ஜோதிடம்
இன்றைய ராசிபலன் (16.04.2022)
Medam
தொழில் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் வேகம் காட்டுவீர்கள். கணவன் மனைவியிடையே பிணக்குகள் ஏற்படலாம்.
விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலனை தரும். இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தைரியமாக எந்த காரியத்திலும் இறங்குவீர்கள்
Edapam
பெண்கள் ஆசைப்பட்டது கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் அதிகமாகும்.
படிப்பில் தடைகள் நீங்கி மாணவர்கள் மன நிம்மதி அடைவார்கள். தொழில்துறையில் ஏற்றம் காணும்.
வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாளுவீர்கள். நிலுவையில் உள்ள பணம் கைக்கு வரும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேற்றுமை அகலும்.
Mithunam
குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உடன் வேலை செய்பவரிடம் விவாதம் செய்யாதீர்கள்.
தொழில் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் இருக்கும். உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுக்க பழகுங்கள்.
பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.மாணவர்கள் கவனத்தை சிதற விடாமல் படிப்பில் முனைப்பு காட்ட வேண்டும்.
Kadakam
வியாபாரத்தில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டும். வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகள் கணவன்-மனைவிக்கிடையே நிலவும்.
எதிர்பார்த்தபடி வேலை நடக்காமல் மனம் சங்கடப்படும். விருப்பம் இல்லாத இடத்திற்கு மாற்றம் வரலாம்.
குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். கலைத்துறையில் வீண் செலவுகளை எதிர்கொள்வீர்கள்.
Simmam
அரசாங்கத்தின் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சிறப்பாக ஈடேறும். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள்.
எதிர்பார்த்த இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். பெண்கள் ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவார்கள்.
அலைச்சல் காரணமாக குடும்பத்தில் தாங்க முடியாத நிலை ஏற்படும். மன உறுதியால் வெற்றி காண்பீர்கள்.
Kanni
பயணங்கள் மூலம் நல்ல பலனை அனுபவிப்பீர்கள்.சக ஊழியர்களிடம் சாமர்த்தியமாகப் பேசி வேலை வாங்குவீர்கள்.
கலைத்துறையில் சீரான முன்னேற்றம் கிடைக்கும். கணினி துறையில் உள்ளவர்கள் வளர்ச்சி காண்பீர்கள்.
மற்றவர்களுக்காக ஆடம்பரச் செலவு செய்வீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
Thulaam
பணவரவு அதிகமாகி மனக்கவலை மறையும்.வியாபாரம் விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும் லாபம் குறையாது.
புதிய வேலைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டாலும் சில நேரம் காரியங்கள் தடைபடும்.
பணியாளர்கள் முன்னேற்றமான பலனை பெறுவார்கள். எதிர்பார்த்த இடத்தில் கடன் உதவி கிடைக்கும். பழைய சிக்கல்கள் தீர்வு அதில் தாமதமாகும்.
Viruchchikam
சிலர் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.கூட்டுத்தொழிலில் கவனமும் எச்சரிக்கையும் தேவை.
தொழில்துறை மந்தமாக காணப் படும். வியாபாரம் ஏற்றம் இறக்கமாக நடந்தாலும் லாபம் வரும்.
பெண்கள் பண விஷயத்தில் கவனமாக இருங்கள். மாணவர்கள் பாடங்களை அக்கறையுடன் படிக்க வேண்டும்.
அடுத்தவர்களுக்கு எந்த உத்தரவாதமும் கொடுக்கக்கூடாது.
Thanusu
அரசு அதிகாரிகளிடம் கவனமாக பழக வேண்டும். குடும்பச் செலவுகள் குறையும். வேலையிடத்தில் மன நிம்மதி கிடைக்கும்.
தொழிலில் ஏற்றமான போக்கே காணப்படுகிறது. வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை.
பிள்ளைகளுக்காக அலைச்சல் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் மங்கிப் போகும்.வெளியூர் பயணங்களால் அலைச்சலும் சோர்வும் உண்டாகும்.
Maharam
புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. அரசுப்பணியாளர்கள் வேலையில் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
காவல் துறையில் உள்ளவர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். மனதில் தோன்றும் வீண் ஆசைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
Kumbam
அவசரமாக முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் எதிர்பாராத செலவு உண்டாகும்.
யாரையும் நேருக்குநேர் எதிர்த்து பேசாதீர்கள். அரசு அலுவலகங்களில் பணி அழுத்தம் அதிகரிக்கும்.குடும்ப விஷயத்தில் சரியான முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவார்கள்.
பொருளாதாரம் திருப்தியாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஆகும்.
Meenam
கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். அரசியல்வாதிகளுக்கு டென்ஷன் அதிகரிக்கும்.
வியாபாரம் தொடர்பாக இருந்த இழுபறிகள் இடைஞ்சல்கள் விலகும்.பண வரவு அதிகரிக்கும் மனதில் புது தெம்பும் உற்சாகமும் கொப்பளிக்கும்.
தனியார் துறையில் புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். சாதுரியமான பேச்சால் எடுத்த காரியத்தை சாதிப்பீர்கள்.
You must be logged in to post a comment Login