பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஸ, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்க எதிர்பார்த்துள்ளதாக கடந்த சில காலமாகவே, தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு வெளிவரும் தகவல்களை, ரோஹித்த ராஜபக்ஸ இதுவரை...
இலங்கையில் திருமண நிகழ்வுகளை நடாத்த புதிய கட்டுப்பாடுகளுடன் சுகாதார பிரிவினரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 50 விருந்தினர்களுடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு சுகாதார பிரிவு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய,திருமண நிகழ்வு மண்டபங்களுக்குள்...
பதுளை, லிதமுல்ல பகுதியில் வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
இலங்கையின் சில பகுதிகளில் வானிலிருந்து மர்மப்பொருள் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெஹிஅத்தகண்டிய, கிராதுருகோட்டை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் இவ்வாறு வானிலிருந்து மர்ம பொருள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிலந்தி கூடுகள் போன்ற பொருள் ஒன்று நேற்று காலை...
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார். இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா நான்கு நாள் விஜயமாக நேற்று மாலை இலங்கைக்கு வந்திருந்தார்....
நாட்டில் அதிகரித்துள்ள நிதி மோசடிகளுக்கு தொடர்புடைய அனைத்து நைஜீரிய நாட்டவர்களையும் உடனடியாக நாடு கடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நுகேகொட, மிரிஹான குடிவரவு குடியகல்வு...
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 04ஆம் திகதி முதல் சிறைக்கைதிகளை பார்வையிட முடியும் என றைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று...
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான காலபோக செய்கை சேதனப் பசளையை மாத்திரம் பயன்படுத்தி 20 ஆயிரத்து 882 ஏக்கர் பரப்பரளவில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி...
இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து...
தனது பெயருக்கும் அரசியல் வாழ்க்கைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோருவேன். இவ்வாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அத்துடன் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் தனக்கு தொடர்பு இருக்கிறது என நிரூபிக்கப்பட்டால்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளன எனவும் இதனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளது தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சு நடத்தினர் எனவும் செய்திகள் வெளியாகின. இதனால் சில விடயங்களில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளதாால் இதனை...
பிரான்சில் விலங்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நபர் ஆடு ஒன்றினை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த...
இலங்கையில் ஒரு மணித்தியாலயத்துக்கு 4 புதிய புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர். அத்துடன் இரு மார்பக புற்றுநோயாளர்கள் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதான பத்திரண தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் முதலாம்...
பஹந்துடாவ நீர்வீழ்ச்சி பகுதியில் ஆபாசமாக வீடியோ பதிவு செய்த குற்றச்சாட்டில் தம்பதியர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 10 ஆயிரத்து...
திருகோணமலை கொட்பே கடற்கரை பிரதேசத்தில் மீனவர் ஒருவரின் கரைவலையில் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமாக பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன. இவை 3000 கிலோவுக்கும் அதிகமாக காணப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயா பேபி...
ஜப்பான் கடற்படையின் பெரும் போர்க் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது. ஜப்பான் தற்காப்பு சமுத்திர படையணிக்கு சொந்தமான போர்க்கப்பலே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 151 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பலில் 220 கப்பல்...
சிறுவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள விசேட நீதிமன்றம் உருவாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிறுவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை...
இசை நிகழ்ச்சிகளுக்காக இந்தியா சென்றுள்ள இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா விபத்தொன்றில் காயமடைந்துள்ளார். இதனைத் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் யொஹானி டி சில்வா குறிப்பிட்டுள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது,...
இலங்கைக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது. நேற்றைய தினம் வெளிநாட்டு அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஐரோப்பிய ஒன்றியக் குழு இவ்வாறு தெரிவித்துள்ளது. இதன்போது, இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஆக்கபூர்வமான, நட்பான...
ஜப்பான் கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் இரண்டு இன்று நாட்டை வந்தடையவுள்ளன. முரசாமே மற்றும் காகா (Murasame, Kaga) ஆகிய இரண்டு போர்க்ககப்பல்களே இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுபிக் வலயத்தில் உள்ள ஏனைய...