய்யுங்கள் , சமரசம் செய்துக் கொள்ளுங்கள் என்பதே. ஆனால் , உண்மையில் தியாகமும் சமரசமும் காதலை உருவாக்காது. அப்படி நாம் காதல் என்று நம்பி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கும் 5 தவறான புரிதல்களை சரியாக புரிந்து கொள்வோம். 1. கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பலரும் திரைப்படங்களை பார்த்து ஓஹோ இதுதான் காதலா என்று ஏமாந்து போயிருக்கிறார்கள். காவியமோ, கதையோ அவற்றில் பாதி புனைவு என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை.</p>
<p>எல்லா இடத்திலும் மாறாமல் சொல்லப்படுவது காதலுக்காக விட்டுக்கொடுங்கள், தியாகம் செய்யுங்கள் , சமரசம் செய்துக் கொள்ளுங்கள் என்பதே. ஆனால் , உண்மையில் தியாகமும் சமரசமும் காதலை உருவாக்காது. அப்படி நாம் காதல் என்று நம்பி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கும் 5 தவறான புரிதல்களை சரியாக புரிந்து கொள்வோம்.</p>
<p><strong>1. கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகல</strong></p>
<p>உங்களுக்கு ஒருவரை பிடித்திருக்கலாம். அவருக்கும் உங்களை பிடித்திருக்கலாம். இருவரும் பரஸ்பர புரிதலோடு காதல் செய்யலாம். இருப்பினும் இருவருக்குள்ளும் எப்போதும் போர் மூட்டமாக இருக்கிறது.</p>
<p>அப்படியென்றால் உங்களுக்குள் படங்களின் பாணியில் சொல்வதென்றால் கெமிஸ்ட்ரி வேலை செய்யவில்லை என்று அர்த்தம். அது உங்கள் உறவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து விடும்.</p>
<p><strong>2. நிஜமான முகம்</strong></p>
<p>ஒரு காதல் அமையும் வரை பின்னாடியே சுற்றித் திரிந்து கெஞ்சி கூத்தாடி காதலை ஓகே செய்வது. அதுவே பிரச்சினைக்குரிய விஷயம்தான். இதில் காதல் அமைந்தவுடன்தான் உண்மையான முகத்தை காட்ட ஆரம்பிப்பது. தன்னுடைய லவ்வர் தன்னை விட்டு எங்க போகப்போறாங்க என்ற நினைப்பு வந்து விடுகிறது.</p>
<p>வல்வவன் பட சிம்புக்கு ரீமாசென் கொடுக்கும் தொல்லை போல கொடுக்க துவங்குவது. பிறகு, லவ்வர் எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பித்தால் நான் உன்னை எவ்வளவு காதல் செய்கிறேன் தெரியுமா அன்பு இருக்கும் இடத்தில்தான் கோபம் இருக்கும் என்று உருட்டுவது. இது உங்களின் மீதும் உங்களின் டாக்ஸிக் காதலின் மீதும் வெறுப்பை விதைக்குமே தவிர காதலை அதிகப்படுத்தாது. எனவே , அந்தக் காதல் நீண்ட காலம் நீடிக்காது. அப்படியும் சிலர் சகித்துக் கொண்டு காலத்தை ஓட்டுவதுண்டு..</p>
<p><strong>3. இரட்சகர் மனநிலை</strong></p>
<p>வாழ்க்கையில் பல தடைக்கற்கள் இருக்கும். அவற்றை தாண்டி சாதிக்க வேண்டும் என்ற மோட்டிவேஷன் வசனமெல்லாம் உண்மைதான். ஆனால், அது பரஸ்பர புரிதலோடு அமைய வேண்டும். ஒருவரின் தவறான அனுகுமுறையை பொறுத்துக் கொண்டு, அவர் திருந்தி விடுவார், மாறி விடுவார் என்று தன்னுடைய வாழ்க்கையை அர்பணிப்பது தவறான செயல்.</p>
<p>உங்கள் காதலை சரியாக்குவதற்காக அல்லது சரியான வாழ்வை முன்னெடுப்பதற்காக சில முயற்சிகளை செய்யலாம். ஆனால், அந்த முயற்சியில் உங்களின் சுயவாழ்வை இழக்கும்படி அமையும் போது நீங்கள் சிந்தித்து வெளியேறி விட வேண்டும். அதைவிட்டு உங்களை நீங்களே இரட்சகரை‌ போல் நினைத்துக் கொண்டு காப்பாற்றும் படலத்தில் இறங்கினால் இறுதியில் வெறுமையும் விரக்தியும் மட்டுமே மிஞ்சும்.</p>
<p><strong>4. தப்புனா தப்புதான்</strong></p>
<p>ஒரு காதல் கிடைத்துவிட்டது. இதுதான் நமது கடைசி. இனி வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவோம் என்று மட்டும் முடிவு செய்து கொள்ளாதீர்கள். பின் ஏமாற்றம் உங்களை தின்றுவிடும். ஒரு காதல் என்றால் இன்பம் துன்பம் ஏமாற்றம் வெறுப்பு பிரிவு தனிமை என பல இருக்கும். அது பல நேரங்களில் காதல் முறிவையும் கூட ஏற்படுத்தலாம்.</p>
<p>அந்த கட்டம் உங்களுக்கு கடுமையானதாக இருக்கலாம். நீண்டகால உறவு என்று நினைத்த ஒரு விஷயத்தை எப்படி விடுவது என்று அதிலேயே மூழ்கி விடாதீர்கள். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் ஒரு முறை உடைவதற்கான காரணம் தோன்றிவிட்டால் அது மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு வகையில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அது முழுமையாக இருவரையும் விழுங்குவதற்கு முன் புரிந்துக் கொண்டு விலகி விடுங்கள்.</p>
<p><strong>5. அவசரப்படாதீங்க</strong></p>
<p>உங்கள் காதலை பொறுமையாக தேர்ந்தெடுங்கள். தேடலை மேற்கொள்ளுங்கள். ஐய்யய்யோ இந்த வாய்ப்ப விட்டா நமக்கு காதலே அமையாது என்றெல்லாம் நினைக்காதீர்கள். காதல் என்பது வாய்ப்பு சார்ந்தது அல்ல. வாழ்க்கை சார்ந்தது. சந்தர்ப்பாவாதியாக நீங்கள் காதலை முடிவு செய்யும்போது அது உங்கள் வாழ்க்கையில் மோசமான அனுபவத்தை ஏற்படுத்தலாம். அது வாழ்வின் பெரும் தவறாக அமையலாம்.</p>
<p>எனவே, நிறுத்தி நிதானமாக உங்களுக்கான காதல் அமையும் வரை காத்திருங்கள். 90ஸ் கிட்ஸ் போல கல்யாணமே நடக்கல பாஸ்னு புலம்பாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எத்தனையோ லட்சம் பேரை பார்க்கலாம். அவர்களில் உங்களுக்கானவர்களும் இருக்கலாம். அந்த லட்சத்திலும் இல்லையென்றால் லட்சத்தில் முதலாவது ஆள் உங்களுக்கானவராக இருக்கலாம். பொறுமையே பெருமை.</p>
<p>#LifeStyle</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/articles/culture/have-you-fallen-in-love-just-dont-make-these-mistakes/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா இன்று!</title>
		<link>https://tamilnaadi.com/articles/culture/easter/</link>
					<comments>https://tamilnaadi.com/articles/culture/easter/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Sun, 17 Apr 2022 04:31:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[கலாசாரம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Easter]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=46209</guid>

					<description><![CDATA[உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு பெருவிழா தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து கி.பி. 33ஆம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் உயிர்த்த ஞாயிறு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகின்றது. 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்றிருந்தது. அதேநேரம், கடந்த, ஆண்டு கொரோனா பரவல் காரணமாக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு பெருவிழா தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.</p>
<p>இயேசு கிறிஸ்து கி.பி. 33ஆம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் உயிர்த்த ஞாயிறு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகின்றது.</p>
<p>2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்றிருந்தது.</p>
<p>அதேநேரம், கடந்த, ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஆராதனைகள் இடம்பெற்றிருந்தன.</p>
<p>இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல தேவாலயங்களில் விசேட ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/articles/culture/easter/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மகாசிவராத்திரி நாளில் சிவனுக்கு நான்கு கால அபிஷேகம் &#8230;</title>
		<link>https://tamilnaadi.com/articles/culture/lord-shiva-of-mahasivarathri/</link>
					<comments>https://tamilnaadi.com/articles/culture/lord-shiva-of-mahasivarathri/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Mar 2022 12:10:45 +0000</pubDate>
				<category><![CDATA[கலாசாரம்]]></category>
		<category><![CDATA[kovil]]></category>
