tamilni 47 scaled
சினிமாசெய்திகள்

சூர்யா ஜாதகத்தைப் பார்த்து ஜோதிடர் சொன்ன சீக்ரெட்! உண்மையை உடைத்த சிவகுமார்

Share

சூர்யா ஜாதகத்தைப் பார்த்து ஜோதிடர் சொன்ன சீக்ரெட்! உண்மையை உடைத்த சிவகுமார்

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்பவர் தான் சிவகுமார். அவருடைய பிள்ளைகளான சூர்யா, கார்த்திக் ஆகியோரும் முன்னணி நடிகர்களாக காணப்படுகின்றனர்.

அந்த காலத்தில் நடிகர் சிவகுமார் தனது நடிப்பாற்றலால் கதாநாயகிகளின் முன்னனி ஹீரோவாகவும், பெண்களின் மனம் கவர்ந்த நடிகராகவும் விளங்கியவர். நடிப்பு மட்டுமல்லாது ஓவியம், சொற்பொழிவு, இலக்கியம் என பல துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்தவர்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிவகுமார், தனது மகனும், நடிகருமான சூர்யாவின் சினிமா வாழ்க்கைப் பற்றி சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், சூர்யா 1991-ம் வருடங்களில் சென்னை லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது இவரின் ஜாதகத்தையும், கார்த்தியின் ஜாகத்தையும் சிவக்குமார் பிரபல ஜோதிடர் ஒருவரிடம் தனது மகன்களின் எதிர்காலம் குறித்து கேட்டறிந்திருக்கிறார்.

சூர்யாவின் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர், இவர் பிற்காலத்தில் உங்களைப் போன்று திரைத்துறையில் அடியெடுத்து வைப்பார். மேலும் பல விருதுகளையும் வாங்கிக் குவிப்பார். உங்களை விட அதிக, பணமும் புகழும் சேர்ப்பார் என்று கூறியிருக்கிறார்.

மேலும் காதல் திருமணம் தான் செய்வார் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் சிவக்குமாருக்கு இதில் சந்தேகம். ஏனெனில் 10 வயது வரை சரியாகப் பேசத் தெரியாத சூர்யா பின்னாளில் எப்படி நடிகராக வருவார் என்று யோசித்திருக்கிறார்.

ஆனால் ஜோதிடர் சொன்னது போலவே சூர்யா இயக்குநர் வஸந்த் எடுத்த நேருக்கு நேர் படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்து பின்னர் படிபடியாக முன்னனி நட்சத்திரமாக மாறினார்.

மேலும் மாயாவி படத்தின் போது நடிகை ஜோதிகா மீது காதல் வயப்பட்டு பின்னர் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணமும் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று அந்த ஜோதிடர் சொன்னது போல் இன்று அவ்வாறே நடந்திருப்பதை சிவக்குமார் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...