ஆன்மீகம்
மகாலட்சுமிக்கு விரதம் – எப்படி வழிபடலாம்?
செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி. அந்த மகாலட்சுமிதேவியின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டால்தான் நமக்கு செல்வம் கிடைக்கும்.
அந்தவகையில் ஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சப்தமி வரை உள்ள நாட்கள் (4 திகதி முதல் 17 திகதி வரை) மகாலட்சுமி வழிபாட்டுக்கு உரிய நாட்களாகும்.
இந்த நாளில் மகாலட்சுமியை வழிபட்டால் சிறந்தது.
எப்படி வழிபடலாம்?
இந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் ஸ்ரீமகாலட்சுமியை ஸ்ரீஸூக்தம் கனகதாரா ஸ்தவம் போன்றவற்றால் ஸ்தோத்ரம் செய்து வழிபட வேண்டும்.
மல்லிகை, முல்லை புஷ்பங்களால் ஸ்ரீலட்சுமி அஷ்டோத்தரம் முதலிவைகளால் அர்ச்சித்து கொள்ள வேண்டும்.
இப்படி நமஸ்கரித்து பிரார்த்திப்பதால் குடும்பத்தில் ஏழ்மை விலகும். செல்வங்கள் அனைத்தும் நிரந்தரமாக தங்கி இருக்கும்.
You must be logged in to post a comment Login