		<category><![CDATA[Mahasivarathri]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=40013</guid>

					<description><![CDATA[சிவபெருமானுக்கு அன்றாடம் நடைபெறும் பூஜைகளில் அபிஷேகம் செய்வதற்கு என்று பால், தயிர், அன்னம், தேன் என அபிஷேகப் பொருட்கள் இருந்தாலும், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், கொம்புத்தேன், கரும்புச்சாறு என்றால் கொள்ளை பிரியம். அதிலும், மஹா சிவராத்திரி அன்று நடைபெறும் நான்கு ஜாம கால பூஜைகளிலும் நடைபெறும் அபிஷேகத்தில் இந்த நான்கு அபிஷேகப் பொருட்களே முக்கிய பங்கு வகிக்கும். இந்த நான்கு வகையான அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை நாம் பார்க்கலாம். மகாசிவராத்திரி தினத்தில் சிவபெருமானுக்கு நான்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிவபெருமானுக்கு அன்றாடம் நடைபெறும் பூஜைகளில் அபிஷேகம் செய்வதற்கு என்று பால், தயிர், அன்னம், தேன் என அபிஷேகப் பொருட்கள் இருந்தாலும், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், கொம்புத்தேன், கரும்புச்சாறு என்றால் கொள்ளை பிரியம். அதிலும், மஹா சிவராத்திரி அன்று நடைபெறும் நான்கு ஜாம கால பூஜைகளிலும் நடைபெறும் அபிஷேகத்தில் இந்த நான்கு அபிஷேகப் பொருட்களே முக்கிய பங்கு வகிக்கும். இந்த நான்கு வகையான அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone wp-image-40014" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2022/02/samayam-tamil-1-300x225.jpg" alt="samayam tamil 1" width="446" height="334" title="மகாசிவராத்திரி நாளில் சிவனுக்கு நான்கு கால அபிஷேகம் ... 5" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2022/02/samayam-tamil-1-300x225.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2022/02/samayam-tamil-1-1024x766.jpg 1024w, https://tamilnaadi.com/wp-content/uploads/2022/02/samayam-tamil-1-768x575.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2022/02/samayam-tamil-1.jpg 1200w" sizes="(max-width: 446px) 100vw, 446px" /></p>
<p>மகாசிவராத்திரி தினத்தில் சிவபெருமானுக்கு நான்கு ஜாமங்களில் நடைபெறும் நான்கு விதமான அபிஷேகங்களால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். முதல் ஜாமத்தில் பஞ்சகவ்ய அபிஷேகம் செய்வதால் மன அழுக்குகள் நீங்கும், இரண்டாம் ஜாமத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதால் காரியத் தடை நீங்கும், மூன்றாம் ஜாமத்தில் கொம்புத்தேன் அபிஷேகம் செய்வதால் ஆரோக்கியம் பெருகும், நான்காம் ஜாமத்தில் கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் உடல் வலிமையும் கூடும்.</p>
<p><strong>முதல் ஜாமம்-பஞ்சகவ்யம்</strong></p>
<p>சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகத்தில் அவருக்கு மிகவும் பிடித்தமானது, பஞ்சகவ்ய அபிஷேகம். பஞ்சகவ்யம் என்பது பால், தயிர், நெய், கோமயம்(சாணம்), கோசலம் என்பன. மஹாசிவராத்திரியில் முதல் ஜாமத்தில் செய்யப்படுவது பஞ்சகவ்ய அபிஷேகம் தான். இதை மூவர் தமிழ் எனப்படும் தேவாரப் பாடலில் &#8220;ஆவினுக்கு அருங் கலம் அரன் அஞ்சாடுதல்&#8221; என குறிப்பிடப்பட்டுள்ளது. கோமியம் கலந்த பஞ்சகவ்யத்தால் பத்து குடம் அபிஷேகம் செய்வதால், நம் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேகத்தையும் உள்ள சுகத்தையும் பெறலாம்.</p>
<p><img decoding="async" class="alignnone wp-image-40015" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2022/02/lord-shiva-1200x800-1-300x200.jpg" alt="lord shiva 1200x800 1" width="371" height="247" title="மகாசிவராத்திரி நாளில் சிவனுக்கு நான்கு கால அபிஷேகம் ... 6" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2022/02/lord-shiva-1200x800-1-300x200.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2022/02/lord-shiva-1200x800-1-1024x683.jpg 1024w, https://tamilnaadi.com/wp-content/uploads/2022/02/lord-shiva-1200x800-1-768x512.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2022/02/lord-shiva-1200x800-1.jpg 1200w" sizes="(max-width: 371px) 100vw, 371px" /></p>
<p><strong>இரண்டாம் ஜாமம்-பஞ்சாமிர்தம்</strong></p>
<p>மஹாசிவராத்திரி தினத்தின் இரண்டாம் ஜாமத்தில் சிவபெருமானுக்கு செய்யப்படுவது பஞ்சாமிர்த அபிஷேகம் ஆகும். அப்போது பத்தாயிரம் பழங்கலால் பஞ்சாமிர்தம் செய்து, அதை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் நம் வாழ்வில் எதையும் வீரதீரத்துடன் செய்து முடிக்கும் பக்குவமும் மனோபலமும் கூடும், அதோடு நாம் மேற்கொள்ளும் அனைத்து காரியங்களிலும் இருந்த தடைகள் அகன்று வெற்றி நம் வசப்படும்.</p>
<p><img decoding="async" class="alignnone wp-image-40016" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2022/02/lord-siva-600-23-1487840198-1645777791-300x225.jpg" alt="lord siva 600 23 1487840198 1645777791" width="351" height="263" title="மகாசிவராத்திரி நாளில் சிவனுக்கு நான்கு கால அபிஷேகம் ... 7" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2022/02/lord-siva-600-23-1487840198-1645777791-300x225.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2022/02/lord-siva-600-23-1487840198-1645777791.jpg 600w" sizes="(max-width: 351px) 100vw, 351px" /></p>
<p><strong>மூன்றாம் ஜாமம்-கொம்புத்தேன்</strong></p>
<p>மஹாசிவராத்திரி நாளின் மூன்றாம் ஜாமத்தில் சிவபெருமானுக்கு செய்யப்படுவது கொம்புத்தேன் அபிஷேகம் ஆகும். சுத்தமான கொம்புத்தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் நம் மனதில் ஏற்பட்ட துக்கங்கள் அனைத்தும் தொலைந்து போகும். அதோடு, நம் குரல் வளம் பெற்று, மனதை மயக்கும் இனிய கானம் பாடும் குரல் வளம் கிடைக்கப்பெறும். ஆரோக்கியம் பெருகி ஆயுள் பலம் கூடும்.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-40017" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2022/02/shivratri-34-1-1582188311-1645777801-300x169.jpg" alt="shivratri 34 1 1582188311 1645777801" width="326" height="184" title="மகாசிவராத்திரி நாளில் சிவனுக்கு நான்கு கால அபிஷேகம் ... 8" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2022/02/shivratri-34-1-1582188311-1645777801-300x169.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2022/02/shivratri-34-1-1582188311-1645777801.jpg 600w" sizes="(max-width: 326px) 100vw, 326px" /></p>
<p><strong>நான்காம் ஜாமம்-கரும்புச்சாறு</strong></p>
<p>மஹாசிவராத்திரி அன்று நான்காம் ஜாமப் பொழுதில் சிவபெருமானுக்கு செய்யப்படுவது கரும்புச்சாறு அபிஷேகம். கரும்புச்சாறு கொண்டு நாம் சிவபெருமானை அபிஷேகம் செய்வதால், வீட்டிலுள்ள தரித்திர நிலை மாறி, செல்வ வளம் பெருகும். தேக ஆரோக்கியமும் உடல் வலிமையும் கூடும். இந்த அபிஷேக பொருட்களை மகாசிவராத்திரி நாளில் சிவனுக்கு வாங்கிக் கொடுத்து வணங்கலாம்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/articles/culture/lord-shiva-of-mahasivarathri/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>2022 &#8211; பொங்கல் வைக்க நல்ல நேரம்</title>
		<link>https://tamilnaadi.com/articles/culture/2022-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/</link>
					<comments>https://tamilnaadi.com/articles/culture/2022-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Jan 2022 15:49:40 +0000</pubDate>
				<category><![CDATA[கலாசாரம்]]></category>
