இந்திய அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்திய அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி!!

Share

இந்திய அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கும் இடையிலான கலந்துரையாடல் புது டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இடம்பெற்றுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு முயற்சிகளுக்காக இந்திய வெளியுறவுத்துறை பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் குறிப்பாக,
கிழக்கு மாகாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான இணைப்பை அபிவிருத்தி செய்தல், திருகோணமலை கைத்தொழில் பூங்காவில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முன்னுரிமை அளித்தல், கிழக்கு மாகாணத்தில் மின்சாரம் இன்றி வாழும் 15,000 குடும்பங்களுக்கு இந்திய மானியத்தில் சோலார் பேனல்களை ஒதுக்கீடு செய்தல் மற்றும் பெண்கள் தலைமைதாங்கும் 15,0000 குடும்பங்களுக்கு உதவி வழங்குதல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகளை மேம்படுத்துதல்
இதுமட்டுமன்றி கோனாஸ்வரம் கோவிலை அபிவிருத்தி செய்தல், இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய இலங்கை அகதிகளுக்கான வீட்டுவசதி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள், ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், கிழக்கு மாகாணம் மற்றும் தோட்டப் பகுதிகளில் கணினி மற்றும் விஞ்ஞான ஆய்வகத்துடன் கூடிய பாடசாலைகளை மேம்படுத்துதல், சிறிய நோயாளர் காவு வண்டி மூலம் தோட்டத் துறைக்கு சேவையாற்றுதல், மற்றும் மலையகத்தில் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

இந்த கலந்துரையாடல் இரு நாட்டு நட்புறவுகளை மேலும் மேம்படுத்தும் எனவும் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பான பங்களிப்புகளை இந்தியா வழங்கவுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...