தொழில்நுட்பம்
ஹேக்கர்களுக்கு சவால் விட்ட ஆப்பிள் நிறுவனம்! 2 மில்லியன் டாலர் வெகுமதிமாம்
![ஹேக்கர்களுக்கு சவால் விட்ட ஆப்பிள் நிறுவனம்! 2 மில்லியன் டாலர் வெகுமதிமாம் 3 109644287 gettyimages 1169966883](https://b3217245.smushcdn.com/3217245/zeepsoza/2022/07/109644287_gettyimages-1169966883.jpg?lossy=2&strip=1&webp=1)
இஸ்ரேலின் NSO குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன் ஹேக் செய்யப்பட்டது.
இதன்பின் பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள் ஆகியோரும் குறிவைக்கப்பட்டனர்.
இதற்காக ஆப்பிள் நிறுவனத்துக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.
தற்போது ஆப்பிள் நிறுவனம் புதிய லாக்டவுன் மோட் iOS 16 வெர்ஷனில் கிடைக்குமாம். இந்த லாக்டவுன் மோட் ஆப்பிளின் ஐபோன்கள், ஐபாட்கள் மற்றும் மேக் கணினிகளில் வேலை செய்யும் என கூறப்படுகிறது.
இந்த அம்சம் மீறி ஆப்பிள் சாதனங்களை ஹேக் செய்வது என்பது முடியாத காரியம் என சொல்லப்படுகிறது.
அப்படி லாக்டவுன் மோடையும் மீறி ஹேக்கர்கள் ஹேக் செய்துவிட்டால், அவர்களுக்கு 2 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.16 கோடியாம்.
#Apple #Iphone
You must be logged in to post a comment Login