		<category><![CDATA[pongal]]></category>
		<category><![CDATA[Pongal festival]]></category>
		<category><![CDATA[PongalPurchase]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadipongal]]></category>
		<category><![CDATA[Thaipongal Day]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=34767</guid>

					<description><![CDATA[பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரிய அறுவடை திருநாள். இந்த பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் (ஜனவரி 13) போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாள் (ஜனவரி 14) சூரிய பொங்கல், இரண்டாம் நாள் (ஜனவரி 15) மாட்டு பொங்கல் மற்றும் மூன்றாம் நாள் காணும் பொங்கல் (ஜனவரி 16) கொண்டாடப்படுகிறது. தை 1 அன்று பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 9.30 முதல் 10.30 வரை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரிய அறுவடை திருநாள். இந்த பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் (ஜனவரி 13) போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாள் (ஜனவரி 14) சூரிய பொங்கல், இரண்டாம் நாள் (ஜனவரி 15) மாட்டு பொங்கல் மற்றும் மூன்றாம் நாள் காணும் பொங்கல் (ஜனவரி 16) கொண்டாடப்படுகிறது.</p>
<p>தை 1 அன்று பொங்கல் வைக்க நல்ல நேரம்<br />
காலை 9.30 முதல் 10.30 வரை<br />
மாலை 4.30 முதல் 5.30 வரை</p>
<p>ராகு – காலை 10.30 முதல் 12 வரை<br />
எமகண்டம் – மதியம் 3 முதல் 4,30 வரை<br />
ராகு மற்றும் எமகண்ட நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும்.</p>
<p>மாட்டு பொங்கல் வைக்க உகந்த நேரம்<br />
காலை 7.30 முதல் 8.30 வரை<br />
மாலை 4.30 முதல் 5.30 வரை</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/articles/culture/2022-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>&#8216;வலி சுமந்த வருடமும், புத்தாண்டு வருகையும்&#8217;</title>
		<link>https://tamilnaadi.com/articles/painful-new-year-and-happy-new-year/</link>
					<comments>https://tamilnaadi.com/articles/painful-new-year-and-happy-new-year/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Dec 2021 17:58:06 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[கலாசாரம்]]></category>
		<category><![CDATA[காணொலிகள்]]></category>
		<category><![CDATA[artical]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=32552</guid>

					<description><![CDATA[வலிகளை அள்ளித் தந்த ஆண்டாகவே 2021 எம்மிலிருந்து விடைபெறுகின்றது. அதன் தாக்கம் புத்தாண்டிலும் எதிரொலிக்கவே செய்யும்.  ஆக &#8211; ஏதோவொரு அச்ச உணர்வுடனேயே 2022 இல் காலடி வைக்கின்றோம். கொரோனா என்ற கொடிய அரக்கன் 2020 இல்தான் இலங்கைக்குள்ளும் கால் பதித்தான். தனது கோர  முகத்தைக்காட்டி &#8211; தாண்டவமாடினான். பாதிப்புகளும் வேகமெடுக்க ஆரம்பித்தான். இதனால் சுமார் இரண்டு மாதங்கள்வரை நாடு முற்றாக முடங்கியது. மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. பொது முடக்கத்தின் பின்னர் இயல்பு நிலை திரும்புமென [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வலிகளை அள்ளித் தந்த ஆண்டாகவே 2021 எம்மிலிருந்து விடைபெறுகின்றது. அதன் தாக்கம் புத்தாண்டிலும் எதிரொலிக்கவே செய்யும்.  ஆக &#8211; ஏதோவொரு அச்ச உணர்வுடனேயே 2022 இல் காலடி வைக்கின்றோம்.</p>
<p>கொரோனா என்ற கொடிய அரக்கன் 2020 இல்தான் இலங்கைக்குள்ளும் கால் பதித்தான். தனது கோர  முகத்தைக்காட்டி &#8211; தாண்டவமாடினான். பாதிப்புகளும் வேகமெடுக்க ஆரம்பித்தான். இதனால் சுமார் இரண்டு மாதங்கள்வரை நாடு முற்றாக முடங்கியது. மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது.</p>
<p>பொது முடக்கத்தின் பின்னர் இயல்பு நிலை திரும்புமென நம்பினோம்.  ஆனால் அந்த நம்பிக்கை தவிடுபொடியானது. 2020 நிறைவடையும்வரை வலிகளும், வேதனைகளும் மக்களை துரத்தின. சுற்றுலாத்துறை வீழ்ச்சி, வேலையிழப்புகள், வியாபார நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்கள் என ஆயிரக்கணக்கான பிரச்சினைகளை பட்டியலிடலாம்.</p>
<p>பொது முடக்கம், விலையேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளால் 2020 இலேயே மனம் நொந்துபோயிருந்த இலங்கை வாழ் மக்கள், 2021 ஆம் ஆண்டிலாவது விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையுடனேயே புத்தாண்டில் கால் வைத்தனர். ஆனால் 2021 சிறப்பாக &#8211; தரமாக எம்மை வைத்து செய்துவிட்டது என்றே கூறவேண்டும்.</p>
<p>2020 இல் ஏற்பட்ட பிரச்சினைகள், நெருக்கடிகள் அசுர வேகமெடுத்து 2021 இல் தாண்டவமாடின. இதனால் உயிரிழப்புகள் மட்டுமல்ல ஏராளமான இழப்புகள் அணிவகுத்து நின்றன.</p>
<p>முறையற்ற பொருளாதாரக் கொள்கை, ஊழல் மோசடிகள் மற்றும் தவறான அரசக் கொள்கைகள், கடன் சுமை உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டிருந்த இலங்கை அரசுக்கு, கொரோனாவும் பேரிடியாக அமைந்தது.</p>
<p>வருமான வழிமுறைகள் முடங்கின. அந்நிய செலாவணி உட்பாய்ச்சல் வெகுவாக குறைந்தது. போதா குறைக்கு உலக சந்தையிலும் எதிர்மறையான விளைவுகளே ஏற்பட்டன. இதனால் இலங்கையில் தொடர்ச்சியாக விலை உயர்வுகள் இடம்பெற்றன. மக்கள் நித்திரைக்கு சென்று காலை எழும்பும்போது ஏதாவது ஒரு பொருளின் விலை அதிகரித்திருக்கும் என்ற நிலைமையே காணப்பட்டது.</p>
<p>பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டன. இதனால் மக்களுக்கு பல நாட்களை வரிசையில் கடக்க வேண்டிய பேரவலமும் ஏற்பட்டது.  வாழ்க்கைச்சுமையும் உச்சம் தொட்டது.  குறிப்பாக சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு மற்றும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களானவை ஒட்டு மொத்த மக்களையும் நிலை குலைய வைத்தது.  இப்படி 2021 தந்த வலிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.</p>
<p>அதன் தாக்கம் 2022 இல் பயங்கரமாக இருக்கும் என்பது ஒருபுறம் &#8211; மறுபுறத்தில் பஞ்சம் குறித்தும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அச்சமும், பீதியும் மக்களை சூழவே 2022 பிறக்கின்றது.</p>
<p>பல வீடுகளில் பால் பொங்குவதற்குகூட இம்முறை வழியில்லை.  மேலும் சில வீடுகளில் பல நாட்கள் அடுப்பே எரியவில்லை.  இதனால் ‘இனிய புத்தாண்டு வாழ்த்து’ என வாய்விட்டு &#8211; வாழ்த்துகளை பறிமாற முடியாத நிலை.</p>
<p>இரசாயன உரத்துக்கு தடை விதித்துவிட்டு, சேதன பசளை முறைமைக்கு செல்வதற்கான தீர்மானத்தை கோட்டா அரசு அவசர அவசரமாக எடுத்தது. அதேபோல இறக்குமதிகளுக்குகூட பல கட்டுப்பாடுகள்.  இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை வாங்கக்கூட போதுமானளவு கையிருப்பு இல்லை. இதனால்தான் 2022 இல் பஞ்சம் ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறானதொரு நிலை ஏற்படாது, மக்களை பட்டினி கிடக்க விடமாட்டோம் என விவசாயத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.</p>
<p>மறுபுறத்தில் அந்திய செலாவணி கையிருப்பும் அதிகரித்துள்ளது என மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. கடன்மூலமே அந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. இதனை தற்காலிக தீர்வாகவே கருதமுடியும். ஆக அந்நிய செலாவணி கையிருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கான நீண்ட கால திட்டங்கள் இன்மையும் எம்மை பல கோணங்களில் சிந்திக்க வைக்கின்றது .</p>
<p>அதேவேளை, அரசியல் ரீதியில் 2022 இல் சில மாற்றங்கள் நிகழவுள்ளன.</p>
