4 38
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு! ஏனைய சலுகைகள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம்

Share

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு! ஏனைய சலுகைகள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவத்தினர் சேவையில் இருந்து மீள அழைக்கப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல(Sunil Watagala) தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு விடயங்கள் மீள் பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு சேவையில் இருந்து இராணுவத்தினர் மீள அழைக்கப்பட்டு பொலிஸார் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசியல் பழிவாங்கலுக்காக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்று குறிப்பிடுவது அடிப்படையற்றது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே பாதுகாப்பு பணியில் இருந்த இராணுவத்தினர் சேவையில் இருந்து மீள அழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என அரசியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் முறையான காரணிகளைக் குறிப்பிட வேண்டும்.

ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் இதர சலுகைகள் குறித்து எதிர்வரும் வாரமளவில் உறுதியான தீர்மானம் எடுக்கப்படும்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆறு மாத காலத்திற்கு ஒருமுறை மீள் பரிசீலனை செய்யப்படும். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்குப் போதுமான அளவில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...