<p>2022 ஆரம்பத்திலேயே அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளது. அதன்பின்னர் அரச நிர்வாகக் கட்டமைப்பு மாற்றப்படவுள்ளது.  புதிய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகும்போது, அரசின் கொள்கைத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைப்பார்.  2022 இல் அரசின் பயணம் எவ்வாறு அமையும் என்பதை அதன் ஊடாக அவர் தெளிவுபடுத்துவார்.</p>
<p>2022 இல் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என ஆளுந்தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது சாத்தியப்படுமா என்ற சந்தேகமும் எழுகின்றது.   உள்ளாட்சிசபைத் தேர்தல் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படும். மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவமே சந்தேகமே.</p>
<p>சிலவேளை, மருத்து காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியலில் இருந்து பிரதமர் மஹிந்த ஓய்வுபெற்றால், அரசிலிருந்து வெளியேறுவதற்கு பலர் தயார் நிலையில் உள்ளனர். மறுபுறத்தில் ஜே.வி.பியும் பலமானதொரு கூட்டணியை அமைத்து வருகின்றது. அந்த முயற்சி வெற்றியளித்துள்ளது.</p>
<p>தமிழர் தரப்பு அரசியலை பொருத்தமட்டில் &#8211; தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் தீர்வை நோக்கி காய் நகர்த்தல்கள் இடம்பெறவில்லை. மாறாக 13 ஐ மையப்படுத்திய பயணமே ஆரம்பமாகியுள்ளது.</p>
<p>தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு என்பது, ஒற்றையாட்சிக்குள் &#8211; 13 ஐ முழுமையாக அமுல்படுத்திக்கொள்வதாகவே உள்ளது. அதிலும் ஆயிரம் குழறுபடிகள். எனவே, 2022 இல் ஆவது &#8211;  காத்திரமான நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்திய பிரதமருக்கு அனுப்படும் கூட்டு ஆவணமானது &#8211; தமிழ் மக்களின் அபிலாஷைகளை புறந்தள்ளும் விதத்தில் அமையக்கூடாது என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாகும்.</p>
<p>மலையகத் தமிழர்களுக்கும் ஆயிரம் பிரச்சினைகள். குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபடுபவர்கள் 2021 இல் திட்டமிட்ட அடிப்படையில் வஞ்சிக்கப்பட்டனர். தோட்ட நிர்வாகங்களால் பழிவாங்கப்பட்டனர். எனவே, அவர்களின் தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்கு, அவர்களுக்கு முறையான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு மலையக தொழிற்சங்கங்கள் 2022 இல் உறுதிபூண வேண்டும்.</p>
<p>அதேவேளை, இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் &#8211; இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி முன்னேறியவர்களும் இருக்கின்றனர். எனவே, துவண்டுவிடவேண்டாம்.  ஏதோவொரு விதத்தில் வழி பிறக்கும் &#8211; வலி நீங்கும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டில் காலடி வைப்போம்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/articles/painful-new-year-and-happy-new-year/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>போதையும் &#8211; சீரழியும் மாணவர் சமுதாயமும்!</title>
		<link>https://tamilnaadi.com/articles/drug-and-degenerate-student-society/</link>
					<comments>https://tamilnaadi.com/articles/drug-and-degenerate-student-society/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Florida]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Dec 2021 17:46:38 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[கலாசாரம்]]></category>
		<category><![CDATA[drug]]></category>
		<category><![CDATA[Feathered]]></category>
		<category><![CDATA[school]]></category>
		<category><![CDATA[Society]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[students]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[technology]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=26755</guid>

					<description><![CDATA[இன்றைய உலகில் தொழில்நுட்பத்தை நாடிச் செல்லும் மாணவர்கள் மத்தியில் நாம் எதிர்பாரக்காத பிரச்சினைகளை, மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம்பெறுகின்றது. இதில் குறிப்பாக கல்வி கற்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சினை பலராலும் பேசப்படுகின்றது. மாணவர்கள் தங்களது இளமைப் பருவத்தில் நடாத்தும் அட்டகாசங்களைப் பற்றி சிந்திக்கின்றார்களே தவிர அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதில்லை. இதன் விளைவாககவே போதைக்கு ஆளாகுகின்றார்கள். திடகாத்திரமாக ஆரோக்கியமாக, ஆளுமையுள்ளவர்களாக வளர்வதற்கு போதை மற்றும் தீய நடத்தைகள் தடையாக இருக்கின்றன என்பதை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இன்றைய உலகில் தொழில்நுட்பத்தை நாடிச் செல்லும் மாணவர்கள் மத்தியில் நாம் எதிர்பாரக்காத பிரச்சினைகளை, மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம்பெறுகின்றது. இதில் குறிப்பாக கல்வி கற்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சினை பலராலும் பேசப்படுகின்றது.</p>
<p>மாணவர்கள் தங்களது இளமைப் பருவத்தில் நடாத்தும் அட்டகாசங்களைப் பற்றி சிந்திக்கின்றார்களே தவிர அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதில்லை. இதன் விளைவாககவே போதைக்கு ஆளாகுகின்றார்கள். திடகாத்திரமாக ஆரோக்கியமாக, ஆளுமையுள்ளவர்களாக வளர்வதற்கு போதை மற்றும் தீய நடத்தைகள் தடையாக இருக்கின்றன என்பதை உணராமல் இருக்கின்றார்கள்.</p>
<p>எந்தவொன்றையும் அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் சில நேரம் அவர்களது அழிவுக்கே காரணமாகி விடுகின்றது. நண்பர்களுடன் பழகும்போது சிகரட் புகைத்தல், பியர் குடித்தல் என்ற பழக்கத்துடன் பீடா, பாபுல், பான்பராக், மாவா, ஸாதா என்ற பாவனைக்கு ஆளாகி இறுதியில் எல்லா போதைக்கும் அடிமையாகி விடுகின்றார்கள். தற்போது சிறுபிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளையும் போதைக்குப் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் மூக்குத்தூளையும் பயன்படுத்துகிறார்கள்.</p>
<p><strong>போதை என்றால் என்ன?</strong><br />
போதை என்றால் என்ன? அதன் விபரீதம் எப்படிப்பட்டது என்பதை அறியாமலே போதை பாவனையில் மாணவர்கள் ஈடுபடுகின்றார்கள். போதை என்பது தன்னிலை மறக்கச் செய்தல், உடல்-உள பாதிப்புக்களை ஏற்படுத்தல் என்பனவாகும். போதையை பயன்படுத்தியதும் தனது அறிவை இழக்கின்றான். மயங்குகின்றான். உடல் பலவீனமடைகின்றது. உளம் கெட்டு விடுகின்றது. தன்னால் உறுதியாக நிற்க முடியாமல் ஆடி அசைந்து விழுகின்றான். அதன் பின் அவனுக்கு ஏற்படும் எந்தவொரு விடயத்தைப் பற்றியும் அறியாமல் இருக்கின்றான்.</p>
<p>மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதை பாவனைக்கு ஆளாகுவதற்குப் பிரதான காரணம்:</p>
<p>1. வீட்டுச் சூழல்<br />
2. சமூக சூழல்<br />
3. குடும்பப் பிரச்சினை<br />
4. போட்டி சூழலுக்கு முகம்கொடுக்க முடியாமை<br />
5. ஊடகங்கள்</p>
<p><strong>வீட்டுச் சூழல் </strong></p>
<p>வீட்டுச் சூழலிருந்து பல பிள்ளைகள் போதை பாவனைக்கு ஆளாக்குகின்றார்கள். தந்தை சிகரட் புகைப்பவராக இருந்தால், அந்த சிகரட்டை வாங்குவதற்கு பிள்ளையிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார். அந்தப் பிள்ளை தந்தையுடைய புகைத்தல் ஸ்டைலை பார்த்து நாளடைவில் அதனை திருட்டுத் தனமாக புகைக்க ஆரம்பிக்கின்றது.</p>
<p>வீட்டில் விருந்துபசாரத்தின்போது பியர் மற்றும் மது பாவிக்கப்படும்போது பிள்ளை அவைகளை சக நண்பர்களுடன் சேர்ந்;து பயன்படுத்த ஆரம்பி;க்கின்றனர். இவை நல்லவை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்ற நிலை காணப்படுவதால் பிள்ளைகள் விளைவுகளைப் பற்றி அஞ்சாமல் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றார்கள். அதுபோல் வீட்டுச் சூழலில் ஆன்மீகம் இல்லையாயின் நிலமை மோசமாகி விடும்.</p>
<p><strong>சமூக சூழல்</strong></p>
<p>வீட்டுச் சூழலில் பயன்படுத்திய போதை பொருட்களை பிள்ளைகள் நாளடைவில் சமூக சூழலில் சக தோழர்களுடன் பழகிக் கொள்ள முனைக்கின்றது. சிலவேளை வீட்டுச் சூழலில் சிகரட் புகைத்தல், மது அருந்துதல் போன்றவை இல்லாவிட்டாலும் சமூக சூழலில் அவை விற்பனைக்கு இருக்குமாயின், அவை பயன்படுத்தக்கூடிய பிள்ளைகள் இருப்பார்களாயின் அப்பிள்ளைகளுடன் பழகக் கூடியவர்களும் போதைக்கு ஆளாகிவிடுவார்கள்.</p>
<p>பாடசாலை மாணவர்கள் போதைக்கு ஆளான பல சம்பவங்களில் ஒன்று தான் டீபை ஆயவஉh (பிக்மெச்) என்ற விளையாட்டுப் போட்யின்போது நடைபெறுகின்றது. இதன்போது மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டு பொலிஸ்வரை சென்ற சம்பவங்களும் உண்டு.</p>
<p><strong>குடும்ப பிரச்சினை</strong></p>
<p>குடும்பத்தில் எல்லா பிள்ளைகளிடமும் பெற்றோர் சரிசமமான அன்பு, பாசம் காட்டி அரவணைக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மை வளரவிடாமல் காத்துக் கொள்ள வேண்டும். பெற்றோரிடம் உரிய அன்பும் அரவணைப்பும் கிடைக்காத சந்தரப்பத்தில் பிள்ளைகள் தங்களுக்கு ஏற்பட்ட கவலையை போக்க, போதையை பயன்படுத்தி தீர்வுகாண முனைகின்றனர். அதுபோல் பெற்றோரிடையே பிரச்சினைகள், ஏற்படுமாயின் அல்லது பெற்றோர் பிரிந்து வாழ்வார்களாயின் அதனால் பாதிப்படைபவர்கள் பிள்ளைகள், அப்பிள்ளைகள் அப்பிள்ளை விரக்தி காரணமாக போதைக்கு அடிமையாகுவர்.</p>
<p>சில சந்தர்ப்பத்தில் தாயும் தகப்பனுக்கும் பிரச்சினை தோன்றும் போது தந்தை சிகரட் புகைத்தல் மது அருந்தல் போன்ற காட்சியை பிள்ளை கண்டால் தனக்கு ஏற்படும் பிரச்சினைக்கு இதுதான் தீர்வு என பிள்ளையும் பாவனைக்கு ஆளாகும்.</p>
<p>போட்டி சூழலுக்கு முகம் கொடுக்க முடியாமை பாடசாலை வாழ்க்கையிலும் ஏற்படும் சவால்களுக்கும் போட்டிகளுக்கும் முகம் கொடுக்க முடியாமல் தோல்வி மனப்பான்மைக்கு ஆளாகும்போது போதையை நாடுகின்றனர். பரீட்சையில் தோல்வி பொதுவான போட்டி நிகழ்ச்சிகளில் தோல்வி, படிக்க முடியா பிரச்சினை எனும் போது போதையினை பயன்படுத்துகின்றனர்.</p>
<p><strong>ஊடகங்களின் தாக்கம்</strong></p>
<p>மேலே கூறப்பட்ட காரணிகளுக்கு உடந்தையாக இருப்பதே மீடியாவாகும். எந்தவொரு பிரச்சினையின் பேர்தும் அதற்கு முகம் கொடுக்க முடியாதபோது போதையை பயன்படுத்துவதையே ஊடகம் முக்கியமான செய்தியாக காட்சியப்படுத்துகின்றது. காதல் தோல்வி, குடும்பத்தகராறு, வாழ்வில் தோல்வி, வேலையின்மை, விரக்தி, நண்பர்களுடன் விரிசல் போன்ற காட்சிகளில் கதாநாயகன் நாடக்கூடிய முதல் தீர்வு சிகரெட் புகைப்பது, மது அருந்துவது என்பதைத்தான் இந்த சினிமா மற்றும் நாடகங்களில் காட்டப்படுகின்றது. இது போல் கதாநாயகன் பல்வேறு ஸ்டைகளில் புகைத்து காட்டுவதும் இதற்கான மற்றொரு காரணமாகும்.</p>
<p><strong>போதையினால் ஏற்படும் விளைவுகள்</strong></p>
<p>பிள்ளைகள், மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் போதைக்கு அடிமையாகும்போது குடும்பத்திலும் சமூகத்திலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன. குடும்பத்திற்குள் ஒற்றுமை குலைந்து விடுகின்றது. அவநம்பிக்கை ஏற்படுகின்றது. முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றது. (வீணான செலவுகள்) வறுமை ஏற்படுகின்றது. குடும்பத்திற்கென்று இருந்த மரியாதை, கௌரவம் இழக்கப்படுகின்றது. இதனால் மனச்சோர்வு ஏற்பட்டு விரக்தி நிலைக்குச் செல்கின்றனர். பிள்ளைகளுடைய எதிர்கால கனவுகள், இலட்சியங்கள் நாசமாகின்றன. இலக்கில்லாமல் வாழ்வு அழிந்து விடுகின்றது. புத்தகங்களை சுமந்து செல்ல வேண்டியவர்கள் பல்வேறுபட்ட நோய்களை சுமந்தவர்களாக நடமாட ஆரம்பிக்கின்றார்கள். பதினாறு மற்றும் பதினெட்டு வயதை அடையும் போதே வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.</p>
<p><strong>போதைக்கு அடிமையானவர்களை அடையாளம் காணும் வழி</strong></p>
<p>பிள்ளைகள் பழகக் கூடிய புதிய, பழைய நண்பர்களை அடையாளம் காண வேண்டும். ஆரம்பத்தில் பிள்ளை பழகிய நண்பர்கள் யார்? அவர்களுடன் மேற்கொள்ளும் நட்பு எத்தகையது? ஏற்பட்டு வரும் மாற்றம் எத்தகையது? என்பதை பெற்றோர் அறிய வேண்டும். அவர்களது செல்போன் பாவனை எத்தகையது? அதிகமாக பேசுபவர்கள் யார்? என்பதையும் அறிய வேண்டும். சிலவேளை பிள்ளை அல்லது மாணவன் பழைய நண்பர்களின் நட்பு மோசமானது எனக்கருதி புதிய நண்பர்களை தேடிக் கொள்ளலாம். அல்லது பழைய நண்பர்களின் தொடர்பை விட புதிய நண்பர்களின் தொடர்பால் திசை மாறியும் போகலாம். இதில் பெற்றோர் அவதானமாக செயற்பட வேண்டும்.</p>
<p>பாடசாலைக்கு போய்விடும் நேரம் மேலதிக வகுப்புக்கு போய் வரும் நேரம், இதில் ஏற்படும் மாற்றங்கள் பொழுது போக்குகளில் ஈடுபட்டவர்கள் ஒதுகிங்கிக் கொள்வது நல்ல பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது விருப்பான ஆகுமான நல்ல விடயங்களில் ஆர்வம் குறைந்து வருவது, விளையாட்டில் நாட்டமில்லாமல், சுத்தம் பேணாமல் இருப்பது, வாயில் துர்வாடை வீசுவது போன்ற விடயங்களை காணப்படுமாயின் பெற்றார் உடனே கவனம் செலுத்த வேண்டும்.</p>
<p>அதுபோல் வீட்டில் சின்னச்சின்ன பொருட்கள் காணாமல் போவது அல்லது பணம் காணாமல் போவது படிப்பில் ஆர்வம் குறைவது, அடிக்கடி மறதி ஏற்படுவது, பதற்றமாகவும் ஆக்ரோக்ஷமாகவும் நடந்து கொள்வதும் காணப்படுமானால் பெற்றோர் கண்டிப்பாக பிள்ளைகள் விடயத்தில் மிக அவதானம் செலுத்த வேண்டும்.</p>
<p>குறிப்பாக அண்மைக்காலங்களில் அரச தரப்பினர் மத்தியில் போதைப்பொருள் பாவனையினை சட்டப்பூர்வமானதாக்கும் கோரிக்கைகள் வேதனையளிக்கின்றது. எனினும் பிள்ளையின் மீது அதிக அன்பு காட்டி ஏமாந்து போகாமலும் அதிக கோபத்தையும் வெறுப்பையும் காட்டி ஒதுக்கி விடாமலும் நடுநிலைமையுடன் நடந்து பிள்ளையின் வாழ்வை சீர் செய்ய முனைய வேண்டும். எல்லா பிரச்சினைக்கும் தீர்வு உண்டு. அதனை சரியாக தேடிக் கொள்ளவே வழிகாண வேண்டும்.</p>
<p>சி.அருள்நேசன்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/articles/drug-and-degenerate-student-society/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>உலகை ஆக்கிரமித்து வரும் ஹாலோவீன் பண்டிகை &#8211; தேவதர்சன் சுகிந்தன்</title>
		<link>https://tamilnaadi.com/articles/halloween-is-a-world-famous-festival/</link>
					<comments>https://tamilnaadi.com/articles/halloween-is-a-world-famous-festival/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Nov 2021 12:17:20 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[கலாசாரம்]]></category>
		<category><![CDATA[artical]]></category>
		<category><![CDATA[Halloween festival]]></category>
		<category><![CDATA[Poppy Flower]]></category>
		<category><![CDATA[unicef]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=21619</guid>

					<description><![CDATA[உலகின் பெயர்போன கொண்டாட்டங்கள் அத்தனையும் இன்று அனைவருக்கும் பொதுவான ஒன்றாக மாறி வருகின்றன. நெருக்கடிமிக்க உலகில் எதையெதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் கிடைக்கக் கூடிய அத்தனை கொண்டாட்டங்களிலும் தம்மை ஈடுபடுத்தி நெருக்கடிகளில் இருந்து விடுவித்துக்கொள்ள முயல்கின்றமை ஓர் சாதகமான அணுகுமுறையாகவே பார்க்கப்பட வேண்டும். அவ்வாறான கொண்டாட்டங்களில் ஒன்று நீண்டகாலமாக மேலைத்தேய நாட்டவர்களால் கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையாகும். இவ்வாறு கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகை (#Halloween festival) சமகாலத்தில் அமெரிக்கா, பிரித்தானியா கனடா உள்ளிட்ட நாடுகளை கடந்து ஏனைய பிராந்தியங்களுக்கும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p><strong>உலகின் பெயர்போன கொண்டாட்டங்கள் அத்தனையும் இன்று அனைவருக்கும் பொதுவான ஒன்றாக மாறி வருகின்றன.</strong></p>
<p><strong>நெருக்கடிமிக்க உலகில் எதையெதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் கிடைக்கக் கூடிய அத்தனை கொண்டாட்டங்களிலும் தம்மை ஈடுபடுத்தி நெருக்கடிகளில் இருந்து விடுவித்துக்கொள்ள முயல்கின்றமை ஓர் சாதகமான அணுகுமுறையாகவே பார்க்கப்பட வேண்டும்.</strong></p>
<p><img loading="lazy" decoding="async" class="size-medium wp-image-21622 alignleft" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Halloween-festival-300x169.jpg" alt="Halloween festival" width="300" height="169" title="உலகை ஆக்கிரமித்து வரும் ஹாலோவீன் பண்டிகை - தேவதர்சன் சுகிந்தன் 15" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Halloween-festival-300x169.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Halloween-festival-768x432.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Halloween-festival.jpg 976w" sizes="(max-width: 300px) 100vw, 300px" />அவ்வாறான கொண்டாட்டங்களில் ஒன்று நீண்டகாலமாக மேலைத்தேய நாட்டவர்களால் கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையாகும்.</p>
<p>இவ்வாறு கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகை (#Halloween festival) சமகாலத்தில் அமெரிக்கா, பிரித்தானியா கனடா உள்ளிட்ட நாடுகளை கடந்து ஏனைய பிராந்தியங்களுக்கும் பரவி வருகின்றது.</p>
<p>பெரும்பாலும் மேலைத்தேயவர்களால் பரப்பப்பட்டு தற்போது உலகின் கணிசமான மக்கள் தொகையினரால் பின்பற்றப்படும் கிறிஸ்தவ மதத்தில் நவம்பர் மாதம் என்பது இறந்துபோன ஆத்மாக்களை நினனவுகூர்வதற்காக அர்ப்பணிக்கபட்ட மாதமாக காணப்படுகின்றது.</p>
<p><img loading="lazy" decoding="async" class="size-medium wp-image-21625 alignleft" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Poppy-flower-300x200.jpg" alt="Poppy flower" width="300" height="200" title="உலகை ஆக்கிரமித்து வரும் ஹாலோவீன் பண்டிகை - தேவதர்சன் சுகிந்தன் 16" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Poppy-flower-300x200.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Poppy-flower.jpg 600w" sizes="(max-width: 300px) 100vw, 300px" />இந்த அனுஷ்டானங்கள் மத வழிபாடுகளாகவும், இன்னும் பல நினைவுகூரல்களாகவும் கொண்டாடப்படுகின்றன.</p>
<p>இந்த பின்னணியிலேயே முதலாம் உலகப்போர் நிறைவடைந்த காலம் முதல் பொதுநலவாய நாடுகளால், உலகப்போரில் மரணமடைந்த ஆயுதம் தாங்கிய வீரர்களை நினைவுகூரும் பொப்பி தினம் அல்லது பொப்பி மலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.</p>
<p>இந்த நிலையில், மரித்தவர்களை நினைவுகூரும் வகையிலான கார்த்திகை மாதத்தை வரவேற்கும் வகையில், ஒக்டோபர் மாதத்தின் இறுதி நாளான ஒக்டோபர் 31 அன்று குறித்த தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.</p>
<p><img loading="lazy" decoding="async" class="size-medium wp-image-21623 alignleft" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Halloween-festival1-300x200.jpg" alt="Halloween festival1" width="300" height="200" title="உலகை ஆக்கிரமித்து வரும் ஹாலோவீன் பண்டிகை - தேவதர்சன் சுகிந்தன் 17" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Halloween-festival1-300x200.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Halloween-festival1-1024x682.jpg 1024w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Halloween-festival1-768x511.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Halloween-festival1-1536x1022.jpg 1536w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Halloween-festival1.jpg 1600w" sizes="(max-width: 300px) 100vw, 300px" />இந்த கொண்டாட்டங்களின் போது எலும்புக்கூடுகள் அல்லது இறந்த ஆத்துமாக்களை நினைவுகூரத்தக்கது வகையிலான ஆடைகள் அலங்காரங்களை அந்தந்த நாட்டின் மக்கள், குறிப்பாக சிறுவர்கள் அணிந்துகொண்டு தமது அயலவர்களை சந்தித்து தமது அலங்காரங்களை ஏற்ற வகையான வெளிப்பாடுகளை செய்து காட்டுவது வழக்கமாகும்.</p>
<p>ஓர் மத நம்பிக்கையையாக அல்லது ஓர் மதம் சார்ந்த செயற்பாடாக குறிப்பிட்ட ஒரு சில நாடுகளால் விளக்கப்படும் ஹலோவீன் பண்டிகையானது, வெறுமனே மக்கள் மத்தியில் இருக்கும் மரணம் குறித்த அச்சத்தை போக்குவதற்கான செயற்பாடு என ஒரு தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது.</p>
<p>அத்துடன் குறித்த பண்டிகைக்கும் குறிப்பாக கிறிஸ்தவ மதத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என குறித்த தரப்பு வாதிடுகின்றது.</p>
<p><img loading="lazy" decoding="async" class="size-medium wp-image-21624 alignleft" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Halloween-festival3-300x225.jpg" alt="Halloween festival3" width="300" height="225" title="உலகை ஆக்கிரமித்து வரும் ஹாலோவீன் பண்டிகை - தேவதர்சன் சுகிந்தன் 18" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Halloween-festival3-300x225.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Halloween-festival3-1024x768.jpg 1024w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Halloween-festival3-768x576.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Halloween-festival3-1536x1152.jpg 1536w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/Halloween-festival3.jpg 2048w" sizes="(max-width: 300px) 100vw, 300px" />இந்த பின்னணியில், மேற்குறித்தவாறு அலங்காரமிடும் சிறுவர்கள் தமது அயலவர்களுடைய இருப்பிடங்களுக்கு சென்று தாம் அவர்களை அச்சுறுத்தி விடுவோம் என விளையாட்டாக மிரட்டி மிட்டாய், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட சிறிய பரிசுப்பொருட்களை பெற்றுக்கொள்வர்.</p>
<p>இவ்வாறான பரிசில்கள் மற்றும் பணப்பரிசுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது மிக விரைவாகவே சர்வதேச நிறுவனங்களை எட்ட ஆரம்பித்தது.</p>
<p>அதன்படி, குறித்த நடவடிக்கையானது உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையாக பின்பற்றப்பட்டு யுனிசெப் நிறுவனம் பணம் சேகரிக்க ஆரம்பித்ததாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p><img loading="lazy" decoding="async" class="size-medium wp-image-21627 alignleft" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/hellovin-300x169.jpg" alt="hellovin" width="300" height="169" title="உலகை ஆக்கிரமித்து வரும் ஹாலோவீன் பண்டிகை - தேவதர்சன் சுகிந்தன் 19" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/hellovin-300x169.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/hellovin.jpg 590w" sizes="(max-width: 300px) 100vw, 300px" />இந்த நடவடிக்கை மூலம் நூற்று இருபது மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேலான தொகை இதுவரை மாணவர்களை பயன்படுத்தி திரட்டபட்டுள்ளது.</p>
<p>எனினும் இந்த நடவடிக்கை 2006 ஆம் ஆண்டில் கனடாவில் வேறு சில காரணங்களை அடிப்படையாகக் கொண்டு மாற்றப்பட்டதாகவும் இந் நிதி திரட்டல் நடவடிக்கை வேறு முறையில் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>ஒவ்வொரு நாட்டிற்கும், ஒருவிதமான உணவு வகை இந்த பண்டிகையுடன் தொடர்புபடுகின்றது. தமது கலாசாரம் மற்றும் தமது நாட்டின் விளைபொருட்களுக்கு ஏற்றவகையாக இவ் உணவுப் பழக்கம் கைக்கொள்ளப்படுகின்றது.</p>
<p><img loading="lazy" decoding="async" class="size-medium wp-image-21632 alignleft" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/hello-1-300x225.jpg" alt="hello 1" width="300" height="225" title="உலகை ஆக்கிரமித்து வரும் ஹாலோவீன் பண்டிகை - தேவதர்சன் சுகிந்தன் 20" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/hello-1-300x225.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/hello-1-1024x768.jpg 1024w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/hello-1-768x576.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/hello-1.jpg 1200w" sizes="(max-width: 300px) 100vw, 300px" />மேலும் குறித்த பண்டிகை காலத்தில் கொண்டாட்டங்களை கருத்திற்கொண்டு, பாடசாலைகள் மற்றும் பொது விடுமுறைகளை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் வழங்குகின்றன.</p>
<p>வரலாற்று சிறப்புமிக்க இ க்கொண்டாட்டமானது எடுத்த மாத்திரத்தில் எல்லா நாடுகளாலும் கொண்டாடப்படாவிட்டாலும், சமகாலத்தில் ஏனைய நாடுகளுக்கும் பரவி வருகின்றது.</p>
<p>எவ்வாறாயினும், நெருக்கடிகள் உலகை சூழப் படர்ந்துள்ள காலப்பகுதியில் குறித்த நெருக்கடிகளில் இருந்து மக்கள் தம்மை விடுவித்துக்கொள்ள இவ்வாறான பண்டிகைகள் உதவுகின்றமை மிகப்பெரும் ஆறுதல் என்பதில் ஐயமில்லை.</p>
<p>Photos Credit &#8211; #BBCNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/articles/halloween-is-a-world-famous-festival/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தீபாவளி கொண்டாட்டம் &#8211; கடந்து போன நாட்கள்</title>
		<link>https://tamilnaadi.com/articles/deepavali-celebration-gone-are-the-days/</link>
					<comments>https://tamilnaadi.com/articles/deepavali-celebration-gone-are-the-days/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Nov 2021 11:03:10 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[கலாசாரம்]]></category>
		<category><![CDATA[artical]]></category>
		<category><![CDATA[deepavali]]></category>
		<category><![CDATA[Festival]]></category>
		<category><![CDATA[K S Radhakrishnan]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=19695</guid>

					<description><![CDATA[தீபாவளிக்கு சூரிய உதயத்திற்கு முன் நல்லெண்ணெய் குளியல், புத்தடை பின் அன்று, முதல் நாள் முதல் ஷோவிற்கு தீபாவளிக்கு வெளி வந்த திரைப்படத்தை ஆர்வத்துடன் பார்த்துவிட்ட அன்றைய நாட்கள்…. கல்லூரி நாட்கள்… &#160; இப்போது கடந்த 25 ஆண்டுகளாக இதில் பெரிய ஆர்வம் இல்லாமல் போய் விட்டது. கடந்து போன நாட்கள்… 1961ல் ‘தாய் சொல்லை தட்டாதே’, 1963ல் ‘கற்பகம்’, ‘அன்னை இல்லம்’, 1964ல் ‘நவராத்திரி’, ‘படகோட்டி’ ஆகியவை வெற்றி பெற்ற தீபாவளிப் படங்கள். தீபாவளி ரிலீஸாக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தீபாவளிக்கு சூரிய உதயத்திற்கு முன் நல்லெண்ணெய் குளியல், புத்தடை பின் அன்று, முதல் நாள் முதல் ஷோவிற்கு தீபாவளிக்கு வெளி வந்த திரைப்படத்தை ஆர்வத்துடன் பார்த்துவிட்ட அன்றைய நாட்கள்….<br />
கல்லூரி நாட்கள்…</p>
<p>&nbsp;</p>
<p>இப்போது கடந்த 25 ஆண்டுகளாக இதில் பெரிய ஆர்வம் இல்லாமல் போய் விட்டது. கடந்து போன நாட்கள்…</p>
<p>1961ல் ‘தாய் சொல்லை தட்டாதே’, 1963ல் ‘கற்பகம்’, ‘அன்னை இல்லம்’, 1964ல் ‘நவராத்திரி’, ‘படகோட்டி’ ஆகியவை வெற்றி பெற்ற தீபாவளிப் படங்கள். தீபாவளி ரிலீஸாக முதன்முதலாக திரையிடப்பட்ட வண்ணப்படம் என்கிற பெருமையை ‘படகோட்டி’ தட்டிச் செல்கிறது.</p>
<p>1967 தீபாவளிக்கு வெளிவந்த ‘ஊட்டிவரை உறவு’, ‘இரு மலர்கள்’ இரண்டும் வெற்றிப்படங்கள் ஆயின. ‘நான்’, வெள்ளிவிழா கண்டது. ஒரே தீபாவளியில் வெளியான மூன்று படங்கள் வெற்றி காண்பது என்பது அபூர்வமான ஒரு நிகழ்வே.</p>
<p>தீபாவளிக்கு பொதுவாக பக்திப் படம் வெளியாவது அரிது. அப்படி அரிதிலும் அரிதான ஒரு நிகழ்வு 1971ல் நிகழ்ந்தது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘ஆதிபராசக்தி’, இந்த தீபாவளிக்கு வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடியது.</p>
<p>அடுத்த ஆண்டு, 1972 தீபாவளிக்கு தேவரின் ‘தெய்வம்’ வெளியாகி நூறு நாள் ஓடியது. 1973ல் ‘பூக்காரி’, ‘கெளரவம்’, 1974ல் ‘அவள் ஒரு தொடர்கதை’ ஆகியவை வெற்றிகரமான தீபாவளி ரிலீஸ்களாக அமைந்தன. 1977ல் ‘ஆட்டுக்கார அலமேலு’ தீபாவளி ரிலீஸாக வெளியாகி இருநூறு நாட்கள் ஓடியது.</p>
<p>இளையராஜாவின் 100வது படமான ‘மூடுபனி’ 1980ன் தீபாவளி ரிலீஸ் படமே. 1981 தீபாவளிக்கு வெளியான ஏழு படங்களுமே வண்ணப் படங்கள்தான். அதுவரை கருப்பு வெள்ளை படங்களும் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்த தீபாவளியில் இருந்து எல்லா தீபாவளியுமே வண்ணமயமாய்தான் அமைந்தது.</p>
<p>‘தண்ணீர் தண்ணீர்’, ‘கீழ்வானம் சிவக்கும்’, ‘அஞ்சாத நெஞ்சங்கள்’ ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாய் அமைய, ‘அந்த ஏழு நாட்கள்’ வெள்ளிவிழா கொண்டாடியது. 1982 தீபாவளியில் மணிவண்ணன் இயக்குநராக அறிமுகமான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ வெளியாகி இருநூறு நாட்கள் ஓடியது.</p>
<p>கடந்த கால நினைவுகள்….</p>
<p>நன்றி<br />
எஸ்.கே. ராதாகிருஷ்ணன்</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/articles/deepavali-celebration-gone-are-the-days/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்காவின் சுதந்திரம் &#8211; தங்க ஆடையில் ஜொலித்த இந்தியப் பெண்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/indian-woman-in-gold-dress/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/indian-woman-in-gold-dress/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Sep 2021 16:14:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கலாசாரம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[america]]></category>
		<category><![CDATA[fashion]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[gold]]></category>
		<category><![CDATA[Med Gala]]></category>
		<category><![CDATA[newyork]]></category>
		<category><![CDATA[sudhareddy]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[கிம் காதஷியன்]]></category>
		<category><![CDATA[நியூயோர்க்]]></category>
		<category><![CDATA[பஷன்ஷோ]]></category>
		<category><![CDATA[மெட் காலா]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10125</guid>

					<description><![CDATA[அமெரிக்காவின் சுதந்திரம் &#8211; தங்க ஆடையில் ஜொலித்த இந்தியப் பெண் ஆண்டுதோறும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் மெட் காலா பஷன் நிகழ்ச்சி உலகப்புகழ் பெற்றது. 2021 ஆம் ஆண்டுக்கான &#8216;மெட் காலா&#8217; அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. “அமெரிக்காவின் சுதந்திரம்“ என்ற கருப்பொருளைக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசியல், சினிமா, விளையாட்டு போன்ற பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் பாடகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் இந்தியாவில் இருந்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அமெரிக்காவின் சுதந்திரம் &#8211; தங்க ஆடையில் ஜொலித்த இந்தியப் பெண்</h4>
<p>ஆண்டுதோறும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் மெட் காலா பஷன் நிகழ்ச்சி உலகப்புகழ் பெற்றது.</p>
<p>2021 ஆம் ஆண்டுக்கான &#8216;மெட் காலா&#8217; அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.</p>
<p>“அமெரிக்காவின் சுதந்திரம்“ என்ற கருப்பொருளைக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசியல், சினிமா, விளையாட்டு போன்ற பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் பாடகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
<p>இந்த நிகழ்வில் இந்தியாவில் இருந்து பிரபல தொழிலதிபர் மேகா கிருஷ்ணனின் மனைவி சுதா ரெட்டி முதல்முறையாகக் கலந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் 250 கிலோ எடைகொண்ட ஆடையை அணிந்திருந்தார். அந்த ஆடை முழுக்க முழுக்க தங்கம் மற்றும் வைரங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-10310" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/sudhareddy-300x169.jpg" alt="sudhareddy" width="983" height="557" title="அமெரிக்காவின் சுதந்திரம் - தங்க ஆடையில் ஜொலித்த இந்தியப் பெண் 23"></p>
<p>இதேவேளை, பிரபல மாடலான கிம் காதஷியன், கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கறுப்பு நிற ஆடையை அணிந்து கலந்துகொண்டார். இது பெரிதும் வரவேற்பை பெற்றது.</p>
<p>நிகழ்வில் கலந்துகொண்ட அமெரிக்காவின் இளம் எம்.பியான அலெக்சாண்டிரியா ஒகாசியோ கார்டஸ் பேஷன் நிகழ்ச்சியை அரசியல் பேசும் இடமாக மாற்றி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார்.</p>
<p>பல நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் பங்குபற்றும் இந்த நிகழ்வு நியூயோர்க்கில் உள்ள பிரபல கலை அருங்காட்சியத்துக்கு நிதி திரட்டுவதற்காக 1948 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் நிகழ்வாகும்.</p>
<p>வருடாவருடம் இடம்பெற்று வரும் இந்த நிகழ்வு, கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கபட்ட நிலையில் இவ்வாண்டு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-10309" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/sep17metgala6-300x225.jpg" alt="sep17metgala6" width="987" height="740" title="அமெரிக்காவின் சுதந்திரம் - தங்க ஆடையில் ஜொலித்த இந்தியப் பெண் 24" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/sep17metgala6-300x225.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/sep17metgala6-1024x768.jpg 1024w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/sep17metgala6-768x576.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/sep17metgala6-scaled.jpg 960w" sizes="(max-width: 987px) 100vw, 987px" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/indian-woman-in-gold-dress/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இன்று நல்லூரான் தீர்த்தம்</title>
		<link>https://tamilnaadi.com/news/today-nalluran-theertham-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/</link>
					<comments>https://tamilnaadi.com/news/today-nalluran-theertham-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Sep 2021 09:00:56 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கலாசாரம்]]></category>
		<category><![CDATA[தீர்த்த திருவிழா]]></category>
		<category><![CDATA[தெய்வானை]]></category>
		<category><![CDATA[நல்லூர் கந்தசுவாமி]]></category>
		<category><![CDATA[முருகப்பெருமான்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வள்ளி]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=7037</guid>

					<description><![CDATA[இன்று நல்லூரான் தீர்த்தம் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 25ஆம் நாள் திருவிழாவான தீர்த்த திருவிழா இன்றையதினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது. அதிகாலையில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. இம்முறை நல்லூரான் மகோற்சவம் கொரோனோ வைரஸ் தொற்றின் காரணமாக பக்தர்களின் வருகையின்றி சிவாச்சாரியார்களுடன் உள்வீதியில் நடைபெற்று வருகின்றது. தேர்த்திருவிழாவான நேற்றையதினம் தேர் இழுக்காது முருகப்பெருமான் , வள்ளி மற்றும் தெய்வானையுடன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இன்று நல்லூரான் தீர்த்தம்</h4>
<p>வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 25ஆம் நாள் திருவிழாவான தீர்த்த திருவிழா இன்றையதினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது.</p>
<p>அதிகாலையில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.</p>
<p>இம்முறை நல்லூரான் மகோற்சவம் கொரோனோ வைரஸ் தொற்றின் காரணமாக பக்தர்களின் வருகையின்றி சிவாச்சாரியார்களுடன் உள்வீதியில் நடைபெற்று வருகின்றது.</p>
<p>தேர்த்திருவிழாவான நேற்றையதினம் தேர் இழுக்காது முருகப்பெருமான் , வள்ளி மற்றும் தெய்வானையுடன் உள்வீதியில் சிறிய தேரில் வந்து அருள்காட்சி தந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-7039" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/nallur-12-600x338-1-300x169.jpg" alt="nallur 12 600x338 1" width="956" height="542" title="இன்று நல்லூரான் தீர்த்தம் 33"> <img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-7040" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/nallur-11-600x338-1-300x169.jpg" alt="nallur 11 600x338 1" width="956" height="542" title="இன்று நல்லூரான் தீர்த்தம் 34"> <img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-7041" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/nallur-10-600x338-1-300x169.jpg" alt="nallur 10 600x338 1" width="955" height="541" title="இன்று நல்லூரான் தீர்த்தம் 35"> <img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-7042" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/nallur-7-600x338-1-300x169.jpg" alt="nallur 7 600x338 1" width="952" height="533" title="இன்று நல்லூரான் தீர்த்தம் 36"> <img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-7043" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/nallur-1-1-750x375-1-300x150.jpg" alt="nallur 1 1 750x375 1" width="950" height="475" title="இன்று நல்லூரான் தீர்த்தம் 37" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/nallur-1-1-750x375-1-300x150.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/nallur-1-1-750x375-1.jpg 750w" sizes="(max-width: 950px) 100vw, 950px" /> <img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-7044" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/nallur-2-1-600x338-1-300x169.jpg" alt="nallur 2 1 600x338 1" width="948" height="531" title="இன்று நல்லூரான் தீர்த்தம் 38"> <img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-7045" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/nallur-3-1-600x338-1-300x169.jpg" alt="nallur 3 1 600x338 1" width="946" height="530" title="இன்று நல்லூரான் தீர்த்தம் 39"> <img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-7047" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/nallur-5-1-600x338-1-300x169.jpg" alt="nallur 5 1 600x338 1" width="944" height="533" title="இன்று நல்லூரான் தீர்த்தம் 40" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/nallur-5-1-600x338-1-300x169.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/nallur-5-1-600x338-1.jpg 600w" sizes="(max-width: 944px) 100vw, 944px" /></p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/today-nalluran-theertham-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
